என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "elangovan"
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
- பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார். ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.
இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் செய்யும் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பொறுப்பாளராக நிர்வாக குழு உறுப்பினரான அருணாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னும் 2 நாட்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பொறுப்பாளரான அருணாசலம் தலைமையின் கீழ் இந்த தேர்தல் பணிக்குழு செயல்படும்.
இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசார வியூகங்களை பிரம்மாண்டமாக மேற்கொள்ள அருணாசலம் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.
வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வே.ரா. சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கமல் கட்சியின் ஓட்டுகள் ஈ.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைக்கும் என்பதால் அவர் கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பலவித சர்ச்சைகளுக்கு பிறகு முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2 வாக்குச்சாவடி மையத்திற்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை எந்த கட்சிகளும் விரும்ப வில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது மகனை எப்படியாவது டெபாசிட் தொகையாவது வாங்கச் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்றே தற்போது இங்கு மறுதேர்தல் நடத்தப்படுகிறது.
இறுதிகட்ட தேர்தல் நடந்து வரும் நிலையில் மோடி 20 மணி நேரத்துக்கு மேலாக குகையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். அவர் குகையிலேயே இருப்பதுதான் இனி நாட்டு மக்களுக்கு நல்லது.
வருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ராகுல்காந்தி அடுத்த பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இந்த மாற்றத்தை எதிர்பார்த்துதான் தமிழகத்திலும் இந்தியாவிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இந்த தொகுதியில் கங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை தேர்தல் முகவர்களுக்கு கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும்.
தகவல் அளிக்கவில்லை என்றால் அது சட்ட விரோதம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏன் மாவட்ட தேர்தல் நிர்வாகம் கடைபிடிக்க வில்லை. தேர்தலில் போட்டியிட்ட யாரும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத நிலையில் தன்னிச்சையாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது யாருடைய நிர்பந்தத்தால் என்ற கேள்வி எழுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு என்பது இதுவரை இல்லாத நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததே! மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஆக உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #congress #electioncommission
பேரையூர்:
தி.மு.க. கூட்டணி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவர் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் ரூ.500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது தான்.
இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள்.
பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Elangovan
சென்னை:
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தான் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதிக எண்ணிக்கையில் மனு கொடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட ராபர்ட் புரூஸ், பொன்ராபட்சிங், ரூபிமனோகரன், வசந்த குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஊர்வசி அமிர்தராஜ், அசோகன், சாலமன், அனீசா பிரைட் உள்பட 26 பேர் மனு செய்துள்ளனர்.
இதே போல் திருவள்ளூர் தொகுதிக்கும் கடும் போட்டி உள்ளது. இதுமட்டும்தான் தனி தொகுதி என்பதால் இதற்கும் கடும் போட்டி இருக்கிறது. முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், ரஞ்சன் குமார், ஜான்சிராணி, ஜெயக்குமார் உள்பட 10 பேர் மனு கொடுத்துள்ளனர்.
முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிய வில்லை.
இந்த நிலையில் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர்கள் 3 பேர் மற்றும் அகில இந்திய காங் கமிட்டி உறுப்பினர் ரகு உள்பட பலர் மனு கொடுத்தனர்.
தேனி தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதற்காக சென்னையை சேர்ந்த சிவராமன், ரங்க பாஷ்யம், நாஞ்சில் பிரசாத் ஆகியோர் மனு கொடுத்தனர். இதுபோல் விருதுநகர், கரூர், திருச்சி ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடவும் மனு கொடுத்துள்ளனர்.
ஆரணி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, கரூர் தொகுதிக்கு ஜோதிமணி, திருச்சிக்கு பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் மனு கொடுத்தனர்.
திருச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் அவருடைய மகன் ராமசந்திரன், மனு கொடுத்தார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு பெயரில் காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில துணை தலைவர் மயிலை அசோக்குமார் மனு கொடுத்தார். இன்று மாலைவரை மனுக்கள் பெறப்பட்டன. #kushboo #elangovan #parliamentelection
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை தந்து அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லையோ, அதே போல் டாக்டர் ராமதாசும் பல வாக்குறுதிகளை தந்திருக்கிறார். நாங்கள் பதவிக்கு வந்தால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் பதவி தர மாட்டோம், அப்படி செய்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சவுக்கை கூட காண்பித்தார். அ.தி.மு.க.வோடு எப்போதும் கூட்டு சேர மாட்டோம், அவர்கள் ஊழல்வாத கட்சி என்று கூறினார்.
இன்று எப்படி மோடி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினாரோ அதே போல் ராமதாஸ் வாக்குறுதிகளை மறந்து மக்களை ஏமாற்றி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். நிச்சயமாக இந்த கூட்டணி நடைபெற உள்ள தேர்தலில் பெரிய அளவில் தோல்வியடையும். அ.தி.மு.க. தனியாக நின்றால் கூட அனேகமாக டெபாசிட்டாவது பெற முடியும். ஆனால் பா.ஜ.க.வோடும், பா.ம.க.வோடும் சேர்ந்த காரணத்தால் அந்த அணி டெபாசிட் கூட வாங்க முடியாது. காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. மதசார்பற்ற தன்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் யார் வந்தாலும் மு.க.ஸ்டாலின் அதை பரிசீலித்து ஏற்றுக்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #Elangovan #Ramadoss
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பணம் ஏழை மக்களுக்கு போய் சேராது.
அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கு வழங்க பயனாளிகள் பட்டியல் தயாராவதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டால் டெபாசீட் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டால் டெபாசீட் கூட கிடைக்காது.
தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு என வாக்கு வங்கியே கிடையாது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். கூட்டணி குறித்து நல்ல தகவல் வெளியாகும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan
ஆம்பூர்:
வாணியம்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முயற்சி எடுத்து இருக்கின்றனர். முயற்சியின் பலனாக கொல்கத்தாவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
அதில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பேசியிருக்கின்றனர். இது நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் இது ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்.
எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது. தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவார். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க அதிகாரத்தையும், பணபலத்தையும் உபயோகப்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி கலையாது.
தமிழகத்தில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #dmk #congress #parliamentelection
ஈரோடு:
ஈரோடு காங்கிரஸ் முதலாவது மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதலாவது மண்டல தலைவர் அயுப்அலி தலைமை தாங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் முன்னிலை வகித்தார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பொதுச்செயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எச்.ஐ.வி.தோற்று உள்ள ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது போல் வேறு சில பெண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவருகின்றன. ஆனால் இந்நாள் வரை சுகாதாரத் துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேச வில்லை.
இந்த விஷயத்தில் அவர் அலட்சியமாக செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசையும், மத்திய மந்திரிகளையும் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.
கஜா புயல் நிவாரணத்திற்காகவோ, தமிழக மக்கள் நலனுக்காகவோ அவர்கள் சந்திக்கவில்லை. தேசிய அளவில் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைக்காக போராடி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மாநில அரசோ அவர்களை கண்டு கொள்ளவில்லை.
தமிழகத்தில் தற்போது உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தமிழக அரசு சார்பில் அதிகாரிகளோ அமைச்சர்களோ நேரில் சந்தித்து இதுவரை பேசவில்லை.
ஆனால் காங்கிரஸ் விவசாயிகள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால் 4½ ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி இதுவரை விவசாயிகளுக்காக செய்தது என்ன? 41 முறை அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதன்மூலம் ரூ. 2,500 கோடி வரை செலவாகியுள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்கும். பாரதீய ஜனதாவையும் பிரதமர் மோடியையும் மக்கள் நிராகரிப்பார்கள் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார். #elangovan #parliamentaryelection #pmmodi
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் இளங்கோவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
இன்று எனக்கு மிகவும் விசேஷமான நாள். ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
இது ராகுல் காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி ஆகும். ராகுல் காந்தியைப் பார்த்து பொடிப் பையன் என்று எள்ளி நகையாடுபவர்களுக்கு அவர் மரண அடி கொடுத்து 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்துள்ளார்.
இதன்மூலம் ராகுல்காந்தி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆளும் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை எப்போதும் நிறைவேற்றியதில்லை .
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் போடுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி என்னவாயிற்று?
எனவே இந்த சூழ்நிலையை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கு இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும் .
நிச்சயமாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.
இவ்வாறு இளங்கோவன பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. ராகுல் காந்தி பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். கட்சி மேலிடம் விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #parliamentelection
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று 71-வது பிறந்தநாள்.
இதையொட்டி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்திதுரைசாமி மண்டபத்தில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கட்சி தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி 71 கிலோ கேக்கை நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக வாங்கி வைத்திருந்தனர். அந்த கேக்கை வெட்டி தானும் உண்டு தொண்டர்களுக்கு வழங்கினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் தான்மானத் தலைவர் இளங்கோவன் வாழ்க, அண்னை சோனியா காந்தி வாழ்க, வருங்கால பிரதமர் ராகுல்காந்தி வாழ்க என கோஷமிட்டனர்.
விழாவில் நிர்வாகிகள் 71 கிலோ எடை கொண்ட லட்டுகளை வழங்கினர். மேலும் இளங்கோவனுடன் கட்சி நிர்வாகிகள் செல்பியும் எடுத்து கொண்டனர். #EVKSElangovan
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் வந்த காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பாரதிய ஜனதா தயவில் நடக்கிறது. வட மாநிலங்களில் தற்போது நடந்த தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் வாலாஜாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க.வே தோல்வியை ஒப்புக்கொண்ட போதும், பாரதிய ஜனதாவுக்கு பெரிய தோல்வி இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது அவர் பா.ஜ.க.வின் அடிமையாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.
தமிழக காங்கிரசில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை ராகுல்காந்தி தான் அறிவிப்பார். அ.ம.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி தி.மு.க.வில் இணைவதால், தி.மு.க.வின் வலிமை கூடிக் கொண்டிருக்கிறது. டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து அனைவரும் வெளியேற தயாராகி விட்டனர். நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கு பின்னர் எச்.ராஜா அடக்கி வாசிப்பார் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Elangovan #ChandrababuNaidu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்