என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundarajan"

    • தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
    • எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    புதுச்சேரி:

    தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் மற்றும் பாகூர் மூலநாதர் சாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. உதயநிதி பிறந்த நாளில் செலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. எனவே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சபாநாயகர் அப்பாவு போன்றவர்கள் கூட மிகவும் தவறாக பேசுகிறார்கள். நடுநிலையாக இருக்க வேண்டிய அவர் கவர்னரை பற்றி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்து வேறுபாடு இருந்தால் கருத்தை சொல்லுங்கள், அதற்கு வார்த்தைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.

    தமிழகத்தில் தி.மு.க. நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

    முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்திருப்பதை அரசியல் நகர்வாகத்தான் நான் பார்க்கின்றேன். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

    செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி, அவர் இணைந்தது தமிழக வெற்றி கழகத்துக்கு பலம் சேர்க்கும். மற்றப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

    எது நடந்தாலும் பா.ஜ.க. தான் என்று தி.மு.க. சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். செங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியானால் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பா.ஜ.க. தான் காரணமா? தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க. தான் காரணமா?

    பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க.வும், இந்தியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர்.

    பா.ஜ.க.-அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். அதில் பிரச்சனை வந்தால் அதற்கு பா.ஜ.க. பொறுப்பல்ல. இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். எதிர்கட்சியின் வாக்குகள் சிதறக்கூடாது. சிதறாமல் ஒரு வியூகம் அமைக்க வேண்டும். சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. குறையவும் குறையாது.

    செங்கோட்டையன், விஜய், டி.டி.வி.தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என யாராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமை தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி தி.மு.க.வை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த வியூகத்துக்குள் எல்லோரும் வர வேண்டும்.

    புதுவையில் 15 ஆண்டுகாலம் இடைக்கால பட்ஜெட் தான் போடப்பட்டது. முழுநேர பட்ஜெட் நாம் வந்த பிறகுதான் போடப்பட்டது. அது இரட்டை இஞ்சின் அரசாங்கத்தால் தான் நடந்தது. ஆகவே இரட்டை இஞ்சின் இன்னும் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
    • திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

    இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பிரபலமாக விளங்கிய திரைப்படக் கலைஞர் திரு. ரோபோ சங்கர் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    திரைப்படத்துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
    • கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சி முதற்கட்டமாக கடந்த 30-ந்தேதி, 2ம் கட்டமாக கடந்த 4ம் தேதி என நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.

    அப்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்..... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.

    ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன் தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும் தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல .திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
    • போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    தி.மு.க. அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்றைய போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாடு பா.ஜ.க.-வை சேர்ந்த மூத்த தலைவர்களின் இல்லங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும், பா.ஜ.க. தலைவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுத்து போலீசார் அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சென்னையில், பா.ஜ.க. தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவத்தை தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில், இன்று (மார்ச் 17) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

    பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

    ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

    தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பியபோது தவறி விழுந்தார்.
    • உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர்.

    இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பிய தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கார்பெட் தடுக்கி கால் தவறி கீழே விழுந்தார்.

    உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் விளக்கம்.
    • தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதம்.

    ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவின்போது, மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

    மேடையில் அமித்ஷா கண்டித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழிசை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய பணிகள், சவால்கள் குறித்து அமித்ஷா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

    நேரப் பற்றாக்குறை காரணமாக அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

    விரிவாக பேச முற்பட்டதால், நேரப் பற்றாக்குறை காரணமாக பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்" என்றார்.

    • திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    திருமாவளவன் குடியை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறாரா ? அல்லது புது முடிச்சு போட அழைப்பு விடுக்கிறாரா ? என்று எனக்கு தெரியவில்லை.

    ஆனால், புதிய முடிச்சுக்காததான் அதிமுக, விஜய் கட்சிக்கு எல்லாம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் என்னவென்றால் மதவாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க மாட்டாராம்.

    மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. இது அப்பட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதற்கும், புதிய அணியை திரட்டுவதற்கும் தான் திருமாவளவனின் புதிய யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஏனென்றால், மது தான் இவர்களது கொள்கை என்றால், ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் என்ன செய்துக் கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி உள்பட போதையால் பல பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

    மதுபோதையில் தான் தமிழகத்தில் அத்தனை பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. திடீரென திருமாவளவனுக்கு ஒரு ஞானோதயம் வந்திருக்கிறது. இந்த ஞானோதயம் எதற்கு வந்திருக்கிறது என்றால், 2026ம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வந்ததின் பேரில், ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு மது ஒழிப்பை ஒரு காரணமாக அவர் சொல்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது இதுகுறித்து தமிழசை கூறுகையில், " உண்மையில் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டார்.

