என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்"

    • சந்திர நாகமல்லையா (வயது50) என்பவர் கொடூரமாக கொல்லப் பட்டார்.
    • சந்திர நாகமல்லையா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.

    அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் டல்லாசில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திர நாகமல்லையா (வயது50) என்பவர் கொடூரமாக கொல்லப் பட்டார்.

    மனைவி மற்றும் மகன் கண்முன் சக உணவக ஊழியர் யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் என்பவர் அவரை அரிவாளால் தலையை துண்டித்து கொன்றார்.

    பின்னர் அந்த தலையை தரையில் பந்து போல உருட்டி சென்று அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். கொலையுண்ட சந்திர நாகமல்லையா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.

    இந்த கொலை சம்பவம் அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெசால் கைது செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து ட்ரூத் சமூகவலை தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டல்லாசில் சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவை சேர்ந்த சட்ட விரோத குடியேறியால் மனைவி மற்றும் மகன் முன்னிலையில் இந்த மதிப்புமிக்க தலைவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

    இது காட்டுமிராண்டி தனமானது. நம் நாட்டில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்க கூடாது. இத்தகைய நபரை நாட்டில் அனுமதிக்க கூடாது.

    கைதான குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, வாகன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக முன்பு கைது செய்யப்பட்ட கியூபாவை சேர்ந்த இந்த நபர் திறனற்ற ஜோபைடன் ஆட்சியில் நம் தாய் நாட்டில் விடுவிக்கப் பட்டார்.

    இது போன்ற சட்ட விரோத குடியேறி குற்றவாளி மீது எனது நிர்வாகம் மென்மையாக இருக்காது. தேசிய பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்டி நோம், அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி உள்பட என்னுடைய நிர்வாகத்தில் உள்ள பலர் அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக மாற்றும் பணியில் அற்புதமான வேலை செய்து வருகின்ற னர்.

    போலீஸ் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

    இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

    • ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.
    • இந்திய இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போர் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்தன. இதனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.

    இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்தது.

    அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது ரஷியா. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

    மேலும், ரஷிய ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    • இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
    • பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.

    இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • 25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • 25 வயதில் கைது செய்யப்பட்ட ஷாஜகான் 62 வயதில் நாடு திரும்பியுள்ளார்.

    வங்கதேசத்தில் 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.

    திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை கைது செய்தனர்

    25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பும் வேறு வழக்கிலும் அவரை போலீசார் தொடர்புபடுத்தியதால் அவரது விடுதலை சாத்தியமில்லாமல் போனது

    இந்நிலையில், ஜாரா அறக்கட்டளையின் உதவியினால் 37 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினரிடம் ஷாஜகான் ஒப்படைக்கப்பட்டார்.

    அவர் கைது செய்யப்படும் போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இப்போது தான் முதன்முறையாக தனது மகனின் முகத்தை ஷாஜகான் பார்த்துள்ளார்.

    தனது விடுதலை குறித்து பேசிய ஷாஜகான், "என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன். எனக்கு மறு பிறவி எடுத்தது போன்று உள்ளது. இந்த வாழ்நாளில் நான் என சொந்த ஊருக்கு திரும்புவேன் என்று நான் நினைக்கவில்லை. என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது ஜாரா அறக்கட்டளைக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர், தான் குடும்பத்துடன் சிறைக்கைதிகளை போல அவதிப்படுவதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    துபாய்:

    கேரளாவை சேர்ந்த மதுசூதனன் கடந்த 1979-ம் ஆண்டு ஷார்ஜா வந்துள்ளார். அங்கு கூலி வேலை செய்த அவர் 1988-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வந்து அங்கு கூலி வேலை செய்த ரோகினி என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்றாண்டுகளில் அவரது பணி அனுமதிக்காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

    ஆனால், ஒரு குழந்தை பிறந்து விட்ட நிலையில் குடும்பத்தை பிரிய முடியாது என்பதால் அவர் அங்கேயே சட்டவிரோதமாக தங்க தொடங்கினார். அதன் பிறகு சரியான வேலை கிடைக்காமல் குடும்பத்தை ஓட்டிய அவருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன.

    முதல் குழந்தைக்கு மட்டுமே அவரால் பாஸ்போர்ட் பெற முடிந்தது. மதுசூதனன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால், மற்ற குழந்தைகளுக்கு எவ்வித ஆவணமும் பெற முடியவில்லை. பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை.

    இதனால், பள்ளி செல்லாமலேயே வளர்ந்த 4 குழந்தைகளுக்கும் அவரது தாயார் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற பல முறை அரசு பொது மன்னிப்பு வழங்கினாலும், தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்பதால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.

    மனைவி இலங்கையை சேர்ந்தவர், குழந்தைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை இதனால், அவர் இந்தியாவுக்கும் திரும்ப முடியாது. வெறும் பிரெட் மற்றும் தண்ணீரை குடித்து சிறைக்கைதிகளை போல தங்களது வாழ்க்கை நடந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள மதுசூதனன், அமீரக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    11 நாடுகள் வழியே பயணித்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பின்னர் அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை செய்த இந்தியர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    வெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது.

    அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், ஒன்றரை வருடங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவை இலக்காக கொண்டு 2016-ம் ஆண்டு பிரேசில் சென்ற ஹர்பிரீத் சிங், அங்கிருந்து பொலீவியா சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரு நாட்டை அடைந்துள்ளார். பின் கொலம்பியா, பனாமா, கவுதமமாலா உள்ளிட்ட 11 நாடுகளை கடந்து இறுதியாக அமெரிக்க அண்டை நாடான மெக்ஸிகோவை எட்டியுள்ளார்.

    பின்னர், அங்கிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஹர்பிரீத் சிங் நுழைந்துள்ளார். அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை பார்த்த அவர் போலீசாரிடம் சிக்கி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    அமெரிக்காவை நோக்கிய ஹர்பிரீத் சிங்கின் பயணத்தின் போது அவரது பாஸ்போர்ட் திருடு போயுள்ளது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற முயன்றுள்ளார். இது தெரிய வந்த பின்னர் அந்த ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×