என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீர்கான்"

    • அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

    அமீர் கான் சமீபத்தில் பாலிவுட்டில் சித்தாரே ஜமீன் பர் மற்றும் தமிழில் கூலி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் மீது அவரது சகோதரர், நடிகர் ஃபைசல் கான் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலால் மீண்டும் சர்ச்சை உருவாக்கியுள்ளன. இன்று மும்பையில் நடைபெற்ற புகைப்பட அறிக்கை நிகழ்ச்சியில் ஃபைசல், அமீர் மீது பலம் மிகுந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    ஃபைசல் கான் தெரிவித்ததாவது, அமீர் தனது முதல் மனைவி ரீனா தட்டாவுடன் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஜெஸிக்கா ஹைன்ஸ் உடன் உறவு கொண்டார். இந்த உறவில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்து உள்ளதாகவும் அவர் முன்வைத்தார்.


     



    யார் இந்த ஜெஸிகா ஹைன்ஸ்?

    ஜெஸிகா ஹைன்ஸ் ஒரு பிரிட்டிஷ் பத்திரைக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவருக்கும் இந்தி திரைத்துறைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. இவர் நடிகர் அமிதாப் பச்சனின் ஆவணப்படத்தில் பணியாற்ற இந்தியா வந்தார். அமீர் கான் மற்றும் ஜெஸிக்கா இருவரும் 2005 ஆம் ஆண்டு குலாம் திரைப்பட படப்பிடிப்பின் போது சந்தித்ததாக கூறப்படுகிறது.

    அப்பொழுது இவர்கள் இருவருக்கும் உறவு ஏற்பட்டு அதனால் ஜெஸிக்கா கர்ப்பமானாள், அந்த கருவை அமீர்கான் கலைக்க சொன்னதாகவும் ஆனால் ஜெஸிக்கா அதனை மறுத்து  2000 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அவருக்கு ஜான் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு ஜெஸிக்கா லண்டனை சேர்ந்த தொழிலதிபர் வில்லியமை திருமணம் செய்துக் கொண்டார்.

    சமீபத்தில் ஜானின் புகைப்படம் ஒரு புகழ் பெற்ற பத்திரைக்கையில் வந்தது, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தற்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அமீர்கான் தரப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் ஃபைசல் கான் கூறுவது வன்மம் நிறைந்துள்ளதாக இருக்கிறது. அதில் எதும் உண்மைதன்மை இல்லை என பதிலளித்துள்ளனர்.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

    படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    • எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வெளியே போகவேண்டியதுதான்.
    • புதிய நீர் வரும்போது பழைய நீரை அடித்துச்சென்று விடும்.

    இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அமீர்கான் 'நடிகர், நடிகைகளின் நட்சத்திர அந்தஸ்து நிரந்தரமானது அல்ல' என்று தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'இயற்கை சக்கரம் நிரந்தரமாக சுற்றிக்கொண்டே இருக்கும். புதிய நடிகர்கள் உருவாவார்கள். பழையவர் மறைந்து விடுவார்கள். நட்சத்திர ஒளி என்பது நிரந்தரம் அற்றது. சில ஒளிகள் அதிக காலம் நீடித்து இருக்கும். சில ஒளிகள் மிகக் குறைந்த காலமே இருக்கும். ஆனால் மறைவது மட்டும் உறுதி.

    ஒவ்வொரு தலைமுறையிலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். எங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்ததால் நாங்கள் இரண்டு தலைமுறை ரசிகர்களை பார்த்தோம். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் வெளியே போகவேண்டியதுதான். இது தவிர்க்க முடியாதது. புதிய நீர் வரும்போது பழைய நீரை அடித்துச்சென்று விடும். அது இயற்கையின் நியதி'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கவிருந்த சாம்பியன்ஸ் திரைப்படத்தில் வேறு நடிகரை தேர்வு முடிவு செய்துள்ளார்.

    பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.

     

    அமீர்கான்

    அமீர்கான்

    இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.

     

    அமீர்கான்

    அமீர்கான்

    நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார்.
    • இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.


    நரேந்திர மோடி

    இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அமீர்கான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தேசத்தின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளை பற்றி விவாதிப்பது. ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    • நடிகர் அமீர்கான் தற்காலிகமாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
    • இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். மேலும் இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    தாயாருடன் அமீர்கான்

    அதாவது, கடந்த ஆண்டு அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

    அதனால் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் நடிகர் அமீர்கானை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தி'ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.


    எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்… என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டணி மிரட்டியது 'thug life'-ல்!" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
    • அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.


    இந்நிலையில், நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை அஜித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்" என பதிவிட்டுள்ளார்.


    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    • சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.


    சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.

    இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது.
    • இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் .

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் 1999 -ல் வெளியான படம் 'சர்பரோஸ்'. இந்த படத்தை இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் இயக்கினார். இதில் கதாநாயகி சோனாலி பிந்த்ரே, நஸ்ருதீன் ஷா, முகேஷ் ரிஷி, பிரதீப் ராவத் நடித்திருந்தனர்.



    இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படம் தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.



    இதனை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு தியேட்டரில் இப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் அமீர்கான்,ஜான் மேத்யூ, மாத்தான், நசிருதீன்ஷா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இப்படம் குறித்து பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது அமீர்கான் பேசியதாவது:-


    இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. இப்போது எனக்கு வயது அதிகமாகி விட்டதாக தெரியவில்லை.

    இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
    • இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

    சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
    • இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

    மும்பை:

    பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

    ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.

    இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×