search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public happy"

    • சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
    • பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றி குளிர்ந்த காற்று வீசியது.

    தொடர்ந்து 6 மணிக்கு மேல் இடி-மின்னலுடன், மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    கன மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, சின்னசுப்புராயப் பிள்ளை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தப்படி மெதுவாக ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டனர்.

    நகரின் பல வீதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.

    அதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றினர்.

    அதுபோல் மின்துறை ஊழியர்களும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். மழை நின்ற பிறகு மின் விநியோகம் செய்யப்பட்டது.

    இன்று காலையிலும் லேசாக தூரல் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தர்மபுரி நகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதமாக மழை பெய்யாமல் வரண்ட வானிலையே காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. எனவே தருமபுரி மாவட்ட பொது மக்கள் குடிநீர் இன்றி தவித்து வந்தனர். மேலும் கோடைகால கத்திரி வெயில் ஆரம்பித்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் பாலக்கோட்டில் லேசான மழை பெய்தது. 

    பாப்பிரெட்டி பகுதியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் மழைபெய்ய தொடங்கியது. இந்த மழை இடியுடன் கூடிய மழையாக தொடர்ந்து காலை 3 மணி வரை விடாமல் பெய்தது. 

    இது போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ராமநாதபுரத்தில் நேற்று திடீரென்று பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிககுறைவாக பெய்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து மக்கள் குடி நீருக்காக அலைந்து திரிந்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு கத்தரி வெயில் எனப்படும் கோடைவெயிலுக்கு முன்னதாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.

    கோடைவெயிலுக்கு முன்னதாகவே இவ்வாறு வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டிவதைத்தால் மக்கள் கோடைவெயிலை நினைத்து அச்சத்தில் இருந்தனர். மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் சொல்ல முடியாத அவதியடைந்திருந்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

    இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நேற்று காலை ராமநாதபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. காலை 11.45 மணிஅளவில் இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரத்தில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வைசியால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை நீரை மக்கள் வீணாக்காமல் குடங்களில் பிடித்து வைத்தனர். கடந்த பல நாட்களாக மக்கள் வெயிலால் அவதியடைந்த நிலையில் திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த மழையால் நிலத்தடி நீர் ஆதாரம் உயர வாய்ப்பு மிக குறைவு என்றாலும் வெப்பக்காற்றால் பகலிலும், இரவிலும் அன்றாட வேலையை பார்க்க முடியாமல் அவதிப்பட்ட மக்களுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.

    இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. தமிழகத்தின் பிறபகுதிகளில் மழை பெய்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான சாரல் மழையினால் பூமி குளிர்ந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு ஏற்படும்.

    திண்டுக்கல் 4.6, கொடைக்கானல் 4.3, பழனி 2.0, சத்திரப்பட்டி 7, நத்தம் 7.5, நிலக்கோட்டை 16, வேடசந்தூர் 0.3, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 0.3, காமாட்சிபுரம் 2.3, கொடைக்கானல் போட்கிளப் 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 49.3 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    திருச்சியில் நேற்று மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    திருச்சி:

    திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

    இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில்  பகலில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது.  சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் லேசான தூறலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  நேற்று போல் இன்று பகலிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபி டித்தப்படி சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்லும் நிலை ஏற்பட்டது.  

    2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததன் மூலம் திருச்சியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    சேலத்தில் பூண்டு வரத்து அதிகரிப்பால் அதன் விலை படிப்படியாக குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வட மாநிலங்களில் இருந்து வெள்ளைபூண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த வெள்ளை பூண்டுகளை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.

    ஒரு கிலோ வெள்ளை பூண்டு 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து அதிகரிப்பால் அதன் விலை படிப்படியாக குறைந்துள்ளது.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் நடுத்தரமான வெள்ளை பூண்டு கடந்த சில நாட்களாக ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள். மேலும் தெரு தெருவாக வண்டிகளில் கொண்டு சென்றும் வெள்ளை பூண்டுகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதனையும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.

    போடியில் விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்ததில் 100 ஆண்டு பழமையான மரம் முறிந்து தரைமட்டமானது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் கடந்த பல நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சாரல் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல கன மழையாக மாறி நகர் முழுவதும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடைவிடாது பெய்த மழையினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது.

    கரட்டு பட்டி என்ற இடத்தில் 100 ஆண்டு பழமையான மரம் இருந்தது. இந்த மரத்தின்மீது இடி விழுந்ததில் 90 சதவீத பகுதி முறிந்து தரைமட்டமானது. அந்த நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போடி தாலுகா பகுதியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தேவர் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேளதாளம் முழங்க கொட்டக்குடி பெரியாற்றில் கரைக்க எடுத்து சென்றனர். ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாரல் மழை பெய்ததால் போலீசார் விரைவாக சிலைகளை கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இருப்பினும் ஊர்வலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கன மழை பெய்யத் தொடங்கியது.

    இதனால் விநாயகர் சிலைகளும் நனைந்தது. இதனையடுத்து சிலைகளை நனையாமல் பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி ஊர்வலமாக எடுத்து சென்று கொட்டக்குடி பெரியாற்றில் கரைத்தனர்.

    உத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை முழு தொழிலாக கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளை விக்கப்படும் காய்கறிகளை ஊத்தங்கரை, சிங்காரபேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

    இந்த பகுதியை சுற்றியுள்ள படத்தானூர், ஆண்டிïர், எக்கூர், கானம்பட்டி, பெரிய தள்ளப்பாடி, கொம்மம்பட்டு, கெண்டிகானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் வார சந்தைக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப் பேட்டைக்கு தான் செல்ல வேண்டிய அவல நிலையில் இருந்தனர், இந்த நிலையை கருதி இப்பகுதி விவசாயிகள் ஒற்றுமையாக சேர்ந்து கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள சிங்காரப்பேட்டை -திருவண்ணாமலை செல்லும் சாலை அருகே செவ்வாய்கிழமை தோறும் வாரச் சந்தை அமைத்து தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

    விவசாய நிலத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் சந்தைக்கு வருவதால் விலையும் சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் மிகவும் தூய்மையாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியோடு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:-

    முழுக்க முழுக்க விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச்சந்தை இதனை அரசு கவனம் செலுத்தி உழவர் சந்தையாக அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்வதுபோல் மேகக்கூட்டங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்யவில்லை.

    நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.

    அதே சமயம் இரவில் பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    கன கனமழையாக பெய்யா விட்டாலும் மாவட்டம் முழுவதும் பரவலாகமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு, கொடிவேரி அணை பகுதியிலும் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. வனப்பகுதியான பவானிசாகர், தாளவாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வனப்பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி அணை-8.2

    பெரும்பள்ளம் அணை -6

    ஈரோடு -5

    மொடக்குறிச்சி -1

    திருச்சி- புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. மாலை பொழுதில் மழை பெய்வது போன்ற அறிகுறி தென்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், பாலக்கரை, தில்லைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. தேங்கி கிடந்த தண்ணீரில் கார் ஒன்று சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும், அனைத்து வாகனங்களும் பீமநகர் வழியாக திருப்பி விடப்பட்டன. மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரனூர், விராலிமலை , அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் வரை மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. நேற்று முன்தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்தது.  

    ×