search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal panchayat polls"

    • தேர்தல் வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோர் பலி
    • 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது

    மேற்கு வங்காளத்தில் கடந்த 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது பெரும்பாலான இடங்களில் வன்முறை வெடித்தது. வாக்குப்பெட்டிகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். பல்வேறு கட்சி தொண்டர்கள் கொல்லப்பட்டனர். தேர்தல் வன்முறையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வன்முறை நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுதேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொண்டர்கள் காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு முன் கும்பலாக திரண்டனர்.

    ஹவுராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியே கூடியிருந்த கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்புப்படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த கும்பல் கேட்காததால், பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்த தொடங்கினர். பின்னர், கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    3 அடுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்குப்பதிவின்போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்த கும்பல் ஓட்டு பெட்டிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.
    • போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்லில் 61,636 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப் பதிவு நடைபெற்றது.

    ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

    பல்வேறு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்த கும்பல் ஓட்டு பெட்டிகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். சிலர் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து கொளுத்தினார்கள்.

    அரசியல் கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் வன்முறை சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில், வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற 697 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதை தொடர்ந்து 697 வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டு வருகிறார்கள். அதிக அளவில் வன்முறை நடந்த முர்ஷிதா பாத் மாவட்டத்தில் அதிக பட்சமாக 175 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    மால்டா மாவட்டத்தில் 109 வாக்குச்சாவடிகளிலும், நாடியா மாவட்டத்தில் 89 வாக்குச்சாவடிகளிலும், கூச்பெகர் மாவட்டத்தில் 53 வாக்குச்சாவடிகளிலும், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 46 வாக்குச்சா வடிகளிலும், உத்தர் தினாஜ் பூர் மாவட்டத்தில் 42 வாக்குச்சாவடிகளிலும், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் 36 வாக்குச்சாவடிகளிலும், பூர்பா மேதினியூர் மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகளிலும், ஹூக்ளி மாவட்டத் தில் 29 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் மாநில போலீசாருடன் 4 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், மறுவாக்குப்பதிவு நடை பெறும் வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழாத வண்ணம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்.

    • வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
    • அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

    ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன.

    இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார். தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன.

    திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.

    இந்நிலையில், வன்முறை எதிரொலியால் மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நேற்று மாலை நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமா்ா 600 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.
    • தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது.

    ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 8-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே அங்கு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. ஊரக பகுதிகளில் 73,887 இடங்ளிலும் வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஊராட்சி வார்டுகள் 63,229 ஒன்றிய வார்டுகள் 9730, மாவட்ட ஊராட்சி வார்டுகள் 928 ஆகும். இந்த தேர்தலில் 2.06 லட்சம் பேர் போட்டியிட்டனர். 5.67 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

    வாக்குப்பதிவின் போது சுமார் 65,000 மத்திய காவல் படையினர், மாநில காவல் துறையை சேர்ந்த 70,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் உள்ளாட்சி தேர்தலில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

    முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறை யாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

    பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றது. அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 62 வயது முதியவர் உயிரிழந்தார்.

    தம்சா பகுதியில் ஒரு கும்பல் வாக்குப்பெட்டிகளை ஆற்றில் வீசி எறிந்தன. திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜ.க. தொண்டர்கள் மோதலுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    டியமாட்கார் பகுதியில் ஓட்டுப்பெட்டிகளை எடுத்து வந்து ஒரு கும்பல் வெளியே வீசியது. இதனால் அப்பகுதி முழுவதும் வாக்கு சீட்டுகள் சிதறி கிடந்தன. முர்ஷிதாபாத்தில் ஒரு கும்பல் போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்து கொளுத்தியது.

    அரசியல் கட்சி தொண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டுக் கொண்டனர்.

    பயங்கர வன்முறை காரணமாக மத்திய பாதுகாப்பு படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துமாறு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூச்பெஹர் மாவட்டத்தின் பாலிமரி கிராம பகுதியில் பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர் மதாப் விஸ்வாஸ் கொல்லப்பட்ட தாக அந்த கட்சி குற்றம் சாட்டியது. இதே போல திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் பாபர் அலி, சபிருதீன், கணேஷ் சர்கர் ஆகியோரும் வன்முறையில் கொல்லப்பட்டனர். அவர்களது உயிரிழப்புக்கு பா.ஜனதாவே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்10 பேரும், பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா 3 பேரும், கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சேர்ந்த 2 பேரும் வன்முறைக்கு பலியானார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட தினத்தில் இருந்து மேற்கு வங்காளத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அம்மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
    • கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதிகள், கிராம பஞ்சாயத்துகள் போட்டியிட்டன.

