search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Election officer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
    • கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வசதியாக மார்க்-3 என்கிற மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கூட்டம் ஜனவரி 16-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டு இருந்தது. அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை கழகம் ஏற்க மறுத்துள்ளது. தலைமை கழக நிர்வாகிகள் அதனை வாங்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை மாற்ற முயற்சி நடப்பதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, மூத்த வக்கீல்கள் சூரியபிரகாஷ், எஸ்.கே. நவாஸ் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தேனி பாராளுமன்றத் தொகுதியில் மே 19-ம் தேதி நடைபெறவிருக்கும் மறுவாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அ.திமு.க. வேட்பாளருக்குச் சாதகமாக திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதனால், இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகியிருக்கும் அத்தனை துண்டுச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கோருகிறோம்.

    கடந்த ஏப்ரல் 18 அன்று வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கு வசதியாக, கோவையில் இருந்து சட்டவிரோதமாக தேனிக்கு கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக, காங்கிரசும், தி.மு.க.வும் ஏற்கனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமான புகார்களை கொடுத்துள்ளன. இந்தப் புகார்களை பெற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரி, கோவையில் இருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்ட 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படும் என்றும் தேர்தல் நடைமுறையில் எந்த குறைபாடும் இராது, அப்படி இருக்குமானால், அது தடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    ஆனால், மீண்டும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் எடுத்து வந்துள்ளனர் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளோம். தற்போதுள்ள இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் துணை முதல்- அமைச்சரின் மகனான, அ.திமு.க. வேட்பாளருக்கு சாதகமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட விரோத உள்நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கும் தேர்தல் அலுவலர் அ.தி.மு.க. தேர்தல் முகவர் போலவே செயல்படுவதோடு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களின் வாக்குகளைத் திருப்பி, முறைகேடுகள் மூலம் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியைத் தட்டிப்பறிக்க நினைக்கிறார்.

    அதனால் கோவையில் இருந்தும், திருவள்ளூரில் இருந்தும் தேனிக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உடனடியாக நீக்குவதோடு, மக்களுடைய வாக்குகளைத் திருத்த நினைக்கும் அ.தி.மு.க. வேட்பாளரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, நியாயமான தேர்தலை தேனியில் நடத்தி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    டி.டி.வி. தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    முதலமைச்சரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும்,  பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார்.



    டி.டி.வி. தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதறகு தடை விதித்து உத்தரவு பிறக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு அரசு துறைகளிலும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். வெளிமாநில பொது பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் உமாசங்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு உமாசங்கர் சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த உமாசங்கர், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவர் மத பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் நோயாளிகள் பலர் அவரை தேடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றனர். இதுபற்றிய தகவல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது.

    மாநில தலைமை தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அவருக்கு பதில் இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகார் பார்தி புதிய தேர்தல் பார்வையாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். #LoksabhaElections2019
    தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சராசரியாக 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் சராசரியாக 75.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெரம்பூரில் குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம்.

    ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர்நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லி இருக்கிறோம்.

    கேள்வி:- 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 73.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது 2 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதே? நிறைய இடங்களில் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இல்லாதது, பலர் தேர்தலை புறக்கணித்தது இதற்கு காரணமா?


    பதில்:- இப்போது 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதற்கு மேல் நான் கருத்து சொல்ல முடியாது.

    கே:- தர்மபுரி தொகுதி நத்தமேடு, மோட்டார் குறிச்சி 4 வாக்குச்சாவடியில் பா.ம.க. வினர் கேமராக்களை திருப்பி வைத்து, தி.மு.க. ஏஜெண்டுகளை விரட்டி விட்டு ஓட்டு போட்டார்கள். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளாரே?

    ப:- நேற்று ஒரு சில கட்சியினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இன்று செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.

    கன்னியாகுமரியில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அதற்கும் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் வந்தாலும் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

    4 தொகுதிகளுக்கு தேர்தல் பற்றிய அறிவிப்பு 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    கே:- பறக்கும்படை சோதனை இனி 4 தொகுதிகளில் மட்டும் நடத்தப்படுமா அல்லது தமிழகம் முழுக்க நடத்தப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்தப்படும். இது பற்றிய அதிகாரப்பூர்வ சிறப்பு அறிவிப்பு தேர்தல் கமி‌ஷனில் இருந்து பின்னர் வரும்.

    கே:- நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே?

    ப:- குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.

    ப:- பார்க்கலாம் இது பொதுவாக தவறுதான்.

    கே:- எத்தனை இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்?

    ப:- 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பை அரசியல் கட்சியினர் கண்காணித்துக் கொண்டே இருக்கலாம். மே 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து மின்னணு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.

    கே:- பறக்கும்படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி கொடுக்கப்படுமா?

    ப:- அந்தந்த மாவட்டங்களில் எங்கெல்லாம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அங்கு ஆவணங்களை சரியாக காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரம் காட்டியவர்களுக்கு பணத்தை ஏற்கனவே திருப்பி கொடுத்துள்ளோம். தொடர்ந்து பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    வருமானத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆதாரத்தை காட்டினால் திருப்பி கொடுத்துவிடுவார்கள். அல்லது வருமானவரித்துறை சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கே:- சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எத்தனை?

    ப:- வடசென்னையில் 63.47 சதவீதமும், தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

    கே:- நகரப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளதே?

    ப:- வழக்கமாக நகரப் பகுதிகளில் ஓட்டுகள் குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். நகரப்பகுதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. அதனால் கூடுதலாக ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். பொது மக்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.

