search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relative"

    • நரிக்குடி அருகே இளம்பெண் கற்பழிப்பு சம்பவத்தில் உறவினர் கைதானார்.
    • தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள இசலி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இவருக்கும் அக்காள் கணவரின் சகோதரர் சோனை(எ) சிவசக்தி(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை சிவசக்தி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசக்தி யிடம் அந்த பெண் கூறினார்.

    ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிவசக்தி கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியை கைது செய்தனர்.

    • பெண்ணின் தந்தை தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்ததால் விசாரணைக்கு போலீசார் விடுவித்தனர்.
    • போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). கூலித் தொழிலாளி. இவரும் செட்டிப்பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு பிரசாந்த் தனது காதலிக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்வதற்காக தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

    குடிபோதையில் இருந்த அவர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். அப்போது பிரசாந்த் தனது காதலியின் பெயரை கூறி வெளியே வருமாறு அழைத்தார்.

    இந்த சத்தம் கேட்டு பெண்ணின் தந்தை மகாதேவன், தாய் மாமா விக்னேஷ் ஆகியோர் வெளியே வந்தனர். அப்போது பிரசாந்த் அவர்களிடம் பிறந்த நாள் கொண்டாட தனது காதலியை வெளியே அனுப்புமாறு கூறி தகராறு செய்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை வெட்டினார். இதில் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விக்னேஷ், பிரசாந்தை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விக்னேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் தந்தை மகாதேவன், பிரசாந்தை கட்டையால் தாக்கியதாக அவருடன் சென்ற நண்பர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மகாதேவனையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தகராறை விலக்கிவிடவே சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகாதேவனை விசாரணைக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர்.

    • 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும்
    • அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும்.

    இங்குள்ள 4 மற்றும் 5 ஆகிய வார்டுகள் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கட்டடம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில் இருந்து முதற்கட்ட உள்நோயாளியாக இந்த 2 வார்டுகளில் தான் அனுமதிக்கப்படுவார்கள். 4-வது வார்டு பெண் நோயாளிகளும், 5-வது வார்டு ஆண் நோயாளிகளும் அனுமதிக்கப்படுவர். பின்னர் நோய் தன்மைக்கு ஏற்ப பிற வார்டுகளுக்கு மாற்றப்படுவார்கள்.

    இந்நிலையில் இன்று இந்த 2 வார்டை ஒட்டியுள்ள வராண்டா பகுதியில் நோயாளிகளின் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

    அப்போது திடீரென மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழ தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அங்கு கூடியிருந்த உறவினர்கள் வேக வேகமாக வெளியேறினர்.

    இருந்தாலும் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததில் தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கார்த்திக், பாபநாசத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்தனர் .

    இவர்கள் இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் .

    இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
    • இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

    அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

    • சேலத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவியின் தாய் ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாணவி தூக்குபோட்டு கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி ரம்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகள் சிந்துஜா (வயது 17).

    இவர் பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தட்டச்சு கற்று வந்தார். சிந்துஜாவின் தாய் நேற்று ஓமலூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்றிருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சிந்துஜா திடீரென நேற்று இரவு சேலையை கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலின் பெயரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவத்திற்கு சென்று சிந்துஜாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிந்துஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ? என்பது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அருகே உள்ள உஷார்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 28). இவர் பந்தல்குடி பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அந்த வழியாக வந்த தங்கவேல் பாண்டி என்பவர் ஜெயலட்சுமியிடம் , அவரது ஊர் வழியாக செல்வதாக கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    இதுபற்றி அறிந்த ஜெயலட்சுமின் கணவர் மணிகண்டன், தங்கவேல் பாண்டியனிடம் நீ எப்படி எனக்கு மனைவியை மூட்டைகளை அழைப்பு வரலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரைத் தாக்கி தகராறு செய்துள்ளனர் .அதனை தட்டிக் கேட்ட உறவினர்களையும் தாக்கியுள்ளனர்.இதுபற்றி ஜெயலட்சுமி இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தங்கவேல் பாண்டியன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை செல்வபுரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளியை உறவினர் அடித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்தவர் மைதீன் பாதுசா (வயது 33). கூலித் தொழிலாளி.

    நேற்று இரவு இவர் குடிபோதையில் செல்வபுரம் தில்லை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த உறவினரான சுல்தான் பாதுசா என்பவர், மைதீன் பாதுசாவிடம் மது குடித்து விட்டு இங்கு வரக்கூடாது என கூறினார்.இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த சுல்தான் பாதுசா அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியால் மைதீன் பாதுசாவை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் மயங்கிய மைதீன் பாதுசா சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுல்தான் பாதுசா அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து மைதீன் பாதுசாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான சுல்தான் பாதுசாவை தேடி வருகிறார்கள். #tamilnews

    கூடலூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா (வயது 15). முருகன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய முருகன் வீட்டில் அனிதா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அனிதா ஏதும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினருக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது47). இவர் சம்பவத்தன்று இரவு திருமங்கலம்-சோழவந்தான் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வாகைகுளம் சந்திப்பில் உறவினர் ரமேஷ் (32) மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    முத்து அவர்களை சமரசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது தந்தை செல்வராஜ் (67) ஆகியோர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதுதொடர்பாக திருமங்கலம் டவுன் போலீ சில் முத்து புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    அறந்தாங்கி அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை உறவினர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குருந்திரக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கும் ஊட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கங்காதரன் இறந்து விட்டார். இதையடுத்து தனது மகளுடன் சொந்த ஊரான குருந்திரக்கோட்டை கிராமத்திற்கு வந்த ஜோதிலட்சுமி அங்கு தனது தந்தையுடன் வசித்து வந்தார். ஜோதிலட்சுமியின் மகள் ராஜேந்திரபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே ஜோதிலட்சுமியின் கணவர் வழி உறவினரான ரமணி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி காலை தாயிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்ற ஜோதிலட்சுமியின் மகள் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்ததும் எந்தவித தகவலும் இல்லை. பின்னர் பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அவரது உறவினர் ஒருவர் வந்து அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கடத்தியதாக புகார் அளித்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரமணிக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மகள் முறை கொண்ட அவர் எதற்காக  மாணவியை  கடத்தினார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×