search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 93.97 சதவீதம் தேர்ச்சி
    X

    தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 93.97 சதவீதம் தேர்ச்சி

    தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 93.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தேனி:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு அரசு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 7,039 மாணவர்களும், 7414 மாணவிகளும் என மொத்தம் 14453 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

    இதில் 6466 மாணவர்களும், 7116 மாணவிகளும் என மொத்தம் 13582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.06 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 138 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 12 அரசு பள்ளிகளும், 28 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    Next Story
    ×