    மேலும், பா.ஜ.க., பஞ்சாயத்து சமிதி, கிராம பஞ்சாயத்துகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்.

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க பொறுப்பாளர் மங்கள் பாண்டே ஆகியோரிடம் இன்று பேசினார்.

    அப்போது அவர், "ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஜனநாயகத்தின் இந்த மரணத்தை பாஜக அனுமதிக்காது. ஜனநாயக வழியில் இந்த போராட்டத்தை தீர்க்கமான நிலைக்கு கொண்டு செல்வோம்.

    மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உயிர்களைக் காப்பாற்றவும், அமைதியை மீட்டெடுக்கவும் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறார். ஆனால், மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்வதால் அவரது வேண்டுகோள் வீணாகிவிட்டது.

    இப்போது மதியம் 3 மணி ஆகிறது. 15க்கும் மேற்பட்டோர் குண்டர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 20,000க்கும் மேற்பட்ட பூத்களை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கைப்பற்றியுள்ளனர். மாநில காவல்துறை முன்னிலையில். சிஏபிஎஃப் ஒத்துழையாமையால் முற்றிலும் செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
    • இன்று நடந்த வன்முறையில் 14 பேர் பலியாகினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது.

    பா.ஜ.க. 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    நேற்று நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்றிரவு கடும் மோதல் ஏற்பட்டது. தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் மாநிலம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகின. ஒரு இளம்பெண் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இன்றைய வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். பா.ஜ.க., இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தலா ஒருவர், அரசியல் அடையாளம் தெரியாத 2 நபர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் வன்முறையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மேலும், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் 4 பேர் படுகொலை
    • வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை 20-க்கும் மேற்பட்டோர் பலி

    மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழைபெய்து கொண்டிருக்கும் நிலையிலும் மக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்காள கவர்னர் சி.வி. ஆனந்தா போஸ், வடக்கு 24 பர்கனாஸ் பகுதிக்குச் சென்றார். அப்போது அவர் கூறும்போது ''மக்கள் எனது வாகன பேரணியை வழிமறித்து, தங்களை சுற்றி நடைபெறும் கொலைகள் பற்றி கூறினார்கள்.

    குண்டர்கள் தங்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிப்பதில்லை என்றனர். இது நம் அனைவருக்கும் கவலைத்தர வேண்டிய விசயம். இது ஜனநாயகத்தின் மிகவும் புனிதமான நாள். தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக வேண்டும். தோட்டாக்களால் அல்ல'' என்றார்.

    73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட திரண்டனர்.
    • பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் 63 ஆயிரத்து 239 உள்ளாட்சி பதவிகளுக்கான பஞ்சாயத்து தேர்தல் இன்று(8-ந்தேதி) ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்பட்டதால் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து அரசியல் கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கடந்த 1 மாதமாக அங்கு நடந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 18 வயது சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணிக்கு மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காக 65 ஆயிரம் மத்திய படை போலீசாரும், 70 ஆயிரம் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். 2 லட்சத்து 6 ஆயிரம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட திரண்டனர். பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். ஒட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் மழையையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள்.

    அதே சமயம் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீ வைப்பு, வாக்குச்சாவடிகள் சூறை, துப்பாக்கி சூடு என வன்முறைகளும் வெடித்தது. கூச்பெகார் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்குள்ள ஓட்டுச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குப்பெட்டிக்கு தீ வைத்தது. ஓட்டு சீட்டுகளையும் கிழித்தெறிந்தனர்.

    இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.

    சிடாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்தது. ஓட்டு பெட்டிகளையும் உடைத்தது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்த மேஜை, நாற்காலிகளை அக்கும்பல் அடித்து நொறுக்கி சூறையாடியது. மேலும் தீயும் வைத்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

    முர்ஷிதாபாத் மாவட்டம் ஷாம் ஹெர்சந்த் என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வீடு சூறையாடப்பட்டது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பு நேற்று இரவே பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தலை விரித்தாடியது. இந்த வன்முறையில் முர்ஷிதாபாத் மாவட்டம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அங்குள்ள கபாஸ் தங்கா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பாபர் அலி என்பவர் வன்முறை கும்பலால் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்படும் வழியில் இறந்தார்.

