search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayam Ravi"

    • சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா.
    • நடிகர் ஜெயம் ரவி, ராஜா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவர் ராஜா(30). இவர் சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, நம் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

     

    தனது ரசிகரின் திடீர் மரணத்தை அறிந்த நடிகர் ஜெயம் ரவி, ரசிகரின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும் அவரது குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் தான் செய்து தருவதாக நடிகர் ஜெயம் ரவி உறுதியளித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
    • நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு

    விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி, சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.




    இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.
    • இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.




    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், இப்போது மீண்டும் பட யூனிட்டில் இணைந்துள்ளனர்.

    இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.




    இப்படத்தின் படப்பிடிப்பு தேர்தல் . வாக்கு பதிவு முடிந்த பின் விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
    • இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.




    இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. இதையொட்டி கமல் ரசிகர்கள் இணைய தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்

    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தி நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ,ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது. அதை தொடர்ந்து சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசியது.

    இந்நிலையில் ஜெயம்ரவிக்கு பதிலாக நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் அருண் விஜய் கையெழுத்திட உள்ளார்.

    தற்போது அருண்விஜய் பாலாவின் 'வணங்கான்' படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து 'தக் லைப்' படத்தில் கமல்ஹாசனுடன் விரைவில் அவர் நடிக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் ஜெயம் ரவி தனது பிஸியான ஷெட்யூல் மற்றும் தேதி சிக்கல்கள் காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது
    • தற்போது ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகிய சம்பவம் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, ஜெயம் ரவி, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி கமல் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.இப்படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.




     

    இந்நிலையில், செர்பியாவில் 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகின.

    இந்தபடத்தில் நடிகர்கமல் தற்காப்பு கலைதிறன்களை வெளிப்படுத்துகிறார்,பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளன.

    இந்நிலையில் பாலிவுட் நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து கடந்த மாதம் விலகினார். அதை தொடர்ந்துதற்போது, நடிகர் ஜெயம் ரவியும் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன .

    நடிகர் ஜெயம் ரவி தனது பிஸியான ஷெட்யூல் மற்றும் தேதி சிக்கல்கள் காரணமாக 'தக் லைப்' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.ஏற்கனவே துல்கர், தற்போது ஜெயம் ரவி ஆகியோர் இப்படத்தில் இருந்து விலகிய சம்பவம் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.
    • ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வலை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று அந்த பதிவின் மூலம் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.




    • மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
    • இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி,நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளிவந்த படம் "தனி ஒருவன்".

    இப்படம்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அரவிந்த சாமிக்கும், ஜெயம் ரவிக்கும் இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிக பெரிய ஹிட் ஆனது.

    இப்படம் தெலுங்கு,கன்னடம் மொழியிலும் ரீமேக் செய்தார்கள்.2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைபடங்களில் மிக பெரிய வசூல் செய்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டு முடிந்த நிலையில் மோகன்ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியிட போவதாக  வீடியோவை வெளியிட்டு அறிவித்தார்..இந்நிலையில் இப்படத்திற்கு 2015 தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதில் சிறந்த கதையாசியருக்கான விருது மோகன் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முத்தமிழ் மன்றத்தில் நடைப்பெற்று வரும் விழாவில் மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சுவாமிநாதன் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மோகன் ராஜாவுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். .

    • கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்த இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது. 
    • படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு கலைத்திறன்களை வெளிப்படுத்துகிறார்.

    பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் 36 ஆண்டு இடைவெளிக்குப்பின், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'தக் லைப்' என்ற புதிய ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்த இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் 5 நாட்கள் நடந்தது.  இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, ஒரு பேட்டியின் போது இந்த படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மணிரத்னம் சார் எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தர அழைக்கும் போது அது எந்த படமாக இருந்தாலும் 'நோ' சொல்ல முடியாது. அதனால் இந்த படத்தில் நடிக்கிறேன். 'தக் லைப்' படத்தில் நான் கேமியோ ரோலில் நடிக்கிறேன். எனது காட்சி தொடர்பான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ஐரோப்பிய செர்பியா நாட்டில் விரைவில் நடைபெற உள்ள இதன் படப்பிடிப்பில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு கலைத்திறன்களை வெளிப்படுத்துகிறார். பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைய இருக்கின்றன.

    • எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம்.
    • இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்.

    ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி இருக்கும் படம் சைரன். அடுத்த வாரம் ரிலீசாக இருக்கும் சைரன் படத்தின் விளம்பர பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இது தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, "மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீசுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்த படமும் கண்டிப்பாக வெற்றியடையும்."

    "ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜி.வி. பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒப்புக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருத்தர் ஜி.வி. பிரகாஷ்," என்று தெரிவித்தார்.

    இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். 

    • கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
    • 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.

    'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

     

    'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜிவி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    • ஜெயம் ரவியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
    • ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.

    ஜெயம் ரவிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை துள்ளலுடன் ரொமான்ஸ் பார்வையிலும் நடித்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. 'சைரன்' படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    • ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’.
    • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


    இந்நிலையில், 'இறைவன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'தப்பு பண்ணும் போது ஆண்டவன் பாத்துப்பானு விட்டுபோற அளவுக்கு பொறும இல்ல' போன்ற வசனங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், 'இறைவன்' டிரைலர் ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





    ×