search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brother"

    • இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார்.
    • இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். மக்காமிஷி என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, ஸ்வாக் என்று அர்த்தம். இப்பாடம் ஒரு ஜாலியான வைப் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    பால் டப்பாவின் வரிகளும், குரலும் அதற்கு ஜெயம் ரவி நடனம் ஆடுவது என புதுவிதமாக அமைந்துள்ளது.

    பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.

    தற்போது பிரதர் படக்குழு வெளியிட்டுள்ள தகவல்களில் மக்காமிஷி படத்தின் முதல் பாடல் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்துடன் இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

    'சைரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி பல சுவாரசிய கதையம்சம் கொண்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார். இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'பிரதர்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

    'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை நேற்று வெளியிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் 'பிரதமர்' படத்தை செப்டம்பர் 27-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
    • படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    தற்பொழுது படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் வாட் இஸ் மக்காமிஷி? என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
    • ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை நாளை காலை 11:11 மணிக்கு வெளியிடப்போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள்  நடைப்பெற்று வருகிறது.

     பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது. அதை வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
    • கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்

    பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான பாலியல் விழுப்புணர்வான குட் டச் பேட் டச் பயிற்சியின்மூலம் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த குட் டச் பேட் டச் விழுப்புணவர்வின்போது அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தான் தனது தந்தையாலும், ஒன்றுவிட்ட சகோதரனாலும், உறவினறாலும் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.உடனே இதுகுறித்து போலீசிடம் தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியின் தந்தையும், ஒன்றிவிட்ட சகோதரனும், உறவுக்கார அங்கிள்- உம் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.

    துன்புறுத்தலின்போது கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
    • சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
    • 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.

    'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

     

    'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜிவி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    • பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் கைவரிசை
    • வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரும் சிக்கினர்

    கோவை,

    கோவை கணபதி தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது30). இவர் சங்கனூர் பகுதியில் பேக்கரி மற்றும் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி பிரேம்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார்.

    பின்னர் மறுநாள் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தது பிரேம்குமாரின் சித்தப்பா மகன் மரிய அமிர்தம் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    பிரேம்குமார் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்ற மரிய அமிர்தம் தொழில் முறையிலான கொள்ளையர்கள் திருடுவது போன்று வீட்டு பீரோவில் இருந்த உடைமைகளை களைத்து போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சொந்தமாக தொழில் செய்து வரும் மரிய அமிர்தம் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். எனவே அவர் அதனை ஈடு செய்யும் வகையில் தனது சொந்த பெரியப்பா மகன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் கணபதி வ.உ.சி. நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசூப் (47) என்பவர்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து காரமடையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்துள்ளோம்.

    கோவையில் நகை கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு செல்ல வேண்டும்.

    இதனால் ரோந்து பணியில் போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பதன் மூலம் கொள்ளை சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் வீட்டை பூட்டும் போது வெளிப்பக்கமாக பூட்டு தெரியும் படி பூட்டாமல் உள்பக்கமாக பூட்ட வேண்டும். பூட்டு வெளியே தெரிந்தால் அது வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு கொள்ளையர்கள் கண்களை உறுத்தும். எனவே கொள்ளை சம்பவங்களை குறைக்க மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அவருடன் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் செல்வி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.  

    மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று 17 வயது சிறுவளை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை முனிசிபல் காலனி கல்யாண் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன். இவருக்கும் மேல் அலங்கத்தைசேர்ந்த சரத்குமார் (28), அவரது தம்பி மதன்குமார்(22) மற்றும் கிரிதரன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சிறுவன் தஞ்சை மேலவீதி அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். 

    அப்போது அங்கு வந்த சரத்குமார் உள்ளிட்ட 3 பேரும் சிறுவனை தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தூக்கினர்.
    பின்னர் சிறிய தூரம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவாறே சிறுவனை சரமாரியாக தாக்கி விட்டு தள்ளி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரி ன்பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார், அவரது தம்பி மதன் குமாரை கைது செய்தனர். கிரிதரனை தேடி வருகின்றனர்.

    ×