என் மலர்

    நீங்கள் தேடியது "திமுக"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார்.
    • இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது.

    அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
    • தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் அக்டோபர் 14-ந் தேதி மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த "மகளிர் உரிமை மாநாடு" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மகளிர் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.
    • வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று புதுப்பிரச்சினை காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.

    அ.தி.மு.க. என்றால் அது அமித்ஷா.தி.மு.க. தான். இவர்கள் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள். ஒருவர் திருடர் மற்றொருவர் கொள்ளைக்காரர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், தி.மு.க. என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்து வருகிறது. அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந்தியா கூட்டணிக்கான வெற்றி.

    வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

    அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும்.

    13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர்.

    இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது.

    அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார்.
    • மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார்.

    கோவை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை கணபதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    இந்த பாத யாத்திரை இரவு 10.30 மணியளவில் இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    கோவை பா.ஜனதாவின் கோட்டை. அந்த அளவுக்கு கோவையில் கட்சியினர் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளார்கள். இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

    பாதயாத்திரையில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் காரணமாக 2 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நேரமின்மை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தல் படியே 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வந்தேன்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார். தமிழகத்திலும் 39 இடங்களையும் பெறுவதே நமது இலக்கு.

    பிரதமர் மோடி தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ளார். தமிழ் மண்ணையும், மக்களையும், கலாசாரத்தையும் மோடி மிகவும் நேசிக்கிறார். அவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேச முடியவில்லை என்பது தான் வருத்தம். அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசிவிட்டால் தமிழகத்தையும் ஆட்சி செய்து விடுவார்.

    பிரதமர் மோடி குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. இதனால் உலகளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று மோடி கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றம் அடைய நேர்மையான ஊழல் இல்லாத அரசால் தான் முடியும். அது பா.ஜ.க அரசு அளிக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார். தி.மு.க. சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் அவர் மீது பா.ஜ.க.வினர் 400 பேர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையோ, வழக்கோ இல்லை.

    சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். மேலும் இந்து தர்மம், சனாதனம் மற்றும் நரேந்திர மோடியை பழித்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்.

    கோவையில் பேசிய நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் போது, கட்சிக்கு வரவில்லையே என பேசியிருக்கிறார். படத்திற்கு வந்த கூட்டம் என்பது அவர் நன்றாக நடிப்பதால் வந்தது.

    கட்சி ஆரம்பித்ததில் இருந்து தி.மு.க.வை எதிர்த்து வந்த கமல்ஹாசன் தற்போது தனது தன்மானத்தை மொத்தமாக தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கிறார். அவர்களது கம்பெனி படத்தில் நடிக்கிறார். இப்படி எல்லாம் செய்து தனது தன்மானத்தை இழந்ததாலேயே கமல்ஹாசனின் அரசியலுக்கு கூட்டம் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
    • ‘தரமே நிரந்தரம்' என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் நினைவிடம், மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைத்தல்.

    சுகாதாரத்துறை கட்டிட பணிகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலக கட்டிட பணிகள், பள்ளி, நீதிமன்ற கட்டிட பணிகள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கிய அரசு கட்டிடங்களில் இயங்கி வரும் மின் தூக்கி, குளிர்சாதன வசதி மற்றும் இதர மின் வசதிகளை அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நினைவக கட்டிட பணிகள் மற்றும் சிலை அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு பணிகள் தொடங்குவதற்கு முன்பு பெறப்படவேண்டிய கட்டிட வரைபட அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை பெற தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 'தரமே நிரந்தரம்' என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை என்ஜினீயர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
    • 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

    காங்கயம்:

    நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது. தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் வாக்குச்சாவடிக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களின் குறைகள் மற்றும் தேவையை கேட்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக தமிழகத்தில் உள்ள தி.மு.க. மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

    அதன்படி முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. இதில் 15 தி.மு.க. மாவட்டத்துக்கு உட்பட்ட 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் 19 மாவட்ட கழகங்களை சேர்ந்த 16,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2 கூட்டங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வின் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த 14ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பாசறை கூட்டம் பிரமாண்ட மாநாடு போல் நடைபெற்றது.

