search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk mp"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி. ஆவார்
    • நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில் அச்சிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார் சிவா

    இந்திய பாராளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் நேற்று ஒரு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

    இதனையொட்டி, காலை பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் "கஜ துவார்" பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் தலைமை வகித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். தி.மு.க.வின் சார்பில் மாநிலங்களவைக்கு 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவா கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிகழ்ச்சி நிரல் அவருக்கு வழங்கப்பட்டது. அதில் உள்ளடக்கம் முழுவதும் இந்தியிலேயே இருந்தது. இதனை எதிர்த்த சிவா, இந்நிகழ்ச்சி நிரலை கிழித்து எறிந்துவிட்டார்.

    அவரை போலவே பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ராஜ்நாத் சிங், எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் உள்ளடக்கம் இடம் பெறும் என உத்தரவாதம் அளித்தார்.

    பாராளுமன்றம் கூட்டப்பட்டிருப்பதன் அவசியம் குறித்து பேசிய திருச்சி சிவா, "பா.ஜ.க.வினர் எதையோ மறைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அது என்னவென்று தெரிய வேண்டும். அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த சூழ்நிலை இதற்கு முன் என் அரசியல் வாழ்வில் நான் பார்த்ததில்லை, என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சி.எஸ்.ஐ. திருச்சபையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணி நியமனம், தாளாளர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் திருச்சபையில் பேராயர் பர்னபாஸ் தலைமையிலும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலும் நிர்வாகிகள் 2 அணியினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு தரப்பினர் பாளை ஐகிரவுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள டயோசீசன் அலுவலகத்தில் சில அறைகளை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டனர்.

    இதனால் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பாளை இட்டேரியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதுதொடர்பாக அவர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இரவு திருச்சபையில் குழப்பம் விளைவிப்பதாக கூறி நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகர், வக்கீல் ஜான் உள்பட 13 பேர் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் என மொத்தம் 33 பேர் மீது பாளை போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜான் கைது செய்யப்பட்டார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் ஞானதிரவியம் எம்.பி., லே செயலாளர் ஜெயசிங் உட்பட 32 பேரும் முன்ஜாமீன் கோரி நேற்று நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த முன்ஜாமீன் மனு விசாரணை 30-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, பிஷப் பர்னபாஸ் உத்தரவின்பேரில் ஜான்ஸ் பள்ளி தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி. கடந்த வாரம் நீக்கப்பட்டு, வக்கீல் அருள்மாணிக்கம் புதிய தாளாளராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்க சென்றபோது அங்குள்ள அலுவலகத்திற்குள் புகுந்து ஞானதிரவியம் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக அருள்மாணிக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அந்த மனுவில், என்னை ஞானதிரவியம் எம்.பி., வக்கீல் ஜான், லே செயலாளர் ஜெயசிங் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 10 பேர் ஜான்ஸ் பள்ளி அலுவலகத்திற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் எனது அலுவலகத்தில் இருந்த பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பணம் வரவு-செலவு புத்தகம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், மனு ரசீது வழங்கினர். தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி., அவரது ஆதரவாளர்கள் மீது புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை டயோசீசன் அலுவலகத்தில் பூட்டிக்கிடக்கும் அறைகளை திறக்குமாறு பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க அங்கு வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
    • தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது.

    திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கிய விழாக்கள் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழை வளர்க்கவே இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது.

    முன்பு மதுரை, சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது.

    புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். கேரளா மாநிலத்தில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதில்லை. அதை மறந்து விட்டார்கள். மறந்து போனதை உருவாக்கி தருவது இந்த இலக்கிய திருவிழா.

    முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தியது.

    சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள்.இன்றைய சினிமாக்களில் பெண்ணடிமை இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை தொடர்பாக எழுதினார்.

    தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாச்சாரம் அழிந்து போய் விடக்கூடாது. தமிழகத்துக்குள் சாதி, மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களே காரணம் ஆகும்.

    இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நீதிமன்ற மொழியில் தமிழை அனுமதிக்க மறுக்கிறார்கள். கீழடியை அவர்கள் ஏற்கவில்லை. நமது இலக்கியம், கருத்துகள், சுய மரியாதையை காக்க தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
    • லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    தி.மு.க. எம்.பி. ராசா இந்து மதத்தையும் பெண்களையும் இழிவாக பேசியதை கண்டித்து புதுவை பராசக்தி ஆன்மீக இயக்க மகளிர் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.

    லாஸ்பேட்ைட உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு பராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர் கனகவல்லி தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பராசக்தி ஆன்மீக இயக்க முன்னணி நிர்வாகிகள் வள்ளி, வெண்ணிலா, மணிமேகலை, வசந்தா, கல்விக்கரசி, மீனா, மகாலட்சுமி, ஜெயா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணி அய்யனார் கோவில் வரை சென்றது. அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராசா எம்.பி. படத்தை கிழித்து வீசினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி.க்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    தர்மபுரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர். செந்தில்குமார் சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.

    இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தி.மு.க. எம்.பி. டாக்டர். செந்தில்குமாருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாணவேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.வினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எம்.பி. செந்தில்குமார் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாதவரம் மாவட்ட கழக செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தனக்கோடி, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.சி.ஆர். மனோகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், முன்னாள் அவைத் தலைவர் சிவாஜி, முன்னாள் துணைச் சேர்மன் யுவராஜ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    ×