search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundarajan"

    • விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பியபோது தவறி விழுந்தார்.
    • உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர்.

    இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பிய தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கார்பெட் தடுக்கி கால் தவறி கீழே விழுந்தார்.

    உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது.

    இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. ஓவியம், சிற்பம் உட்பட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி உரம், பூச்சி கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றையும் கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.

    கத்திரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி,பலா, வெண்டை ஆகியவற்றோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.

    கவர்னர் தமிழிசை இன்று காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்டார். சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகர் வரவேற்றார். கைதிகளின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை கவர்னர் பாராட்டினார்.

    சிறை கைதிகள், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகள் சாகுபடி செய்திருப்பதையும் வெகுவாக பாராட்டினார். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை கவர்னர் தமிழிசை நட்டார். அங்குள்ள கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிககள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறை வளாகத்தில் கைதிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளது. சிறை கைதிகள் விளைவித்த விவசாய பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தண்டனை காலம் முடிந்த கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக மனிதாபிமானம் மற்றும் சட்டரீதியாக அனுகப்படும். காரைக்கால் சிறை முழுவதுமாக கட்டி முடிக்க 2 ஆண்டாகும். அதுவரை அங்குள்ள கைதிகள் புதுவை சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில் ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. அவர்களுடைய கல்வி, சமூக உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம். குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம் என்று மீட்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்கள் கூறினர்.
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த 18 லாரி டிரைவர்கள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பணியில் சிக்கி உணவு கூட இல்லாமல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருப்பதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுபற்றி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதை அடுத்து அவர்களை மீட்கும் முயற்சியில் அவர் இறங்கினார். நேற்று இரவு தெலுங்கானா ஏ.டி.சி. துஷார் ஸ்ரீயிடம் காஷ்மீரில் தமிழக லாரி டிரைவர்கள் சிக்கி இருக்கும் தகவலை கூறி உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

    அதன்பேரில் ஜம்முவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் தொடர்பு கொண்டார். இதையடுத்து உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பாதுகாப்பு படையினர் லாரி டிரைவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 18 டிரைவர்களையும் மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களை முகாமில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுபற்றி ஸ்ரீநகரில் சிக்கியுள்ள டிரைவர்களில் ஒருவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த மாதம் 12-ந் தேதி பாலக்காட்டில் இருந்து 18 லாரிகளில் கேபிள்களை ஏற்றிக்கொண்டு காஷ்மீருக்கு புறப்பட்டோம். கடந்த 20-ந் தேதி ஸ்ரீநகருக்கு சென்றடைந்தோம். அங்கு பனிப்பொழிவு மிகக் கடுமையாக உள்ளது.

    பனிக்கட்டிகளால் எல்லா பகுதிகளும் மூடிக் கிடக்கின்றன. ஸ்ரீநகரில் இருந்து லடாக் 170 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் பனி உறைந்து கிடப்பதால் ரோடுகள் மறைந்துவிட்டன. எங்களால் அங்கிருந்து நகர முடியவில்லை.

    பனி உறைந்து கிடக்கும் வாகனங்கள்

    கடுமையான பனியின் காரணத்தால் ஓட்டல்கள் அனைத்தையும் மூடி விட்டனர். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக தவித்தோம். தமிழ்நாட்டிலிருந்து எடுத்து வந்த உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது.

    என்னுடன் இருக்கும் டிரைவர்கள் அனைவரும் சேலம் ஆத்தூர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். இதுபற்றி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வீடியோ மூலம் தகவல் அனுப்பினோம்.

    இதை அறிந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை எடுத்த நடவடிக்கையால் தற்போது ராணுவ முகாமில் பாதுகாப்பாக வசதியாக இருக்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் 6 மாதம் வரை வாகனங்கள் செல்ல முடியாது என்று ராணுவ தரப்பில் கூறினார்கள்.

    ஆனால் சரக்கை ஏற்றி அனுப்பிய முதலாளிகள் எப்படியாவது அங்குதான் கொண்டு இறக்க வேண்டும். ரோடு சரி இல்லை என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது என்கிறார்கள். தொடர்ந்து இங்குள்ள நிலவரத்தை பற்றி சொல்லி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×