search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பாராட்டிய அமீர்கான்
    X

    நரேந்திர மோடி -அமீர்கான்

    பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பாராட்டிய அமீர்கான்

    • பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார்.
    • இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.


    நரேந்திர மோடி

    இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அமீர்கான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தேசத்தின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளை பற்றி விவாதிப்பது. ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    Next Story
    ×