search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.

    இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×