search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Verification of Electronic"

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது
    • அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார்

    ஈரோடு

    நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது. இதன் முதல் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்க ளை மாவட்டம் வாரியாக தயார்படுத்தும் பணி நடைபெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2875 பேலட் யூனிட்களும், 2184 கட்டுப்பாட்டு எந்திரங்க ளும், 2724 விவிபேட் எந்திரங்களும் என 7,783 எந்திரங்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த வாரம் பெங்களூரில் இருந்து 1400 பேலட் யூனிட்டுகளும், ஆயிரம் கண்ட்ரோல் யூனிட்டுகளும் திருச்சியில் இருந்து 700 விவி பேட் எந்திரங்களும் என 3100 எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தம் 10883 எந்திரங்களின் சரிபார்க்கு ம் பணி இன்று தொட ங்கியது.

    ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த எந்தி ரங்கள் அனைத்தும் சரி பார்க்கும் முதல் கட்ட பணிகள் இன்று தொடங்கி யது.

    அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறும் போது,

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் முதல் கட்டமாக சரிபார்க்கும் பணிகள் இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெறும் என்றார்.

    ×