search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம்
    X

    தேனி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.3 லட்சம்

    தேனி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள காட்ரோடு போலீஸ் சோதனைச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ராஜா தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து வரு‌ஷ நாடு நோக்கிச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.50 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

    ஆனால் அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லை. அவரிடம் விசாரணை நடத்தியபோது வரு‌ஷநாட்டைச் சேர்ந்த பஞ்சு வியாபாரி காசி மாயன் என்றும் பஞ்சு விற்ற பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெரியகுளம், கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இதே போல் சின்னமனூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் சேது குமார் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கூடலூர் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காரில் வந்த அவர் கூடலூரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முகமது சபீர் (35) என தெரிவித்தார். ஆனால் அவர் கொண்டு வந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×