என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்28 Jan 2019 8:56 AM GMT (Updated: 28 Jan 2019 8:56 AM GMT)
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.
இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.
இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X