search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி நகர் பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை
    X

    தர்மபுரி நகர் பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை

    தர்மபுரி நகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதமாக மழை பெய்யாமல் வரண்ட வானிலையே காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. எனவே தருமபுரி மாவட்ட பொது மக்கள் குடிநீர் இன்றி தவித்து வந்தனர். மேலும் கோடைகால கத்திரி வெயில் ஆரம்பித்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் பாலக்கோட்டில் லேசான மழை பெய்தது. 

    பாப்பிரெட்டி பகுதியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனை தொடர்ந்து தருமபுரி நகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் மழைபெய்ய தொடங்கியது. இந்த மழை இடியுடன் கூடிய மழையாக தொடர்ந்து காலை 3 மணி வரை விடாமல் பெய்தது. 

    இது போன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×