search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector order"

    • அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது
    • வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடனான ஆய்வு கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

    வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளை கள ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    உயிர் காக்கும் உபகர ணங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சா லைத்துறை பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையில்லா நீரோட்டத்திற்கு தேவை யான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.

    வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களையும், ஆப்தமித்ரா தன்னார்வ லர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இயற்கை இடர்பாடு களால் இறக்கும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்தில் நிவாரண உதவிகள் வழங்க ஏதுவாக கால்நடை பராம ரிப்புத்துறை கால்நடை களுக்கான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும்.

    சேதமடைந்த பொது கட்டிடம், பாழடைந்த கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சப்-கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர்கள் மந்தாகினி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் தாட்கோ காலனி தெருவில் ரூ.18 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு அடிப்படை சாலை கட்ட மைப்பு திட்டத்தின் கீழ் 10-வது வார்டில் ரூ.25 இலட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெற்று வரு வதையும், 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.28 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவா கவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர், சுந்தரபாண்டியம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் அடிப் படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தினை திறம்பட செயல்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர் களுடன் கலெக்டர் ஆய்வு செய்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளு டன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அள வில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    தொடர்ந்து, வத்திராயி ருப்பு வட்டம், மகாராஜபுரத் தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரு வதை கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், செயல் அலுவலர் உஷா கிரேசி, பேரூராட்சித் தலைவர் ராஜம்மாள், துணைத்தலைவர் இந்துஜா, வார்டு உறுப்பினர்கள், உதவி பொறியாளர், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ட பலர் உடன் இருந்தனர்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் மாணவர் களுக்கான மத்திய சமையல் கூடத்தை, மிகவும் தூய்மையாக பராமரிக்கவேண்டும். என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் அரசு மேல் நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக, சர்வசே பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வர் ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், பிளாஸ்டிக் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், துணிப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்து ரைத்தார். மேலும் பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கிவிட்டு, துணிப்பையை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், மாணவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் அனைவருக்கும் துணிப்பை களை கலெக்டர் வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரி யரும் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான விசுவேஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

    மேலும் பள்ளி அருகில் உள்ள, மாணவர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு சமைக்கும் இடங்களை பார்வை யிட்ட கலெக்டர், அங்குள்ள அரிசி, மளிகை, காய்கறி பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். பின்னர், மாண வர்களுக்கான மத்திய சமையல் கூடத்தை, தூய்மையாக பரா மரிக்கவேண்டும். தினசரி சரியான நேரத்தில், சரியான எடையுடன் காய்கறிகள், மளிகை பொருட்கள் வருகிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான உணவை, சத்தாக சமைத்து வழங்கவேண்டும். மேலும் சமைத்த உணவுகளை வண்டி யில் ஏற்றி பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது, சுத்த மாக மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • திருவாடானை யூனியனில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • உரிய காலத்திற்குள் முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடனை யூனியன் பெரியகீரமங்கலம் ஊராட்சியில் கிராம சாலை சீரமைக்கும் திட்டத்தில் ரூ.7.98 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றதை பார்வையிட்டு சாலையின் இருபுறமும் மழைக் காலங்களில் மண்அரிப்பு ஏற்படாத வகையில் பக்கவாட்டு பகுதிகள் உறுதி தன்மையுடன் இருக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் பசுமை வீடு திட்டத்தில் பயனாளி ரூ.1.70லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீட்டை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.

    கல்லூர் ஊராட்சி பாரதிநகர் பகுதியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப பணிகளை மேற்கொள்வதுடன் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கால்வாய்களில் செல்லும் வகையில் பணியை உரிய முறையில் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.14.23லட்சம் மதிப்பீட்டில் ஊரணி சீரமைத்து கரைகள் பலப்படுத்தும் பணியை பார்வையிட்டார். அரும்பூர் மற்றும் பாண்டுகுடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலா ரூ.57.55 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஏதுவாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதே பகுதியில் ரூ.9.85லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தளிர்மருங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.3.24 லட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில் அமைத்து மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அதிகளவு கிராம பகுதிகளில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வட்டாட்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், பொறியாளர்கள் பாலகுமார், திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.

    இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

    இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்.
    • டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - 

    மே தினத்தை முன்னிட்டு ஒரு நாள், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். மே 1-ந் தேதி (திங்கட்கிழமை ) மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
    • பொதுமக்கள் பாராட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தபேல்தார் முத்துசாமி தெருவில் பல ஆண்டுக ளாக மனநலம் பாதிக்கப்பட்ட குண்டுபாய் என்ற பெண் உள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து வந்தார்.

    இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா அலு வலகத்திற்கு வரும்போதெல்லாம் பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று அந்தப்பெண்ணை மீட்டு மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நேற்று பஸ்நி லைய பகுதியில் சுற்றிதிரிந்த அந்தப்பெண்ணை மீட்டு கலெக் டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் முன்னிலையில் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான மறுவாழ்வு இல்ல நிர்வாகி ரமேஷிடம் ஒப்ப டைத்து, அந்தப்பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.

    அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா மற்றும் உதவும் உள்ளங்கள் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர். கலெக்டரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

    • கடலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டதில் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடி–யாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 196 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 13 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 12 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 48 மனுக்களும், இதர மனுக்கள் 73 ஆக மொத்தம் 438 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார–ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    • இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமுக்கு வரும்போது, மற்ற தகவல்களை அவர்கள் பெறும் வகையில் தகவல் மையத்தை அமைத்தால் விண்ணப்பிக்கும் முறை, மனு எழுதுவது, மற்ற துறைகளுக்கு செல்வது போன்ற விவரங்களை கேட்டு அறிய முடியும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் இந்த முகாமில் பெற்றுக்கொண்டால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • கலெக்டர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
    • ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்துகொண்டு, தங்கள் பிரச்சினைகளை மாவட்ட கலெக்டர் முன்பு எடுத்துக் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மோகன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அந்தந்தத் துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், ஒரு சில விவசாயிகள் நீண்டநேரம் பேச அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை, ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல்களை சுதந்திரமாகவும், அமைதியான முறையில் நடத்திட துப்பாக்கிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கலன் (துப்பாக்கி) உரிமதாரர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு உரிமம் பெற்ற தளவாட கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், படைக்கலன் உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கி ஆயுதங்களை ஒப்படைக்கப்படாமல் தங்கள் வசமே வைத்திருப்பது கண்டறியப்பட்டால் துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் படைக்கல சட்ட விதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection

    ×