search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Film industry"

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது என்றும் அப்படி கனவு காண்பவர்களுக்கு தன்னுடைய அனுதாபங்களை தெரிவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #NajilSampath
    திருவாரூர்:

    திருவாரூரில் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.டி.வி.தினகரன் அணியில் நான் இணைய போவதாக வந்துள்ள தகவல் பொய்யானது. அரசியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டேன். இனி எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அழகிரி தி.மு.க.வின் தென் மண்டல செயலாளராக பணியாற்றி உள்ளார். தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்து பெயர் சொல்லி அழைக்க கூடியவராக இருந்துள்ளார். எனவே கட்சியில் அழகிரியை இணைத்தால் தி.மு.க. வலுப்பெறும் அந்த முடிவு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது.

    தமிழகத்தில் அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் புதைந்து கிடக்கிறது. இதனை தடுத்தாக வேண்டும் என்பதை விட இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அதை யார் செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    விஷால் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கியிருப்பது இடைத்தேர்தலில் வெட்ட வெளிச்சமாகி விடும். திரையுலகத்தினர் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. திரையுலகை சேர்ந்தவர்கள், தமிழக அரசியலில் காலூன்ற முடியாது. அப்படி கனவு காண்பவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்றார்.

    நடிகர்கள் கட்சி தொடங்குவதால் திராவிட கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காடு, நிலம், காற்று, நீர் இருக்கும் வரை திராவிடம் இருக்கும். வேறு எந்த இயக்கத்திற்கும் இங்கு இடம் இல்லை என்றார். #NajilSampath
    தனது 30 ஆண்டுகள் சினிமா பயணத்தை நிறைவு செய்த அமீர்கான், தனது முதல் படமான ’கயாமாத் சே கயாமத் டக்’ படக்குழுவினருடன், டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். #AamirKhan
    இந்தி திரையுலகில் அமீர்கான் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் கொண்ட நடிகர். இவர், இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தவர்.

    இந்நிலையில், நடிகர் அமீர்கான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அவரது முதல் படமான  ‘கயாமாத் சே கயாமத் டக்’ திரைப்படத்தை மீண்டும் திரையிடும் நிகழ்ச்சி படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கான், நிகழ்ச்சிக்கு டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்திருந்தார்.



    அவரது முதல் படத்தின் வெற்றிக்கு டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதை நினைவு கூர்ந்தே அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் உரையாடிய அமீர்கான், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அமீர்கானின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்துள்ளார். #Aamir Khan
    ×