search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandi"

    • கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்- கங்கனா.
    • தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் பதில்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா கடந்த 24-ந்தேதி வெளியிட்டது. இதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

    5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் நடிகர், நடிகைகள், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்ப வழங்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தது.

    இதற்கிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்த பதிவு கங்கனா ரனாவத்தை இழிவு படுத்தும் வகையில் இருந்ததால் பலரும் சுப்ரியா ஸ்ரீனேட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், கங்கனா ரனாவத் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

    குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாகவும், தாக்கட் படத்தில் மயக்கும் உளவாளியாகவும், மணிகர்ணிகாவில் ஒரு தெய்வப் பெண்ணாகவும், சந்திரமுகியில் ஒரு பேயாகவும், ராஜ்ஜோவில் விலைமாதுவாகவும், தலைவியில் புரட்சிகரமான பெண்ணாகவும் நடித்துள்ளேன்.

    கட்டுப்பாடுகளில் இருந்து நமது மகள்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வத்தை தவிர்த்துவிட்டு உயர வேண்டும். அனைத்திற்கும் மேலாக பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்கும் கண்ணியம் உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கங்கனா விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், தனது 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும், அதில் யாரோ ஒருவர் மோசமான பதிவை வெளியிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    இது குறித்து தனது கவனத்திற்கு வந்த உடனேயே அந்த பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள அவர், பெண்களைப் பற்றி அந்தரங்கமான முறையில் விமர்சிக்கும் பழக்கம் தனக்கு கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் "இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். பெண்களை இழிவுப்படுத்துவம் காங்கிரஸ் பழக்கமாகியுள்ளது. ஒட்டுமொத்த மண்டி மற்றும் இமாச்சல பிரதேசம் கோபத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி அதற்கு விலை கொடுத்தாக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×