என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனமழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்16 Aug 2018 3:21 AM GMT (Updated: 16 Aug 2018 3:21 AM GMT)
கனமழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #HeavyRain #HolidayForSchools
தேனி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். #HeavyRain #HolidayForSchools
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், வி.கே.புதூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். #HeavyRain #HolidayForSchools
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X