    இதற்காக படியூர் தொட்டியப்பாளையத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்ற நுழைவு வாயிலுடன் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காலையில் இருந்தே படியூருக்கு வரத்தொடங்கினர். கூட்டம் தொடங்கியதும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மாவட்டம் வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.

    சரியாக காலை 11மணிக்கு பயிற்சி பாசறை கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கள செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    முதலில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., விளக்கம் அளித்து பேசினார். பின்னர் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் மற்றும் செயலி குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., விரிவாக எடுத்துக்கூறினார்.

    அதன்பிறகு திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். சமூக வலைதளங்கள் பயன்பாடு, செயல்படுத்த வேண்டிய முறைகள் பற்றி மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணி தரன் விளக்கமளித்து பேசினார்.

    பின்னர் மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு 3.15 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து தி.மு.க. கொள்கை பரப்புக்குழு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவேற்று பேசுகிறார். மாலை 4-35 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை உரையாற்றுகிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் நன்றி கூறுகிறார்.

    மாலை 5மணிக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் என்ன, தி.மு.க. செய்த சாதனைகளை எப்படி மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி உள்பட பல முக்கிய அறிவுரைகளை வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 11 மணிக்கு கோவை வந்தார். பின்னர் கோவை லீ மெரிடியன் ஓட்டலில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அங்கு தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்கிறார். மதிய உணவு முடிந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு காங்கயம் படியூரில் நடக்கும் பயிற்சி பாசறை கூட்டத்திற்கு வருகிறார்.

    பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கயம் படியூரில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் கோவையில் இருந்து காங்கயம் வரும் வழியில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை வரவேற்று படியூர் பகுதியில் தி.மு.க. கொடி-தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இருந்து காங்கயம் செல்லும் வழியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர்.

    காங்கயத்தில் பயிற்சி பாசறை நிகழ்ச்சி முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து இரவு 8-15மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
    • ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    கோவை:

    2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

    முதல் கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி திருச்சியில் நடைபெற்றது. 2-வது கட்ட பயிற்சி பாசறை கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் தொட்டியப்பாளையத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றுகிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் ஓட்டலுக்கு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

    ஆனால் திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டலுக்கு செல்லாமல் கோவை மாநகராட்சி 5 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளப்பட்டி பகுதியில் உள்ள துளசி கார்டன் பகுதிக்கு சென்றார். அங்கு நடந்து வரும் சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் 2 அடி தோண்டி பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அங்கு நடக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அங்கு ஆய்வை முடித்து விட்டு, நேராக விளாங்குறிச்சி நஞ்சப்பா சாலையில் நடந்து வரும் சாலை பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் கரட்டுமேடு வி.கே.நகர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்து வரும் சாலை பணியையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கிராந்திகுமார், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் அவர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நடக்கும் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு செல்கிறார்.

    திருப்பூர் செல்லும் வழியிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம், அவர் தங்கும் நட்சத்திர ஓட்டல் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று இரவில் கோவை மாநகர் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும்.
    • 2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள்.

    சென்னை:

    வருகிற தேர்தலில் பா.ஜனதா ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியா வளர்ச்சி அடையவில்லை. ஊழல் மலிந்து விட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊழல் என்று பேசியிருப்பதை பார்த்து இந்தியாவே சிரிக்குமே. ஊழல் பற்றி அவர் பேசலாமா? ஊழல் கட்சி என்று நாடு முழுவதும் பெயர் பெற்ற கட்சி தி.மு.க.

    ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தவர்களே அவர்கள்தான். மக்கள் மறந்து விடுவார்களா?

    இப்போதும் ஊழல் செய்ததாக ஒரு அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தபோது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயில் உறுதி என்றார்.