    பிரியங்கா காந்தி போட்டியிடுவதன் மூலம், இது வாரிசு அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக ஒரு இளம் பெண் வேட்பாளரைத் தொகுதியில் நிறுத்தியுள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு என்ன? எனவே இனி மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

    மேலும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது குறித்து அவர் கூறுகையில், "சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

    அந்த மாநாட்டின் பெயர் 'சனாதன தர்மத்தை ஒழித்தல். அப்படியென்றால், அவருடைய வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்று எப்படிச் சொல்ல முடியும்? டெங்குவை ஒழிப்பது போல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

    அவர், சனாதன தர்மத்தை பாகுபாடு என்றும், எஸ்டி/எஸ்சி மற்றும் சமூக நீதிக்கு எதிராகவும் தவறாக விளக்குகிறார்.

    சனாதன தர்மம் என்பது தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் தமிழர்களால் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை. அவர்கள் மக்களிடையே வேறுபாடு காட்ட விரும்புகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

    • டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார்.

    டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20) மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

    நாளை (பிப்ரவரி 20) நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியின் முதலமைச்சர் ஆக.. திருமதி ரேகா குப்தா அவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள்... நான் பாரதிய ஜனதா கட்சியை பார்த்து பெருமைப்படுகிறேன்.. ஏனென்றால்.. கடுமையான உழைப்பாளியான பெண் தலைவரை.. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது.

    இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஓவியம், சிற்பம் உட்பட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றையும் கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.

    கத்திரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி,பலா, வெண்டை ஆகியவற்றோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.

    கவர்னர் தமிழிசை இன்று காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்டார். சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகர் வரவேற்றார். கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் பாராட்டினார்.

    சிறை கைதிகள், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்திருப்பதையும் வெகுவாக பாராட்டினார். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை கவர்னர் தமிழிசை நட்டார். அங்குள்ள கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிககள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறை வளாகத்தில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. சிறை கைதிகள் விளைவித்த விவசாய பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்டனை காலம் முடிந்த கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக மனிதாபிமானம் மற்றும் சட்டரீதியாக அனுகப்படும். காரைக்கால் சிறை முழுவதுமாக கட்டி முடிக்க 2 ஆண்டாகும். அதுவரை அங்குள்ள கைதிகள் புதுவை சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில் ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. அவர்களுடைய கல்வி, சமூக உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம். குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம் என்று மீட்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்கள் கூறினர்.
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த 18 லாரி டிரைவர்கள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பணியில் சிக்கி உணவு கூட இல்லாமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருப்பதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுபற்றி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதை அடுத்து அவர்களை மீட்கும் முயற்சியில் அவர் இறங்கினார். நேற்று இரவு தெலுங்கானா ஏ.டி.சி. துஷார் ஸ்ரீயிடம் காஷ்மீரில் தமிழக லாரி டிரைவர்கள் சிக்கி இருக்கும் தகவலை கூறி உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

    அதன்பேரில் ஜம்முவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பாதுகாப்பு படையினர் லாரி டிரைவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 18 டிரைவர்களையும் மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை முகாமில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுபற்றி ஸ்ரீநகரில் சிக்கியுள்ள டிரைவர்களில் ஒருவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் 12-ந் தேதி பாலக்காட்டில் இருந்து 18 லாரிகளில் கேபிள்களை ஏற்றிக்கொண்டு காஷ்மீருக்கு புறப்பட்டோம். கடந்த 20-ந் தேதி ஸ்ரீநகருக்கு சென்றடைந்தோம். அங்கு பனிப்பொழிவு மிகக் கடுமையாக உள்ளது.

    பனிக்கட்டிகளால் எல்லா பகுதிகளும் மூடிக் கிடக்கின்றன. ஸ்ரீநகரில் இருந்து லடாக் 170 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் பனி உறைந்து கிடப்பதால் ரோடுகள் மறைந்துவிட்டன. எங்களால் அங்கிருந்து நகர முடியவில்லை.

    பனி உறைந்து கிடக்கும் வாகனங்கள்

    கடுமையான பனியின் காரணத்தால் ஓட்டல்கள் அனைத்தையும் மூடி விட்டனர். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக தவித்தோம். தமிழ்நாட்டிலிருந்து எடுத்து வந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.

    என்னுடன் இருக்கும் டிரைவர்கள் அனைவரும் சேலம் ஆத்தூர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இதுபற்றி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வீடியோ மூலம் தகவல் அனுப்பினோம்.

    இதை அறிந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் 6 மாதம் வரை வாகனங்கள் செல்ல முடியாது என்று ராணுவ தரப்பில் கூறினார்கள்.

    ஆனால் சரக்கை ஏற்றி அனுப்பிய முதலாளிகள் எப்படியாவது அங்குதான் கொண்டு இறக்க வேண்டும். ரோடு சரி இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது என்கிறார்கள். தொடர்ந்து இங்குள்ள நிலவரத்தை பற்றி சொல்லி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×