search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni district"

    • தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது.
    • ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு கூட்டம் தலைவர் கோவிசெழியன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் அய்யப்பன், கார்த்திகேயன், பாபு, பொன்னுச்சாமி, முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சரவணக்குமார், மகாராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழுவின் தலைவர் பேசியதாவது,

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பதில் அளிக்கும்போது மனுக்களு க்கான பதில்களை சட்டமன்ற பேரவை செய்தியாளர்கள் பதிவு செய்வார்கள். கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் அடிப்படையில் அறிக்கை யாக தயார் செய்யப்பட்டு பேரவையின் முன் தாக்கல் செய்யப்படும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 27.7.2010-ம் தேதியன்று குழு ஆய்வு மேற்கொண்டு 2011-ம் ஆண்டு 14-வது பேரவையில் மனுக்கள் குழுவினரால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 15 மனுக்கள் மற்றும் 2013-ம் ஆண்டு அளிக்கப்பட்ட 12 மனுக்கள் என மொத்தம் 25 மனுக்கள் மீது மறுஆய்வு மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யப்பட்டது.

    ஆய்வுகூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 93.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தேனி:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு அரசு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 7,039 மாணவர்களும், 7414 மாணவிகளும் என மொத்தம் 14453 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

    இதில் 6466 மாணவர்களும், 7116 மாணவிகளும் என மொத்தம் 13582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.06 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 138 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 12 அரசு பள்ளிகளும், 28 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    தேனி மாவட்டத்தில் நாளை மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மூட உத்தரவிடப்பட்டுள்ளது. #TNtasmac
    தேனி:

    தமிழக அரசு மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகள் நாளை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகளுக்கு நாளை (புதன்கிழமை) மே தினத்தை முன்னிட்டு கட்டாயம் மதுபான கடைகளை மூடப்பட வேண்டும்.

    அந்த நாளில் மதுபான விற்பனைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் மதுபானம் தொடர்பான விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்மந்தப்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #TNtasmac
    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேனி மாவட்டத்தில் 8,104 மாணவர்களும், 7,754 மாணவிகளும் என மொத்தம் 15,858 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,404 மாணவர்கள், 7,424 மாணவிகள் என மொத்தம் 14,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.36 சதவீதமும், மாணவிகள் 95.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சவீதம் 93.50 ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தேனி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 97.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 97.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

    மாநில அளவில் தேனி மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் தேனி மாவட்டத்தில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 5,311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.91 சதவீதம் ஆகும். #SSLC #SSLCResult

    தேனி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள காட்ரோடு போலீஸ் சோதனைச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ராஜா தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து வரு‌ஷ நாடு நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.50 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லை. அவரிடம் விசாரணை நடத்தியபோது வரு‌ஷநாட்டைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி காசி மாயன் என்றும் பஞ்சு விற்ற பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெரியகுளம், கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல் சின்னமனூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சேது குமார் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கூடலூர் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காரில் வந்த அவர் கூடலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முகமது சபீர் (35) என தெரிவித்தார். ஆனால் அவர் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    தேனி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல்களை சுதந்திரமாகவும், அமைதியான முறையில் நடத்திட துப்பாக்கிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கலன் (துப்பாக்கி) உரிமதாரர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு உரிமம் பெற்ற தளவாட கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், படைக்கலன் உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கி ஆயுதங்களை ஒப்படைக்கப்படாமல் தங்கள் வசமே வைத்திருப்பது கண்டறியப்பட்டால் துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் படைக்கல சட்ட விதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.

    இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 996 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டில் நடந்த கொலை சம்பவங்களில் மொத்தம் 36 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டு விசாரணையில் இருந்த கொலை வழக்குகளில் 9 வழக்குகள் விசாரணை முடிந்து மொத்தம் 19 குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு தூக்கு தண்டணையும், 15 பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2018-ம் ஆண்டில் 67 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் 2018-ம் ஆண்டில் கோர்ட்டு விசாரணையில் இருந்த போக்சோ வழக்குகளில் 5 வழக்குகள் விசாரணை முடிந்து 7 குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு தூக்கு தண்டணையும், 2 பேருக்கு ஆயுள் தண்டணையும் 2 பேருக்கு தலா 8, 9 ஆண்டுகள் சிறை தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்து வழக்குகளில் 2016-ம் ஆண்டில் மொத்தம் 1,365 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டில் மொத்தம் 1,036 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் 996 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த உயிரிழப்பு கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது போலீஸ் துறையின் சீரிய நடவடிக்கையால் இந்த வருடம் வெகுவாக விபத்துக்கள் குறைந்துள்ளது. அதிகரித்து வந்த வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மோட்டார் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு 7,508 பேர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 243 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2016-ம் ஆண்டில் 142 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 182 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 310 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆம் ஆண்டில் 186 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 214 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 549 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 154 கஞ்சா வழக்குகளில் 157 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 530 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்த 6 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2018 ஆம் ஆண்டில் 22 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருட்டு வழக்குகளில் கடந்த 2016-ம் ஆண்டில் 336 திருட்டு குற்ற வழக்குகளும், 2017-ம் ஆண்டில் 326 திருட்டு வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 299 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் துரித நடவடிக்கையாலும் அதிகமாக இரவு ரோந்து அலுவல்கள் அனுப்பியும் அதிகமான முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை செய்யப்பட்டதாலும் திருட்டு வழக்குகள் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது. இதில் தொடர்ந்து திருட்டு குற்றங்கள் செய்து வந்த 8 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தவிட்டுள்ளார். #Gaja #GajaCyclone
    தேனி:

    வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது..

    கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், கஜா புயல் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளன.

    இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்காலுக்கு மீட்பு பணிகளுக்காக கடற்படையை சேர்ந்த 2 கப்பல்கள் விரைந்துள்ளன. தர்ஷாக், கார்னிகோபார், கொராதிவ் ஆகிய கப்பல்கள் சென்னையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Gaja #GajaCyclone
    தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    தேனி:

    தேனி அருகே சுக்காங்கால்பட்டி வாசகர் சாலை தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது35). இவர் குமுளி-தேனி மெயின் ரோட்டில் வந்துகொண்டி ருந்போது கோட்டூர் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கோட்டூர் சீலையம்பட்டி வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் ஆண்டவரை போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஜெயமங்கலம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது30). இவர் தனது நண்பர் ராஜபாண்டி (30), இருளப்பன் (29) ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளம் தென்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஆட்டோ மீது மோதியதில் ராஜபாண்டி, இருளப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ராஜா தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கம்பம் கிழக்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தேனி மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மழை பெய்தபடி இருந்தது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    கொடைக்கானல் மலை பகுதியிலும் கனமழை நீடித்து வருகிறது. எனவே இன்று கொடைக்கானல் தாலுகா அளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் பிறப்பித்துள்ளார்.

    கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #HeavyRain #HolidayForSchools
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.  #HeavyRain #HolidayForSchools

    ×