search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theni constituency"

    • சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
    • தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    சென்னை:

    பா.ஜனதா ஆதரவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பா.ஜனதாவை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

    கேள்வி:-1999-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்து மக்களை சந்திக்கிறீர்கள். மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-1999-2004 கால கட்டத்தில் நான் பெரிய குளம் தொகுதி எம்.பி.யாக இருந்து நிறைய பணிகள் செய்து இருக்கிறேன். அரசியல் சூழ்நிலையால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் 21,155 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். இது மற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும் போது நன்றாகவே இருந்தது. அதனால் என்னை அம்மா ஜெயலலிதா மேல்சபை எம்.பி. ஆக்கினார். தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டியில் என்னால் உருவான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ஆகியவற்றால் 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த எனக்கு மக்கள் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் (தி.மு.க.), நாராயணசாமி (அ.தி.மு.க.) ஆகியோர் உங்களோடு அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரிஜினல் அ.தி.மு.க. என்பது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் போய் விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார். தி.மு.க. மக்கள் விரோத கட்சியாக உள்ளது. எனவே அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை.


    கேள்வி:-தங்க தமிழ்செல்வனும், நீங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது சமூக ரீதியான வாக்குகள் அதிக அளவில் யாருக்கு கிடைக்கும்?

    பதில்:-தேனி ஒரு காஸ்மோபாலிடன் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமூகங்களின் வேட்பாளர்களும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் பா.ஜனதா கூட்டணியால் வாக்குகளை அதிக அளவு பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:-நான் அ.ம.மு.க.வை தொடங்கிய போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமரின் ஒத்துழைப்போடு பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றுவேன்.

    கேள்வி:-உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

    பதில்:-அந்த நேரத்தில் என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்தார். நானும் கைது செய்யப்பட்டிருந்தேன். ஒரு காவலாளி மட்டும்தான் இருந்தார். பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அம்மாவின் பாதுகாப்பில் ஊழல் அமைச்சர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாக நம்பினார்கள்.

    எனவே இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    கேள்வி:-ஜெயலலிதாவின் கொள்கைகளை பின் பற்றுவதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு எதிரானவர். நீங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

    பதில்:-அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி இருப்போம். தற்போது தேசத்துக்கு தேவை சிறந்த பிரதமர். மோடிக்கு நிகரானவர்கள் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் பாராட்டப்படும் மோடிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

    கேள்வி:-எடப்பாடி பழனிசாமிக்கான வாய்ப்புகள் மற்றும் உங்களைப் பற்றிய அவரது விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:-எடப்பாடி பழனிசாமி யாரால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்த போது அவரை கட்சியை விட்டு நீக்கினார். எனவே மற்றவர்களை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவார்கள்.

    கேள்வி:-உங்களால்தான் அ.தி.மு.க. பிளவு பட்டதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

    பதில்:-அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் 2½ ஆண்டுகள் என்னுடன் இருந்தார். ஏன் அப்படி செய்தார் என்பது என் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.

    இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் நடந்த முறைகேடு குறித்து வழக்கு தொடருவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனியிலேயே எனக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம். வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

    வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச்சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல வி‌ஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்.

    கேள்வி:- ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறீர்களா? தேர்தல் ஆணைய முறைகேடுகளை பற்றி வழக்கு தொடர இருக்கிறீர்களா?

    பதில்:- இரண்டும் ஒன்று தானே. அவர் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை பற்றித்தான் வழக்கு தொடர இருக்கிறேன்.

    கே:- மத்தியில் காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம்?

    ப:- தமிழகத்தில் அமைந்தது போல ஒரு கூட்டணி அமையாதது தான் முக்கிய காரணம். ராகுல் காந்திதான் பிரதமராக வருவார் என்று தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததால் மதச்சார்பற்ற கட்சிகள் மும்முரமாக வேலை செய்தது. அதுபோல் வட இந்தியாவிலும், மற்ற இடங்களிலும் எதிர்க் கட்சிகள் அறிவிக்காத காரணத்தால் தான் இந்த மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது.

     


     

    குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து ஒற்றுமையாக இருந்திருந்தால் மோடி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்ற 4 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஆங்காங்கே வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு நிகழ்ந்திருப்பதாக சொன்னார்கள். அதைப் பற்றிய செய்திகள் முழுமையாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வரும்.