    இப்போது அவர் ஜெயிலுக்கு போனதும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு பா.ஜனதா பழி வாங்குகிறது என்கிறார். தோண்ட தோண்ட ஊழல் வந்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு முறையும் மோடியை வீழ்த்துவோம் என்று இவர்கள் பேசுவதும் முன்பைவிட அதிக தொகுதிகளை பெற்று மோடி வெற்றி பெறுவதையும் நாடு பார்த்து வருகிறது.

    அந்த வகையில் இந்த தேர்தலிலும் அமோக வெற்றியை மக்கள் கொடுப்பார்கள். வீழ்த்தப்படுவதும், வீழப்போவதும் யார் என்பது அப்போது தெரியும்.

    நாடு முன்னேறவில்லை என்று சொல்வதற்கு முன்பு ஒரு முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து யோசித்து பேச வேண்டாமா? உலக அளவில் இந்தியாவின் பெயர் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது? உலகில் தலைசிறந்த தலைவராக மோடி உயர்ந்து நிற்கிறார்.

    காங்கிரசுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து பெண்களுக்காக செய்தது என்ன? சுயமரியாதை, சொத்துரிமை என்று உடனே பழங்கதையை பேசுவார்கள். பெண்களின் அடிப்படை பிரச்சனையை உணர்ந்து நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார்.

    இத்தனை ஆண்டு காலம் நிறைவேற்ற முடியாத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒரே நாளில் நிறைவேற்றி காட்டியிருக்கிறார்.

    இந்தியாவுக்காக பேசுகிறேன் என்பதை இந்தியா கூட்டணிக்காக பேசுகிறேன் என்று பேசி இருந்தால் நல்லாயிருக்கும். இதற்கு முன்பு இந்தியாவை தெரியவில்லையா?

    2030-ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். முதலமைச்சர் எதையும் பேசுவதற்கு முன்பு 'ஹோம் ஒர்க்' செய்து பேச வேண்டும். யாரும் தயார் செய்து கொடுக்கும் உரையை பேசினால் இப்படித்தான் தப்பு தப்பாக பேசி மக்கள் சிரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வால்பாறை சட்டசபை தொகுதியின் பிரச்சினைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் தீர்க்கவில்லை.
    • ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.

    கோவை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று அவர் கோவை மாவட்டத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார். கோவை வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பகுதியிலும், தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியிலும் நடைபயணம் மேற்கொண்டார்.

    அவருக்கு பாரதிய ஜனதாவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர். பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பொதுமக்கள் வரவேற்புக்கு மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    வால்பாறை சட்டசபை தொகுதியின் பிரச்சினைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் தீர்க்கவில்லை. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் செல்ல வனப்பகுதியின் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்துள்ளார்கள். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சுற்றுலாபயணிகளுக்கு வால்பாறை செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். விரைவில் சுற்றுலாபயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படவில்லை என்றால் பாரதிய ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

    காமராஜர் அணைகளை கட்டி விவசாயத்துக்கு நீரை கொண்டு வந்தார். கருணாநிதி தமிழகம் எங்கும் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தார். 65 ஆண்டுகளாக ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவில்லை. தமிழகத்தின் உரிமையை கொஞ்சம், கொஞ்சமாக கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கிறார் தமிழக முதல்-அமைச்சர்.

    ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதலமைச்சருக்கு அந்த மாநில முதலமைச்சருடன் பேசி ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா? ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.

    இந்தியாவிலேயே தமிழகம் தான் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனாளி. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகத்தான் பிறக்கிறது. அமாவாசையையும், ஆயிரம் ரூபாயையும் தி.மு.க.வினர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. போடும் நாடகம் தான் மகளிர் உரிமைத் தொகை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் சாயம் வெளுக்கப்போகிறது.

    மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர்களே நீட் தேர்வை எதிர்க்கின்றனர். பிரச்சினைகளை கிளப்பி மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க.வின் வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று 2-வது நாள் நடைபயணம் மேற்கொள்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூரில் மாலை 3 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் கிணத்துக்கடவு தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 28-ந் தேதி வரை அவர் கோவையில் முகாமிட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.