search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Re-polling"

    • வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
    • அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன.

    இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன.

    திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.

    இந்நிலையில், வன்முறை எதிரொலியால் மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நேற்று மாலை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமா்ா 600 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. 89.67 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இதனிடையே தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது முறைகேடுகளும், அத்துமீறல்களும் நடைபெற்றதாக தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.அய்யம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எண் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எண் 192, 193, 194, 195, ஜாலிப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண் 196, 197 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 3,074 ஆண் வாக்காளர்களும் 2,985 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6059 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் கொளுத்தும் வெளிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இவர்கள் தர்மபுரி பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்கும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

    இதையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதால் ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்காளர்கள் மறு ஓட்டுப்பதிவின்போது செல்போனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

    வாக்குச்சாவடிகளை பாராளுமன்ற பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, கலெக்டர் மலர்விழி, போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6,059 வாக்காளர்கள் கொண்ட இந்த 8 வாக்குச்சாவடியிலும் 5,433 பேர் ஓட்டு போட்டனர். இது 89.67 சதவீதம் ஆகும்.

    டி.அய்யம்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்குவாத்தில் ஈடு பட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். ஜாலிப்புதூர் பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். தகவல் அறிந்த கூடுதல் சூப்பிரண்டு மணிகண்டன் அதிரடிப்படை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு தேவை இல்லை என்று தேர்தல் அதிகாரியிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனு கொடுத்துள்ளார். #elangovan #congress #electioncommission

    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தேனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகளும் அடங்கும். இந்த தொகுதியில் கங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

    அதில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்படாத எந்த வாக்குப்பதிவு இயந்திரத்தையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டுமானால் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது தலைமை தேர்தல் முகவர்களுக்கு கண்டிப்பாக தகவல் அளிக்க வேண்டும்.

    தகவல் அளிக்கவில்லை என்றால் அது சட்ட விரோதம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஏன் மாவட்ட தேர்தல் நிர்வாகம் கடைபிடிக்க வில்லை. தேர்தலில் போட்டியிட்ட யாரும் மறு வாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத நிலையில் தன்னிச்சையாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிப்பது யாருடைய நிர்பந்தத்தால் என்ற கேள்வி எழுகிறது.

    தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று இத்தனை நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு என்பது இதுவரை இல்லாத நடைமுறை என்பது அனைவரும் அறிந்ததே! மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்களின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற அச்சம் எழுகிறது. ஆக உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #congress #electioncommission

    ×