என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » weekly market created
நீங்கள் தேடியது "weekly market created"
உத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை முழு தொழிலாக கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளை விக்கப்படும் காய்கறிகளை ஊத்தங்கரை, சிங்காரபேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.
இந்த பகுதியை சுற்றியுள்ள படத்தானூர், ஆண்டிïர், எக்கூர், கானம்பட்டி, பெரிய தள்ளப்பாடி, கொம்மம்பட்டு, கெண்டிகானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் வார சந்தைக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப் பேட்டைக்கு தான் செல்ல வேண்டிய அவல நிலையில் இருந்தனர், இந்த நிலையை கருதி இப்பகுதி விவசாயிகள் ஒற்றுமையாக சேர்ந்து கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள சிங்காரப்பேட்டை -திருவண்ணாமலை செல்லும் சாலை அருகே செவ்வாய்கிழமை தோறும் வாரச் சந்தை அமைத்து தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாய நிலத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் சந்தைக்கு வருவதால் விலையும் சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் மிகவும் தூய்மையாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியோடு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:-
முழுக்க முழுக்க விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச்சந்தை இதனை அரசு கவனம் செலுத்தி உழவர் சந்தையாக அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X