    ரெஜிநகர் பகுதியில் அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தொண்டர் குண்டு வீசி கொல்லப்பட்டார். கார்கிராம் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    கூச்பெகார் மாவட்டம் ராம்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி சேர்மன் கணேஷ்சர்கார் என்பவர் நேற்று இரவு கத்தியால் குத்தப்பட்டார். படுகாயத்துடன் அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த வன்முறைக்கு மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரும் பலியானார்.

    பாலிமாரி வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பாரதிய ஜனதா பூத் ஏஜெண்டு மாதவ் விஷ்வாஸ் என்பவரை வெடிகுண்டு வீசி கொன்றது. இந்த சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரசார் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. 24 பாராகான்ஸ் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு பூத் ஏஜெண்டாக செயல்பட்ட அப்துல்லா என்பவர் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் வேட்பாளரின் கணவர் இருப்பதாக கூறி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமாக இருந்தது.

    நேற்று இரவு முதல் இன்று வரை மாநிலம் முழுவதும் நடந்த தேர்தல் வன்முறை சம்பவத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 5 பேர் மற்றும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் தலா 3 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர். சுயேட்சை வேட்பாளரின் ஆதரவாளரும் இறந்தார்.

    இதனால் வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்து உள்ளது. இந்த சம்பவங்களில் பலர் காயம் அடைந்தனர்.

    கூச்பெகார் மாவட்டம் ஒக்ராபாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் ஹபிசூர் ரகு மான் என்பவர் காயம் அடைந்தார். நாடியா மாவட்டம் காசானாகிராம் பஞ்சாயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாரதிய ஜனதா நிர்வாகிகளால் தாக்கப்பட்டார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாராயண்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஹசினா சுல்தானா என்பவரது கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    தெற்கு பர்கானாஸ் பகுதியில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிகிறது. அதன் பிறகு ஓட்டு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும் என்பது தெரியவரும். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 2-ம் இடத்தை பிடித்தது. இம்முறை எந்த கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பது 11-ந்தேதி தெரியவரும். இந்த தேர்தல் முடிவு சட்டசபை தேர்தல் முடிவை போல இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 73 ஆயிரம் இடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி
    • தேர்தல் வன்முறையில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வன்முறை தலைவிரித்தாடியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களது வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இதனால் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி அளித்தது.

    இருந்தாலும் வன்முறை, கொலைவெறி தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று 3 தொண்டர்கள் உயிரிழந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேவையானபோது மத்தியப்படை எங்கே போனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இதையெல்லாம் தாண்டி பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 73,887 இடங்களுக்கு 2.06 லட்சம் வேட்பாளர்களர் களம் இறங்கியுள்ளனர்.

    22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும், மக்கள் காலை 6 மணியில் இருந்து நீண்ட வரிசையில் வாக்களிக்க திரண்டு வந்தனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 928 மாவட்ட கவுன்சிலர், 9,419 பஞ்சாயத்து கவுன்சிலர், 61,591 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 897 மாவட்டர் கவுன்சிலர், 7032 கவுன்சிலர், 38475 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    70 ஆயிரம் மாநில போலீஸ் உடன் 600 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வெற்றி பெற வெளியில் இருக்கும் நபர்கள் விரும்புகிறார்கள்
    • எந்த தேர்தலாக இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வேட்புமனு, தேர்தல் நடைபெற வேண்டும் என மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற தீர்ப்பை பா.ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா இந்த பஞ்சாயத்து தேர்தலில் எல்லா இடங்களிலும் தோல்வியை சந்திக்கும். அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும். இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டசபை, பாராளுமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பார்கள். பா.ஜனதா புறந்தள்ளப்படுவார்கள்.

    மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெறலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் தவறாக இருக்கும். உங்களுக்கு (பா.ஜனதா) பாதுகாப்புப்படை உளளது. ஆனால், எங்களுக்கு மக்களுடைய ஆதரவு உள்ளது. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களை நாங்கள் நம்புகிறோம்.

    தேர்தலுக்கு முன் பிரச்சாரத்திற்காக இங்கு வரும் வெளியாட்களை சார்ந்து நாங்கள் இருக்கவில்லை. ஏனென்றால், அதற்குப்பின் தேவைப்படும்போது அவர்கள் இங்கு இருப்பதில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியில் இருப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் மத்திய படை துணையுடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம என நம்புகிறார்கள்.

    மத்திய அரசு எனது குடும்பத்தை துன்புறுத்துகிறது. இதனால் என்னுடைய அரசியல் நடவடிக்கையை தடுத்துவிட முடியாது.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

    ×