என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi film"

    • இந்தியா எப்போதுமே என் வீடு, என் ஆசான்.
    • யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.

    இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.

    அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.

    கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், "இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே என் வீடு, என் ஆசான். இசை மீதான அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவுக்கு நான் மிகவும் நன்றிகடன் பட்டுள்ளேன்

    சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என் நோக்கமாக இருந்து வருகிறது. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. என் எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்கிறார்.
    • ப்ரீத்தி சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் வரலாற்று இந்தி திரைப்படம் ''லாகூர், 1947 '.சன்னி தியோல், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் அமீர் கான் ஆகிய மூவரும் இந்தப் படத்திற்காக முதன்முறையாக இணைந்துள்ளனர்.

    ,நீண்ட நாட்களுக்குப் பிறகு சன்னி தியோல் - ப்ரீத்தி ஜிந்தா ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இருவரும் போர்ஸ், தி ஹீரோ , பையாஜி சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர் .



    இந்த படத்தில் நடிப்பது தொடர்பான புகைப்படங்களை ப்ரித்தி ஜிந்தா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    படப்பிடிப்பு செட்களில் இருந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். படத்தின் 'கிளாப் போர்டு' அதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியுடன் செல்பி எடுத்த படம் அவர் வெளியிட்டுள்ளார்.



    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 12-ந் தேதி தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ரீத்தி ஜிந்தா மீண்டும் வெள்ளித்திரையில் இப்படத்தின் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ப்ரீத்தி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இப்படத்தில் மேலும் மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இப்படம் மக்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது.
    • இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் .

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் 1999 -ல் வெளியான படம் 'சர்பரோஸ்'. இந்த படத்தை இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் இயக்கினார். இதில் கதாநாயகி சோனாலி பிந்த்ரே, நஸ்ருதீன் ஷா, முகேஷ் ரிஷி, பிரதீப் ராவத் நடித்திருந்தனர்.



    இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படம் தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.



    இதனை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு தியேட்டரில் இப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் அமீர்கான்,ஜான் மேத்யூ, மாத்தான், நசிருதீன்ஷா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இப்படம் குறித்து பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது அமீர்கான் பேசியதாவது:-


    இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. இப்போது எனக்கு வயது அதிகமாகி விட்டதாக தெரியவில்லை.

    இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×