search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voting machines"

    • 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

     சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச் சாவடி அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது.

    இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் கூடுதலாக வருகிறது.

    இதை சேர்த்து பார்க்கும் போது 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,680 வாக்குச் சாவடி மையங்களில் 14,891 ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரியிலும் மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஓட்டு எண்ணப்படும் கல்லூரிகளில் இதற்காக 2 பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு பெட்டிகளை வைக்க வரிசைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ஓட்டு எண்ணுவதற்கு 2,500 முதல் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அங்கு சவுக்கு தடுப்பு கம்புகள், கம்பி வலைகள் கட்டப்பட்டு ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்பட்டு வருகிறது. பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் போது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார்-யார் பொறுப்பு அதிகாரிகள் என்று பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.


    இதே போல் அந்த அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க எந்தெந்த போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதோடு ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வளாகம் முழுவதும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவற்றை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்குள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    • பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு அறையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி பாராளுமன்ற தொகுதி வாக்கு பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், ஆகியவற்றை வாக்குப்பதிவு எந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    இப்பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும். இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய நேரடி பார்வையில் இப்பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது
    • அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார்

    ஈரோடு

    நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2875 பேலட் யூனிட்களும், 2184 கட்டுப்பாட்டு எந்திரங்க ளும், 2724 விவிபேட் எந்திரங்களும் என 7,783 எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த வாரம் பெங்களூரில் இருந்து 1400 பேலட் யூனிட்டுகளும், ஆயிரம் கண்ட்ரோல் யூனிட்டுகளும் திருச்சியில் இருந்து 700 விவி பேட் எந்திரங்களும் என 3100 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தம் 10883 எந்திரங்களின் சரிபார்க்கு ம் பணி இன்று தொட ங்கியது.

    ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த எந்தி ரங்கள் அனைத்தும் சரி பார்க்கும் முதல் கட்ட பணிகள் இன்று தொடங்கி யது.

    அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும் போது,

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் முதல் கட்டமாக சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறும் என்றார்.

    • ஓட்டுப்பதிவு எந்திரங்களின் தரம் குறித்து பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தி லுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரக் கிடங்கை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதா வது:-

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரக்கிடங்கில் பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நாளை முதல் ஒருமாத காலத்திற்கு பெங்க ளூர் பெல் நிறு வனம் மூலம் பொறியாளர்களால் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் தரத்தன்மை குறித்து பரி சோதிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமு கர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுபதிவு எந்திரங்களில் பராமரிப்பு பணிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பதுடன் இந்த பணிகள் முடியும் வரை முழுமையாக பாதுகாப்பு பணியில் போலீ சார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் மாரி செல்வி, தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

    நாமக்கல்:

    நாடு முழுவதும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு, பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) இருந்து புதிய எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மொத்தம் 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 580 புதிய வாக்காளர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் (வி.வி.பேடு), ஆகிய கருவிகள் இன்று லாரி மூலம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன.

    கலெக்டர் ஸ்ரேயாசிங் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரியில் இருந்து இறக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

    இந்த பாதுகாப்பு அறையில், ஏற்கனவே 4,214 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்களர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் ஆகிய எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பில் உள்ளன.

    அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள்
    • 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

    15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என விதி உள்ளதால் மாநகராட்சி வளாகத்தில் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டன.

    1167 வாக்குப்பதிவு எந்திரங்கள் 635 கட்டுப்பாட்டு கருவிகள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    • அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    இரவு 9.15 மணிக்கு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவ னுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை வழங்கினார்.

    இதற்கிடையில் அவ்வப்போது எண்ணி முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டு ப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பு அறையில் கொண்டு சென்று அதற்கான இடத்தில் வைத்தனர்.

    ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த அறையில் தேர்தல் தொடர்பான எந்த பொருட்களும் இல்லாமல் அகற்றினர்.

    பின்னர் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.

    அங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஓரிரு நாளில் ஓட்டுப்பெட்டிகள் அங்கிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவல கத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.

    • வருவாய்த்துறையின் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டு உள்ள மின்னணு எந்திரங்களான 771 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 310 கட்டுப்பாட்டு கருவி என மொத்தம் 1081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த் துறையின் கண்காணிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கணபதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது.
    • வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     பல்லடம் :

    தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    அவற்றில் பழுதடைந்த 68 மின்னனு எந்திரங்கள் மற்றும் 60 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரங்கள்( கண்ட்ரோல் யூனிட்), 206 வி.வி.பேட் ஆகியவை பழுதுநீக்கி சரி செய்வதற்காக பெங்களூரூவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் நந்தகோபால், தேர்தல் வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் பார்வையிட்டனர்.

    • இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    • வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
    • முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.

    தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.

    இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    வாக்கு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.

    அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.

    அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

    சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

    ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

    இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.

    எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.

    நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.

    தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

    உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

    ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

    இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

    ×