search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravindranath kumar"

    • ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம்

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி. இருந்து நீக்கப்பட்டார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார்.

    இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்கக்கோரி, ரவீந்திரநாத் எம்.பி., மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து 38 இடங்களில் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் தேனியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான இவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

    இதற்காக ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் ஏற்கனவே சந்தித்து பேசி இருந்தார். பா.ஜனதா மேலிடமும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க முன் வந்தது

    ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேல்சபை எம்.பி.யான வைத்திலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவி வழங்கும்படி சிபாரிசு செய்திருந்தார். இதனால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    2 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்க முடியாது. கூட்டணி கட்சிகளுக்கு 1 இடம்தான் உண்டு என்று பிரதமர் மோடி முடிவு எடுத்திருந்ததால் அதி.மு.க. எம்.பி.க்களில் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை.

    இதனால் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுக்கும், வைத்திலிங்கத்துக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.



    பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருடன் வைத்திலிங்கம் எம்.பி.யும் உடன் வந்தார்.

    ஆனால் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை மீண்டும் பார்த்து பேசிவிட்டு சென்னை திரும்புவார் என தெரிகிறது.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர், ஜே.பி.நட்டா, ஹர்ஸ்வர்தன், பாபுல் சுப்ரியோ ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

    உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.



    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை பிரதமர் அலுவலகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் மத்திய மந்திரி சபையில் அதிமுக சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    2014-ம் ஆண்டு தேர்தலில் உருவான மோடி அலை 2019-ம் ஆண்டு தேர்தலில் சுனாமியாக மாறி சுழன்றடித்து காங்கிரஸ் கூட்டணியை துவம்சம் செய்துவிட்டது. பா.ஜனதாவின் எழுச்சியால் படுதோல்வியைத் தழுவியுள்ள காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அதற்கு வசதியாக நேற்று மாலை 16-வது பாராளுமன்றம் நிறைவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

    அப்போது மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை எங்கு, எப்போது, எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். புதிய அமைச்சரவை வருகிற 28-ந் தேதி அல்லது 30-ந்தேதி பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் யார்-யார் இடம் பெற வாய்ப்புள்ளது என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    2014-ம் ஆண்டு மோடி தனது அமைச்சரவையில் 66 பேரை மந்திரிகளாக இடம் பெறச் செய்திருந்தார். அவர்களில் 27 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள், 39 பேர் ராஜாங்க மந்திரிகள். இவர்களில் பா.ஜனதா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்திருந்தனர்.

    இந்த தடவையும் இதே அளவுக்கு மத்திய மந்திரி சபையில் புதிய அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா மூத்த தலைவர்களில் அருண்ஜெட்லி தவிர அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ்கோயல், நரேந்திரசிங் தோமர், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதாவுக்கு இந்த தடவை மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் அதிக எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். எனவே அதிக எம்.பி.க்கள் தேர்வாகியுள்ள மாநிலங்களில் இருந்து புதுமுகங்களை மத்திய மந்திரிகளாக்க மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜனதாவை அடுத்த தலைமுறையினரிடமும் வலிமை பெறச் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளையும் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ள மோடி முடிவு செய்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனாவுக்கு 18 எம்.பி.க்களும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 16 எம்.பி.க்களும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கு 1 எம்.பி.யும் கிடைத்துள்ளனர். அதன் அடிப்படையில் மந்திரிசபையில் இந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு 4 இடங்கள் தர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 3 அல்லது 4 மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறது.

    அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது என்பதால் மத்திய மந்திரிசபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முன் வந்துள்ளார். அந்த ஒரு இடம் காபினெட் அந்தஸ்துடன் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் யாரை மந்திரி ஆக்க விரும்புகிறீர்கள்? அவரது பெயரை தெரிவியுங்கள் என்று பா.ஜனதா மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதை உறுதிபடுத்திய அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெற சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

    இதன் மூலம் மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெறுவது உறுதியாகி விட்டது. அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.



    இதற்கிடையே இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றனர். மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருக்கும் அவர்கள் அதற்கு முன்னதாக அமைச்சரவையில் அ.தி.மு.க. சார்பில் இடம் பெறுபவர் பற்றி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், மிகவும் இளையவர் என்பதால் மூத்த தலைவர்களில் ஒருவரை மத்திய மந்திரி ஆக்கலாம் என்ற கருத்து அ.தி.மு.க.வில் வலுத்துள்ளது. இதை ரவீந்திரநாத்குமாரும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

    ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது.

    மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    ரவீந்திரநாத் குமார் மத்திய மந்திரி ஆகாத பட்சத்தில் அ.திமு.க. மேல்-சபை எம்.பி. வைத்திலிங்கம் மத்திய மந்திரியாக அதிக வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டபோது, வைத்திலிங்கம் யார் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். தற்போது அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அணியில் உள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தொகுதியில் இருந்து 3 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள அவர் 2016-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு அவர் மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவரை மத்திய மந்திரி ஆக்குவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள மோடி வருகிற 30-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்கான பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது.

    இதில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.


    அவர்களுடன் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் சென்றார்.

    முன்னதாக ரவீந்திரநாத் குமார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
    மதுரை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


    நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.
    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

    இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

    இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது.  தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

    வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
    தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனைவிட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். 

    இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே கல்வெட்டில் எம்.பி என பெயர் வைத்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஓ.பி.எஸ் மகன் புகார் அளித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலய கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

    இந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.

    ரவீந்திர நாத்குமார் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை வைத்தது அப்பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதுபற்றி வேல்முருகன் கூறும்போது, எங்களை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு எப்போதும் முதல்வர்.

    தற்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பதால் அவரின் பெயரை குறிப்பிட்டு இருந்தேன். தேனி பாராளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக இடம்பெற்றுவிட்டது என்றார்.

    போலீஸ்காரர் வேல்முருகன் ஏற்கனவே ஜெயலலிதா மறைந்த போது சீருடையுடன் மொட்டையடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். கடைசியாக அவர் தேனி மாவட்ட ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது காவல்துறை கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.

    இதனிடையே ரவீந்திர நாத்குமார் சார்பாக அ.தி.மு.க வக்கீல் அணியினர் இன்று மதியம் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

    இது தொடர்பாக ரவீந்திர நாத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    பிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil
    போடி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.

    தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil
    ×