    கே:- முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி வழக்கு தொடருமா?

    ப:- காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று தான் முடிந்திருக்கிறது. காங்கிரஸ் ஏன் தோற்றது என்று ஆராய்ச்சி செய்வதற்காக 4 பேர் கொண்ட கமிட்டியை ராகுல் காந்தி அமைத்திருக்கிறார். இதுபற்றி எல்லா செய்திகளையும் சேகரித்து கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் ஏற்படும் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரும்.

    கே:- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றிக்கு மோடி காரணம் என்று சொன்னீர்கள் அது ஏன் என்று தெரியுமா?

    ப:- என்ன காரணம் என்று தெரியவில்லை. பன்னீர்செல்வம் மீது மோடிக்கு அவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை சவுந்தரராஜன் மீது இல்லாத காதல், பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத காதல், சி.பி.ராதா கிருஷ்ணன் மீது இல்லாத காதல், எச்.ராஜா மீது இல்லாத காதல், ஓ.பன்னீர் செல்வம் மகனின் மீது மட்டும் ஏன் மோடிக்கு அவ்வளவு காதல் என்று எனக்கு தெரியவில்லை. ஏதாவது விசே‌ஷ சங்கதிகள் இருக்கிறதா என்று மோடியிடம் தான் அதைப்பற்றி கேட்க வேண்டும்.

    தேனி தொகுதியில் இருக்கிற விவிபாட்டை முழுவதும் சரியாக எண்ண வேண்டும். நாங்கள் வழக்கு தொடரும் போது அதையும் சொல்வோம்.

    கே:- அடுத்த தேர்தலிலாவது வாக்கு சீட்டு முறையை கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

    ப:- அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே வாக்குப் பதிவு எந்திரங்கள் துல்லியமாக செயல்படுவதில்லை. எனவே அவர்கள் வாக்குச் சீட்டு முறைக்கு சென்று விட்டார்கள். நமது நாட்டை பொறுத்தவரை மோடியை போல ஒரு ஆளை வைத்துக் கொண்டு தேர்தல்கமி‌ஷன் எடுபிடியாக இருக்கின்றது. உச்சநீதிமன்றம் எடுபிடியாக இருக்கின்றது. ரிசர்வ் வங்கி எடுபிடியாக இருக்கின்றது. எல்லாவித அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ள மோடிக்கு மின்னணு எந்திரங்கள் மிகவும் வசதியாக போய்விட்டது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மேலிடத்தில் நாங்கள் சொல்வோம், வாக்குப் பதிவு எந்திரத்தை விட வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்று மேலிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை, மக்களின் நலன்தான் முக்கியம் என்று ரவீந்திரநாத்குமார் கூறினார்.
    மதுரை:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்னை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


    நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்.

    தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. தோல்வியடைந்துள்ளது. அதற்கான காரணம் கண்டறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
    தேனி :

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

    ம.நீ.ம - 29

    நாம் தமிழர் - 198
    தேனி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மூத்த வக்கீல்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தேனி பாராளுமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அ.திமு.க. வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கோருகிறோம்.

    கடந்த ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக, காங்கிரசும், தி.மு.க.வும் ஏற்கனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களை கொடுத்துள்ளன. இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால், அது தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    ஆனால், மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதல்- அமைச்சரின் மகனான, அ.திமு.க. வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருப்பி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.

    அதனால் கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அ.தி.மு.க. வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    தேனி தொகுதிக்கு திருவள்ளூரில் இருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-

    தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியில் உள்ள வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு எந்திரங்களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன்னார்கள்.

    அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?

    இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங்கள், 30 விவிபாட் எந்திரங்களையும் கொண்டு சென்றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்?

    இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லுமுல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

    எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு தேவை இல்லை என்று தேர்தல் அதிகாரியிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனு கொடுத்துள்ளார். #elangovan #congress #electioncommission

    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இந்த தொகுதியில் கங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

    அதில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை தேர்தல் முகவர்களுக்கு கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும்.

    தகவல் அளிக்கவில்லை என்றால் அது சட்ட விரோதம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏன் மாவட்ட தேர்தல் நிர்வாகம் கடைபிடிக்க வில்லை. தேர்தலில் போட்டியிட்ட யாரும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத நிலையில் தன்னிச்சையாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது யாருடைய நிர்பந்தத்தால் என்ற கேள்வி எழுகிறது.

    தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு என்பது இதுவரை இல்லாத நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததே! மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஆக உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #congress #electioncommission

    பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வாக்கை பதிவு செய்தார். #Loksabhaelections2019 #OPS
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு நாளான இன்று செவன்த்டே மெட்ரிக்பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி தனது மகன் ரவீந்திரநாத்குமார், ஆகியோருடன் வாக்குப்பதிவை செலுத்தினார்.



    முன்னதாக இந்த மையத்தில் எந்திரம் பழுது காரணமாக 40 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது. அதன்பிறகு பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இந்த மையத்தில் காலை முதலே கைக்குழந்தையுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


    துணைமுதல்வரும், அவரது மகனும் வரிசையில் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.



    இதுகுறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ஏராளமான இடங்களில் மின்னணு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க தாமதமாகியுள்ளது. எனவே வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.  #Loksabhaelections2019 #OPS

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #PMModi #BJP #LokSabhaElections2019

    ஆண்டிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சிகளிடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் வருகிற 18-ந்தேதி 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ந்தேதி 4 சட்ட சபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதால் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். முதலில் அவர் மதுரையில் பிரசாரம் செய்தார்.

    2-வது கட்ட பிரசாரத்தை ஈரோட்டிலும், 3-வது கட்ட பிரசாரத்தை கன்னியாகுமரியிலும், 4-வது கட்ட பிரசாரத்தை சென்னையிலும் பிரதமர் மோடி மேற்கொண்டார். சமீபத்தில் 5-வது கட்டமாக கோவைக்கு வந்து அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதற்கிடையே பிரதமர் மோடி ஒரு தடவை தமிழகத்துக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க.- பா.ஜனதா தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்ய ஒப்புக் கொண்டார்.

    நேற்று மராட்டியம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பேசிய மோடி நேற்று இரவு கோழிக்கோடு நகரில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தார். மதுரை பசுமலையில் உள்ள விடுதியில் அவர் தங்கினார்.

    இன்று காலை 9.55 மணிக்கு பிரதமர் மோடி, ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டார். 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி புறப்பட்டார். 10.50 மணிக்கு மோடியின் ஹெலிகாப்டர் தேனி சென்று அடைந்தது. அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் கானாவிலக்கு பகுதிக்கு சென்றார்.

    அங்கு அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் அவர் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பேசினார்.

     



    அதோடு மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி கூட்டணி வேட்பாளர்களையும் அ.தி.மு.க. சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான லோகி ராஜன் (ஆண்டிப்பட்டி), மயில்வேல் (பெரியகுளம்) ஆகியோரையும் ஆதரித்து பேசினார்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த மக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக 2 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 15 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட அதிகாரிகள் பலர் தேனியில் குவிந்து இருந்தனர். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.

    தேனி கூட்டத்தை முடித்ததும் பகல் 11.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ராமநாதபுரம் புறப்பட்டார். 12.50 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் ராமநாதபுரம் வந்தடைந்தது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மோடி, அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் டி.பிளாக் அம்மா பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    மதியம் 1 மணிக்கு அவர் பேச்சை தொடங்கினார். வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை), தமிழிசை சவுந்திரராஜன் (தூத்துக்குடி), டாக்டர் கிருஷ்ணசாமி (தென்காசி) ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

    கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை முதலே தொண்டர்கள் திரண்டதால், பொதுக்கூட்ட திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியிருந்தது.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலோர பகுதியில் 24 மணி நேரமும் கடற்படை, கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு செய்தனர். அனைத்து தரப்பினரும் கடும் சோதனைகளுக்கு பிறகே பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கடும் வெயிலில் மக்கள் சிக்கி அவதிப்படக் கூடாது என்பதற்காக ராட்சத பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதுபோல பொதுமக்கள் சிரமம் இல்லாமல் நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஆங்காங்கே டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    மதியம் 1.45 மணிக்கு பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, காரில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு சென்றார். 1.55 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

    2.40 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்து சேருகிறார். அங்கிருந்து 2.45 மணிக்கு புறப்படுகிறார். தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மங்களூர் செல்கிறார். #PMModi #BJP #LokSabhaElections2019

    தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் வீரம் நிறைந்த, தன்மானம் உள்ள விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.



    பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

    தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.

    ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri

    ×