என் மலர்
நீங்கள் தேடியது "Dangal"
- 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.
- மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்.
அமீர் கான் நடிப்பில் கடந்த 2016 இல் வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் தங்கல். பஞ்சாபில் சமூக கண்ணோட்டங்களை எதிர்த்து தனது 2 மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கிய தந்தையின் உண்மை கதையை தழுவி இப்படம் அமைந்தது.
இதில் அமீர் கானின் இளைய மகளாக ஜைரா வாசிம் நடித்தார். நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜைரா வாசிம். மல்யுத்த வீராங்கனை கீதா போகத் வேடத்தில் 16 வயதில் அவர் வழங்கிய நடிப்புப்பாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை ஜைரா வென்றார்.

இதன் பின் 2017 ஆம் ஆண்டு வெளியான அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்திலும் ஜைரா நடித்தார்.
மத காரணங்களுக்காக நடிப்பதை விட்டுவிடுவதாக ஜைரா வாசிம் 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, ஜைரா தனது மத நம்பிக்கை பற்றிய செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 24 வயதாகும் ஜைரா தனது நிகாஹ் (திருமணம்) பற்றிய செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் தனது மற்றும் மணமகனின் முகம் தெரியாத புகைப்படத்தை ஜைரா பகிர்ந்துகொண்டு திருமணம் நடைபெற்று முடிந்ததை அறிவித்துள்ளார்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.
இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் டங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.
இதனால், டங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, "எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.
பபிதா போகத் காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 55 கிலோ எடைப் பிரிவில் 2010-ல் வெள்ளியும் 2014ல் தங்கமும் வென்றுள்ளார். இவரது அக்கா கீதா போகத்திற்கு பிறகு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது.
- சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா?
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் மகாராஜா திரைப்படம் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் வெளியான டங்கல் திரைப்படம் 1300 கோடி வசூலை வாரி குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அத்திரைப்படம் 2000 கோடி வசூலை கடந்தது.
இந்நிலையில் சீனாவில் டங்கல் திரைப்படம் நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர்.
- அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்தது
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50 வது படம் ஆகும்.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் 40,000 திரைகளில் நேற்று முன்தினம் [நவம்பர் 29] வெளியாகியுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.
இந்நிலையில் முதல் நாள் வசூலாக மகாராஜா ரூ. 5 கோடி எட்டியுள்ளது. சிறப்பு திரையிடலுடன் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் ஆகியுள்ளது.

அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்து நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எழுத்துள்ளது.







