என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள்தொகை கணக்கெடுப்பு"

    • தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
    • உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?

    மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்றும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதம் அளிக்க தயாரா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க., எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.

    அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

    ஒன்றிய பாஜக அரசின் இந்த சதியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதனால் பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் அணிதிரட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

    அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக் கூறி வந்தவர்களின் குட்டு இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது. இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து.

    இப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்ல போகிறார். தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் அமித்ஷா அவர்களே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
    • தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது பேசிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை இரு கட்டமாக நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. எனவே 16 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    • இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
    • பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.

    இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
    • மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    இந்தியாவில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    பா.ம.க. சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் சென்னை தி.நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பது தொடர்பாக கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார். இதில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சுதர்சன நாச்சியப்பன், வக்கீல் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தலைவர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று சாதிவாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்கள். மேலும் சமூக நீதியை காப்பாற்ற சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார்கள்.

    பா.ம.க. சார்பில் இன்று நடைபெறும் சமூக நீதி பாதுகாப்புக்கான சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்களும், வல்லுநர்களும் தங்களது கருத்துக்களை முழுவதுமாக எடுத்துரைத்தனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று மாலை வரை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

    • மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.
    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சாதிவாரிக் கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்டை உடனே நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையான சாதிவாரிக் கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக நடத்திட வேண்டும்.

    ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணமாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×