என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி பாலக்கரையில் தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்
திருச்சி:
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவரது மனைவி அனிதா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.
நேற்று முன்தினம் அனிதா, தென்னூர் காவல்காரன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அனிதா தொடர்பாக எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது குறித்து அவர் தில்லைநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது யாராது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா? என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.
அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் பட்டியலை போலீசார் திரட்டி உள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்