என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி மொழி"

    • நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகின.
    • இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அது தொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகின.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருமொழிக்கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.
    • இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், "இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி, முக்கியப் பங்கு வகித்துள்ளது. அனைத்து மொழிகளையும் இணைத்து, வளர்ந்த மொழியியல் ரீதியாகத் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளைக் கொண்டிருக்கும் அரசின் நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்காகும்.

    ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.

    பா.ஜ.க. முதன்முதலில் ஆட்சி அமைத்ததில் இருந்தே ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றைத் தன்மையில் சுருக்க முயல்கிறது. இந்த வரிசையில்தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றது.

    யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. வலுக்கட்டாயமாகத் திணிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையும்கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும் செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம்.

    இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், விடாமல் இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக 22 மொழிகள் இருக்கும்போது, இந்தியை மட்டுமே தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு.

    ஒன்றியத்தை ஆளும் அரசானது, நாட்டிலுள்ள அத்தனை மதத்தினரையும் மொழியினரையும் மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டு மொத்தப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி ஆகும். இந்தி பேசாத மாநிலங்கள், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானவை. எனவே கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆங்கில எழுத்தால் ‘சகயோக்’ எனவும், தமிழ் எழுத்தால் ‘சகயோக்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
    • எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் ‘சகயோக்’ என்றுதான் வாசிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் 'சேவை மையம்' என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப்பலகையில் இந்தி எழுத்தால் 'சகயோக்' என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் 'இன்பர்மேசன் சென்டர்' என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் 'சகயோக்' எனவும் தமிழில் 'சேவை மையம்' என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் 'சகயோக்' என்றும் எழுதப்பட்டுள்ளது.

    இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் 'சகயோக்' என்றுதான் வாசிக்க முடியும்.

    இதே போன்று இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது.

    இதன் அர்த்தம் என்ன? தமிழ் மறைப்பா? இந்தி திணிப்பா? யாருக்கும் புரியவில்லை. பயணிகள் குழம்பி போய் நிற்கிறார்கள்.

    • ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.
    • இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் தகவல் தொடர்பு மையம் என எழுதப்பட்டிருந்தது.

    இந்நிலையில் புதிதாக அச்சிடப்பட்ட அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் தமிழுக்கு பதில் இந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலம், தமிழிலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.

    இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு இந்தியால் எழுதி ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை இன்று கிழித்து அகற்றினர்.

    • இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது- அமித் ஷா
    • நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது- உதயநிதி

    இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ''உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும்'' என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' (டுவிட்டர்) வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    ''இந்திதான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது- பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது'' என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து.

    தமிழ்நாட்டில் தமிழ்- கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது.

    இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா.
    • விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.

    "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

    இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

    பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

    • இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா?
    • இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    இந்தி பேசாதவர்

    இந்தியர் இல்லை என்று

    அரசமைப்பில் இருக்கிறதா?


    இந்தியா என்ற நாடு

    இந்தி என்ற

    சொல்லடியில்தான் பிறந்ததா?


    எல்லா மாநிலங்களிலும்

    புழங்குவதற்கு

    இந்தி மொழியென்ன

    இந்தியக் கரன்சியா?


    இந்தி பேசும் மாநிலங்களிலேயே

    இந்தி கல்லாதார் எண்ணிக்கை

    எவ்வளவு தெரியுமா?


    வடநாட்டுச் சகோதரர்கள்

    தமிழ்நாட்டுக்குள் வந்தால்

    தமிழ் தெரியுமா என்று

    தெள்ளு தமிழ் மக்கள்

    எள்ளியதுண்டா?


    சிறுநாடுகளும்கூட

    ஒன்றுக்கு மேற்பட்ட

    ஆட்சிமொழிகளால்

    இயங்கும்போது

    இந்தியாவை

    ஓர் ஒற்றை மொழிமட்டும்

    கட்டியாள முடியுமா?


    22 பட்டியல் மொழிகளும்

    ஆட்சிமொழி ஆவதுதான்

    வினாத் தொடுத்த காவலர்க்கும்

    விடைசொன்ன

    தமிழச்சிக்குமான ஒரே தீர்வு


    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் பரவியது.
    • அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை.

    டெல்லியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டத்தில், இந்தியில் வழங்கப்பட்ட நிதிஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்க்க கோரினார் டி.ஆர்.பாலு. அதற்கு, "இந்தி நம் தேசிய மொழி; அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    "இந்தியாவை இந்துஸ்தான் என்று அழைக்கிறோம். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி. இந்தி மொழி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார். இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    இந்திய நாட்டை இந்துஸ்தான் என்று அழைப்பதற்கு காரணமுண்டு. இந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம். அதேநேரம், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டுள்ளன. பேசும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கின்றன.

    இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தி இந்தியாவின் "தேசிய" மொழி அல்ல, ஆனால் ஒரு "அதிகாரப்பூர்வ" மொழி. இந்தியாவில் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

     


    இதேபோன்று, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும். மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணிப்பது இருக்க கூடாது.

    எனவே, இந்தி தேசிய மொழி, அதனை தெரிந்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற தொனியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தால் அது ஏற்புடையதல்ல. காரணம், இந்தி தேசிய மொழி அல்ல. அதேநேரம், ஒரு மொழியை கற்பது, தெரிந்துவைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.

    அந்த வகையில், இந்தியை திணிப்பதுதான் தவறு... விருப்பப்பட்டு கற்பது என்பது ஏற்புடையதே...

    • இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை.
    • இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

    சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம் நிறைவு நாள் விழா கொண்டாடப்படுவது எதிர்வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் 'இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை தாம் எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அவ்விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமைதாங்கி நடத்தவிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

    எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பதை தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    இது குறித்து கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக "திராவிட" என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இது குறித்து உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது கவர்னர் ஆர்.என்.ரவி மிகுந்த மரியாதை கொண்டவர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் கிடையாது. "

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார்.
    • இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது" என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அதற்கு ஆளுநர் முழு ஆதரவுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநரால் பல்வேறு திட்டங்கள் தடைப்பட்டு உள்ளன. தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்ப்புகளை பெறவேண்டி இருக்கிறது.

    கனமழையில் இருந்து சென்னை மீண்டிருக்கிறது என்றால், அரசு நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம்.

    இந்தி மாத தினம் கொண்டாட்டும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிராளிகள் கிடையாது. ஆனால், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக இருக்கின்றனர். அதற்கு காரணம் ஆங்கில புலமை.

    மும்மொழிக் கொள்கையே இந்தியை திணிப்பதற்காக தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.
    • ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்தில் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.

    * எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.

    * ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.

    முன்னதாக, பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து பேசும்போது, தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது தென் மாநிலங்களில் கேவலமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான் இந்தி படிக்க செல்லும்போது தெருக்களில் ஏளனம் செய்யப்பட்டேன். நீ இந்தி படிக்க விரும்புகிறாய். தமிழ்நாட்டில் வாழும் உனக்கு வடமொழி எதற்கு என்று கேட்டனர். அது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

    மதுரையில் பிறந்த என்னை வந்தேரி என்று அழைத்தனர். அது அங்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி. விரும்பிய மொழியைக் கற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. இந்தி திணிப்பு பேசும் தமிழகத்தில், இந்தி கற்கக் கூடாது என்ற கொள்கை என் மீது திணிக்கப்படவில்லையா? என்று கூறி இருந்தார்.

    ×