என் மலர்
நீங்கள் தேடியது "Polling Centers"
- வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 576 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்கும் வகையில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்ட 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என மொத்தம் 256 வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.
இதில் 246 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளனர். 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாடு கருவிகள், ஒரு வி.வி.பேட் என 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
நேற்று மாலையுடன் இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வெளியூரைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபம், சமுதாயக்கூடத்தில் யாராவது வெளிநபர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு 237 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதி, சாமியான பந்தல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் மொத்தம் 24 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு சி.என்.சி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்று காலை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் அந்தந்த மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் பணி செய்யும் அலுவலர்கள், அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஒவ்வொரு லாரியிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீசார், டிரைவர், சாதாரண போலீசார், ஒரு அலுவலர் ஆகியோர் வாகனங்களிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாகனங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை ஈரோடு தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 97 வகையான பொருட்களுக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள் தாங்கள் கொண்டு செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து வேனில் வந்த போலீசார் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட போலீசார் துணை ராணுவத்தினர் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களில் தங்களது பாதுகாப்பு பணியை தொடங்கினர்.
இதேப்போல் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இன்று இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்த ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்கள் வாக்குச்சாவடி மையங்களிலேயே தங்கி இருந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன் பின்னர் காலை 7 மணி முதல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி உடன் தேர்தல் நிறைவடைந்ததும் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொரியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 661 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமை சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் 1.1.2019-ஐ தகுதி நாளாக கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000-ம் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம். மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம்-8 ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா ? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களையும் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். மேலும் நாமக்கல் கோட்டை நகரவை தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.