    கே:- பூத் சிலிப் கொண்டு செல்லாதவர்களை பல இடங்களில் ஓட்டுபோட அனுமதிக்கவில்லையே?

    ப:- பூத்சிலிப் இல்லாமல் அடையாள அட்டை எடுத்து சென்றவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை எடுத்து செல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
    தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றம் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்ட பகுதிகளிலும், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளிலும் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சம் தென்சென்னையில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    18 சட்டமன்றத் தொகுதிகளைப் பொருத்தவரை 75.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில் 82.26 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout
    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார். #TNByPoll #SathyaPrathaSahoo
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய தேர்தல் கமி‌ஷன் தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவித்தால் தேர்தலை நடத்துவோம்.

    அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் வழக்கு இன்னும் முடிவுக்கு வராததால் அதில் தற்போது தேர்தல் நடத்த இயலாது. திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து விட்டது. அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி உள்ளோம்.

    தேர்தல் வேட்புமனு பெறப்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் உள்ளனர். அவர்களது பேச்சில் ஏதாவது விதிமீறல் இருந்தால் விளக்கம் கேட்கப்படும்.



    தேர்தல் விதிமீறல் குறித்து அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பில் இருந்தும் புகார்கள் வருகின்றன. அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ரூ.1500 பணம் கிடைக்கும் என்று பேசியதாக தி.மு.க. கொடுத்த புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அவரது அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழகத்தில் இதுவரை ரூ. 30 கோடி ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.4.45 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. 209 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 94 கிலோ தங்கம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNByPoll #SathyaPrathaSahoo
    1,500 ரூபாய் உதவித்தொகை தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ரொக்கமாக பணம் எடுத்து செல்வதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரையில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னையில் மட்டும் 3 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 30 பேரும், சட்டசபை இடைத்தேர்தலில் 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்ற 21,999 பேரில் 18 ஆயிரம் பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். 32 பேரின் துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


    அ.தி.மு.க.வுக்கு வாக்கு அளித்தால் ரூ.1,500 வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளரிடம் கூறியதாக தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் என்ன பேசினார் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம். அவரது அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் அடைந்தது தொடர்பாக சட்டமன்றத்தில் இருந்து இன்னும் எங்களுக்கு தகவல் வரவில்லை. சூலூர் தொகுதி காலியிடம் என்று தகவல் வந்தால்தான் தேர்தல்கமி‌ஷனுக்கு அதை நாங்கள் தெரிவிப்போம். அதன்பிறகுதான் அங்கு தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #MinisterJayakumar
    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார். #ParliamentElection
    சென்னை:

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பைத் தொடர்ந்து சட்டசபையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    அந்த 20 தொகுதிகளின் விவரம் வருமாறு:-

    1. திருவாரூர், 2.திருப்பரங்குன்றம், 3. ஆண்டிப்பட்டி, 4. பெரம்பூர், 5. அரவக்குறிச்சி, 6.பாப்பிரெட்டிபட்டி, 7. பெரியகுளம், 8.பூந்தமல்லி, 9.அரூர், 10.பரமக்குடி, 11. மானாமதுரை, 12.சோளிங்கர், 13.திருப்போரூர், 14.ஒட்டப்பிடாரம், 15.தஞ்சாவூர், 16. நிலக்கோட்டை, 17. ஆம்பூர், 18. சாத்தூர், 19. குடியாத்தம், 20. விளாத்திகுளம்.

    அரசியல் சாசன சட்ட விதிகளின்படி இந்த 20 தொகுதிகளுக்கும், காலி இடமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த 20 தொகுதிகளுக்கும் மார்ச் மாதம் ஏப்ரல் மாதங்களில் 6 மாத கால அவகாசம் முடிகிறது.

    எனவே இந்த 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் மூன்றாவது வாரத்துடன் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலம் முடிகிறது.

    எனவே பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து 18 தொகுதிகள் காலியாகி உள்ளன. இது தொடர்பாக ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு ஆவணங்களை நாங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.


    இனி அவர்கள்தான் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்வார்கள். பெரும்பாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. 20 தொகுதிகளில் இடைத்தேர்தலில் கணிசமாக வெற்றி பெறுவதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதே புத்துணர்ச்சியுடன் களம் இறங்கலாம் என்று தி.மு.க. கருதுகிறது. மேலும் 20 தொகுதி இடைத்தேர்தல் மூலம் புதிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகளை நடத்தலாம் என்றும் தி.மு.க. நினைக்கிறது.

    எனவே 20 தொகுதிகளுக்கும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 11-ந்தேதிதான் அறிவிக்கப்பட உள்ளது.

    அதற்கு பிறகு 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகளை முடிவுக்கு கொண்டுவர தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் தேவைப்படும். எனவே டிசம்பரில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த சாத்தியம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தலை பிப்ரவரியில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்கப்படும். 5 மாநில தேர்தல் டிசம்பரில் முடிந்து விடும்.

    எனவே 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அட்டவணை ஜனவரி மாதம் வெளியிடப்படலாம்.

    இவ்வாறு அந்த உயர் அதிகாரி கூறினார்.

    இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    தகுதி நீக்கம் காரணமாக காலியாக உள்ள எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகும். அந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கும்.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் யாராவது அப்பீல் செய்தால் 20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த இயலாது. மேல் முறையீடு இல்லாதபட்சத்தில் 20 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராவத் கூறினார்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது இதுவே முதல் தடவையாகும். #ParliamentElection
    ×