search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச் சந்தை- பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    ஊத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச் சந்தை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    உத்தங்கரை அருகே விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை முழு தொழிலாக கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளை விக்கப்படும் காய்கறிகளை ஊத்தங்கரை, சிங்காரபேட்டை போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

    இந்த பகுதியை சுற்றியுள்ள படத்தானூர், ஆண்டிïர், எக்கூர், கானம்பட்டி, பெரிய தள்ளப்பாடி, கொம்மம்பட்டு, கெண்டிகானூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பகுதி மக்கள் வார சந்தைக்கு செல்ல வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை, சிங்காரப் பேட்டைக்கு தான் செல்ல வேண்டிய அவல நிலையில் இருந்தனர், இந்த நிலையை கருதி இப்பகுதி விவசாயிகள் ஒற்றுமையாக சேர்ந்து கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள சிங்காரப்பேட்டை -திருவண்ணாமலை செல்லும் சாலை அருகே செவ்வாய்கிழமை தோறும் வாரச் சந்தை அமைத்து தங்கள் விவசாய நிலத்தில் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். 

    விவசாய நிலத்தில் இருந்து நேரடியாக காய்கறிகள் சந்தைக்கு வருவதால் விலையும் சற்று குறைவாக உள்ளது. காய்கறிகள் மிகவும் தூய்மையாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியோடு பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:-

    முழுக்க முழுக்க விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வாரச்சந்தை இதனை அரசு கவனம் செலுத்தி உழவர் சந்தையாக அமைத்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளால் உருவாக்கப்பட்டுள்ள வாரச்சந்தை பொதுமக்களிடம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×