search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
    X

    தேனி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

    தேனி மாவட்டத்தில் நாளை மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மூட உத்தரவிடப்பட்டுள்ளது. #TNtasmac
    தேனி:

    தமிழக அரசு மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகள் நாளை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகளுக்கு நாளை (புதன்கிழமை) மே தினத்தை முன்னிட்டு கட்டாயம் மதுபான கடைகளை மூடப்பட வேண்டும்.

    அந்த நாளில் மதுபான விற்பனைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் மதுபானம் தொடர்பான விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்மந்தப்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #TNtasmac
    Next Story
    ×