search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polling centers"

    • வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம்-8 ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா ? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களையும் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    ×