என் மலர்
நீங்கள் தேடியது "திரையுலகம்"
- ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லை.
- சென்னையில் பல இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடக்கிறது.
போதைப்பொருள் வழக்கில் முன்னணி நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னணி நடிகர் - நடிகைகள் பலரும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்களாம்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் கொகைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பகீர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சுசித்ரா மேலும் கூறும்போது, "ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தாண்டி தமிழ் சினிமாவில் பலரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். சினிமாவை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் யாருமே ரத்த பரிசோதனைக்கு முன்வர மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லை.
வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம், போதைப்பொருள் கலாசாரம் தமிழ் சினிமாவுக்குள் வந்துவிட்டது. பப்புகள், ஓட்டல்கள் என சென்னையில் பல இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடக்கிறது. மது விருந்துகளில் நடிகர்-நடிகைகள் சர்வ சாதாரணமாக கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. கொகைன் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கும் வந்தது. ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன்", என்றார்.
சுசித்ராவின் இந்த கருத்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
- நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.
கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.






