search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்குப்பதிவு எந்திரங்களை 46 நாட்கள் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    வாக்குப்பதிவு எந்திரங்களை 46 நாட்கள் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

    • 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச் சாவடி அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது.

    இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் கூடுதலாக வருகிறது.

    இதை சேர்த்து பார்க்கும் போது 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,680 வாக்குச் சாவடி மையங்களில் 14,891 ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரியிலும் மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஓட்டு எண்ணப்படும் கல்லூரிகளில் இதற்காக 2 பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு பெட்டிகளை வைக்க வரிசைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ஓட்டு எண்ணுவதற்கு 2,500 முதல் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அங்கு சவுக்கு தடுப்பு கம்புகள், கம்பி வலைகள் கட்டப்பட்டு ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்பட்டு வருகிறது. பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் போது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார்-யார் பொறுப்பு அதிகாரிகள் என்று பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.


    இதே போல் அந்த அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க எந்தெந்த போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதோடு ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வளாகம் முழுவதும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவற்றை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்குள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×