என் மலர்
நீங்கள் தேடியது "viduthalai siruthaigal katchi"
- ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி.
- அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தி உள்ளோம். திராவிட அரசியலில் முன்னோடி, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் அம்பேத்கருக்கு முன்னோடியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
ஓட்டேரி சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயரை சூட்டிய மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி கல்லூரி விடுதிகளுக்கு சமூகநீதி விடுதி என்று பெயரை மாற்றம் செய்து அறிவித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை விடுதலை சிறுத்தை வரவேற்கிறது.
தேர்தல் களப்பணிகள் விடுதலை சிறுத்தைகள் முதன்மையானது அல்ல. தேர்தல் நெருங்கி வரும்போது அதனை தீவிரப்படுத்துவோம். அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி சேர்ந்தால் கூட்டணி பலமாக இருக்கும் என்ற வியூக கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி கட்டுக்கோப்பான கூட்டணி. அதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திப்போம். புதிய மாவட்டச் செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்ற முடியாது. பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றியுள்ளது.. முக்கிய சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்எல்ஏ, தலைமை நிலைய செய லாளர் பாலசிங்கம், பாவலன், சேகுவாரா, மேலிட பொறுப்பாளர்கள் செல்லத்துரை, இரா. செல்வம், மாவட்டச் செயலாளர்கள் சேத்துப்பட்டு இளங்கோ, கரிகால் வளவன், சௌந்தர், வக்கீல் அப்புனு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை.
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.
திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
திருமாவளவன் குடியை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறாரா ? அல்லது புது முடிச்சு போட அழைப்பு விடுக்கிறாரா ? என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால், புதிய முடிச்சுக்காததான் அதிமுக, விஜய் கட்சிக்கு எல்லாம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் என்னவென்றால் மதவாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க மாட்டாராம்.
மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. இது அப்பட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதற்கும், புதிய அணியை திரட்டுவதற்கும் தான் திருமாவளவனின் புதிய யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால், மது தான் இவர்களது கொள்கை என்றால், ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் என்ன செய்துக் கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி உள்பட போதையால் பல பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
மதுபோதையில் தான் தமிழகத்தில் அத்தனை பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. திடீரென திருமாவளவனுக்கு ஒரு ஞானோதயம் வந்திருக்கிறது. இந்த ஞானோதயம் எதற்கு வந்திருக்கிறது என்றால், 2026ம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வந்ததின் பேரில், ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு மது ஒழிப்பை ஒரு காரணமாக அவர் சொல்கிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.
- கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருமாவளவன் அளித்த பேட்டி வருமாறு:-
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என அங்குள்ள சில இனவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக மக்களின் கருத்துக்களையே பிரதிபலித்தார். அது கர்நாடகாவிற்கு எதிரானது என்று அவரது திரைப்படத்திற்கு கன்னடர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கன்னடர்களின் இந்த போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

2 மாநிலங்களை சேர்ந்த தயாரிப்பாளர், வெளியீட்டாளர்கள் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும். ரஜினியோடு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்பதை ஏற்க இயலாது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான போக்காகும்.
காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை சில இனவாத அமைப்புகள் சீண்டுவதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #Kaala #viduthalaisiruthaigalkatchi #thirumavalavan
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான சர்வம் என்ற தொண்டு நிறுவனம் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பூத்துறை என்ற இடத்தில் உள்ளது.
அதை பார்வையிடுவதற்காக கவர்னர் பன்வாரிலால் வந்தார். அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக திருச்சிற்றம்பலம் ரோட்டில் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் கவர்னர் சென்னையில் இருந்து பூத்துறைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் காரில் வந்து பூத்துறை கிராமத்துக்கு செல்லும் நுழைவு பாதையில் குவிந்தனர்.
அவர்கள் கருப்பு கொடி காட்டுவதற்கு தயாரானார்கள். உடனே போலீஸ் டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
அதன் பிறகு கவர்னர் சர்வம் தொண்டு நிறுவனத்துக்கு சென்று இடங்களை சுற்றி பார்த்தார்.






