என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caste census"

    • 50 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும்.
    • தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும்.

    நாடு தழுவிய அளவில் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், மத்திய அரசு இந்த விசயத்தில் மவுனம் காத்து வந்தது. ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. தங்களின் வற்புறுத்தல் காரணமாக மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுபுக்கான காலக்கெடு, கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.

    மேலும் 50 சதவீதம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்யும் அரசிலமைப்பின் 15(5) பிரிவை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும்.

    இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக இது தொடர்பாக மவுனம் காத்து வந்தது.

    இதற்கிடையே ஒரு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சமூக பாதுகாப்பு, இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத்ியுள்ளார்.

    மேலும், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட பயணத்திற்கான முதல்படி. மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகள் பற்றிய விரிவான மறுஆய்வுக்கு வழிவகுக்கும். இடஒதுக்கீடு மீதான தன்னிச்சையான உச்சவரம்பும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது.
    • சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஜி.எஸ்.டி கவுன்சில் என்பது மோடி போடும் வரி இல்லை. எல்லா மாநில நிதியமைச்சர்களும் அடங்கியதுதான் கவுன்சில். நடுத்தர மக்கள் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்ற வாதம் தவறானது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்னதாகவே வரி இருந்தது. முன்னதாக இருந்ததை விட ஜிஎஸ்டி வந்த பின் வரி விகிதம் குறைந்துள்ளது.

    * தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது.

    * சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது.

    * நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    * நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக?

    * குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று

    * தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை.

    • ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
    • மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபடவுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

    பிரதமர் மோடி தலைமையில் நேற்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே பீகார், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததன் விளைவாக தான் மத்திய அரசு தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் படங்களுக்கு பால் ஊற்றி கொண்டாடினர்.

    • பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
    • மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பது ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரை தனது எக்ஸ் பதிவில், "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு, தலைவர் ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • காங்கிரசின் முன்னெடுப்பை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது
    • 4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் கூறி வந்த மோடி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அறிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, "சாதிவாரி கணக்கெடுப்பு என்ற காங்கிரஸின் கொள்கையை பாஜக அரசு ஏற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் 90% மக்கள் அதிகார பொறுப்பை ஏற்பார்கள். இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ரத்த வேண்டும்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பு எங்களுடைய இலக்கு. பாஜக அரசு அதை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 4 சாதி மட்டுமே இருக்கிறது எனக் கூறி வந்த மோடி, 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதை அறிவித்துள்ளார்.

    11 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஞானோதயம் வந்து மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை கொண்டுவந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக தற்போது அறிவிப்பு என்பது தெரியாது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை, காங்கிரசின் முன்னெடுப்பை ஏற்று மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்.

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்து வருகிறார். அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில் "மத்திய அரசின் கீழ் கணக்கெடுப்பு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சிகள் செய்யும் மாநிலங்களில் சாதிவாரி என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக அந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.

    1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

    • அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • மீடியாக்களில் சில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ரத்த குரலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாக செய்தி பொய்யானது.

    கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படவில்லை.

    இந்த அறிக்கை தொடர்பாக சிறப்பு அமைச்சரவை கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அமைச்சரவை கூடி, ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு, உரத்த குரலுடன் விவாதம் நடைபெற்றதாக மீடியாக்களில் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாக இது தொடர்பாக கூறியதாவது:-

    நேற்று அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை இன்னும் முடிவடையவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மீடியாக்களில் சில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ரத்த குரலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாக செய்தி பொய்யானது. எங்களுடைய கருத்துகனை முன்வைத்தோம். அவ்வளவுதான். வாக்குவாதமோ, குரலை உயர்த்தி பேசிய சம்பவங்களோ நடைபெறவில்லை. ஆலோசனைகள் கொடுக்கப்பட்டது. அதைத்தவிர வேறும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு சித்தராமையாக தெரிவித்தார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து ஆலோசனைப்படுத்தப்படும்.

    கர்நாடகா மாநிலத்தில் ஹெச். கந்தராஜு தலைமையில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முந்தைய சித்தராமையாக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பணி முடிவடைந்தது. பின்னர் கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டு கே. ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் அறிக்கை தயார் செய்தது.

    ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகா மாநில முதல்வரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வருகிற 17ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின் இது தொடர்பாக பேசுகிறேன் என்றார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்குப் பிறகு நான் இது தொடர்பாக பேசுவேன்" என்றார்.

    கடந்த 11ஆம் தேதி சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வறிக்கையை கர்நாடக மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

    • மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர்.
    • முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்து. அந்த அறிக்கையை கடந்த 2024 பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார்.

    இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது வரும் 17-ந்தேதி நடைபெறும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது

    இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அந்த அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கணக்கெடுப்பின்படி,  மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகை 4.18 கோடியாகவும், பட்டியல் சாதியினரின் (SC) மக்கள் தொகை 1.09 கோடியாகவும், பட்டியல் பழங்குடியினரின் (ST) மக்கள் தொகை 42.81 லட்சமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர். எனவே அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஓபிசி-களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 31 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்த ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் பரிவித்துள்ளது.

    இதன்மூலம் ஓபிசி பிரிவில் இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். இந்த இரண்டு சமூகங்களை சேர்த்தவர்களே கர்நாடக அரசியலில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது. லிங்காயத் சமூகம் மாநிலத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது.

    மேலும் மாநிலத்தில் 75 லட்சத்து 27 ஆயிரம் பேர் (18.08 சதவீதம்) உள்ள முஸ்லிம் மக்களை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

    மேற்கூறிய இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளுடன் சேர்த்து மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 85% ஆக உயரும். 

    • காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மல்லிகார்ஜூன கார்கே மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், "காலதாமதத்தால் ஏராளமான மக்கள் நிலத்திட்டங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டில் இருந்து 10 வருடத்திற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. போர், எமர்ஜென்சி மற்றும் மற்ற நெருக்கடியான நேரங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    1931 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்பே, மகாத்மா காந்தி நமது உடல்நிலையை மதிப்பிடுவதற்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதுபோல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான பரிசோதனையாகும் எனக் கூறியிருந்தார்" என கார்கே தெரிவித்துள்ளார்.

    • 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
    • 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.

    இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

    ×