என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பி கனிமொழி"

    • 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.
    • தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கின் தீர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து தி.மு.க. எம்பி கனிமொழி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார்.

    கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் கொடுத்திருக்கிறது தமிழகக் காவல் துறை.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை அதே செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது.

    3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது.

    தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை.

    இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்டபோது, 'சிபிஐ விசாரணை தேவையில்லை' என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

    இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, "இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்' என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது.

    அன்றைக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.

    2019 பிப்ரவரி 24 கல்லூரி மாணவி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.

    2019 மார்ச் 4- முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது.

    2019 மார்ச் 12 - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.

    2019 ஏப்ரல் 27 - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.

    2019 மே 21- முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

    2021 ஜனவரி 6-இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்.

    2023 பிப்ரவரி 24 சாட்சி விசாரணை தொடங்கியது.

    2024 பிப்ரவரி 23 குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது.

    2025 மே 13- தீர்ப்பு.

    2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ.

    ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

    2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
    • நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    மக்களவையில் இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் எம்.பியுமான கனிமொழி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கு கூட தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

    கேந்திரிய வித்யாலயாக்கள் உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் மொழி கொள்கைகளை எப்படி நடந்து கொள்வீர்கள் என்று உங்களுக்கும் இங்கு இருக்கும் சிலருக்கு விளக்குவதார்காக நான் சொல்கிறேன்.

    அங்கே இருக்கக் கூடிய மாநில மொழியே கற்றுத்தருவோம் என்று சொல்கிறீர்கள். தமிழ் நாட்டில் 45 கேந்திரிய வித்யாலயாக்கள் இருக்கிறது. ஆனால், அங்கு நீங்கள் எப்படி தமிழ் சொல்லி தருவீர்கள்.

    அங்கே இருக்க கூடிய மாணவர்களே 20 பேர் ஒரு வகுப்பில் எல்லோரும் சேர்ந்து தலைமை ஆசிரியர்களிடம் வந்து கோரிக்கை வைக்க வேண்டுமாம்.

    அப்படி கோரிக்கை வைத்தால்தான் அதற்காக ஆசிரியர் நியமிக்கப்படும் என்றும் ஆசிரியர் கிடைத்தால் தான் அவர்களை நியமிக்கப்பட்டு அங்கே தமிழ் சொல்லித் தரப்படும் என்று சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலேயே.

    நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி, போராடி தான் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

    45 பள்ளிகளிலே 15 பள்ளிகளில்தான் தமிழ் சொல்லி தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது.

    உங்கள நம்பி மொழி கொள்கைகளிலே நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்று எப்படி நினைக்க முடியும்.

    ரெயில் நிலையங்களில் கூட டிக்கெட் வாங்க முடியவில்லை. அங்கையும் ஹிந்தி திணிக்கப்பட்டு இருக்கிறது.

    அப்படிபட்ட அரசாங்கம் எங்கள் மீது ஹிந்தியை மட்டும் இல்லாமல் சமஸ்கிருதத்தையும் திணிக்கின்றனர்.

    அதுமட்டும் இல்லை எங்களுடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேல் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    மதியம் உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது தமிழகம் என்ற பெருமையே நாங்கள் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்வோம்.

    ஆனால், பி.எம்.போஷன் என்ற திட்டம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய திட்டத்திற்கு இந்த அரசாங்கம் அந்த திட்டத்திற்காக மதிப்பீடு 11ஆயிரத்து 600 கோடி. அதில் குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய திட்டத்திலே நீங்கள் ஒதுக்கீடு செய்திருப்பது 10 ஆயிரம் கோடி.

    குழந்தைகளுக்கு உணவு தரக்கூடிய இந்த பி.எம்.போஷன் திட்டத்திற்கு கூட போதிய நிதியை ஒதுக்க முடியாத நீங்கள், எங்களுக்கு கல்வியை பற்றி சொல்லி தருகிறீர்கள். இதற்கு நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
    • கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சீமானுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

    சீமானின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி சீமானுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில், சீமான் பெயரை குறிப்பிடாத எம்.பி. கனிமொழி பெரியாருக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள், அவரை எதிர்த்து, எதிர்த்து ஓய்ந்து போகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    "பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்," என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    • எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    ×