search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "evks elangovan"

    • தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாற்றி டெபாசிட்டாவது வாங்கி விடலாம் என முயற்சிக்கின்றார். இதன் காரணமாக அவர் அடிக்கடி இங்கே வந்து கொண்டிருக்கின்றார். மோடிக்கு சவால் விடுகின்றேன். முடிந்தால் அவர் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும். அப்போது அவரை பிரதமராக ஏற்றுக்கொள்கிறேன்.

    சி.ஏ.ஏ. சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தூக்கி எறியப்படும். மோடி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, மோடியை பற்றி மற்றவர்கள் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.

    உக்ரைனில் ஆட்டோ பாம் போட தயாராக இருப்பதாகவும், மோடி பேசியதால் அவர்கள் நிறுத்திவிட்டதாக ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மோடியின் மொத்த உருவமே பித்தலாட்டம், பொய் புரட்டு தான்.

    மத்திய அரசு திட்டங்களை தான் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக மோடி கூறுகிறார். திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை ஜெயலலிதா செய்தார். கடந்த 3 ஆண்டு காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார். பெண்களுக்கு அவர் செய்திருக்கும் திட்டங்கள் மற்ற மாநிலங்களும் அவரை பார்த்து பின் தொடர்ந்து வருகின்றன. அவ்வளவு பெரிய சாதனைகளை மூன்றாண்டு காலத்திற்குள் முதலமைச்சர் செய்திருக்கின்றார்.

    போதை கலாச்சாரம் என்பது அரங்கசாமி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து புழக்கத்தில் இருக்கிறது. இதைத்தடுக்க அ.தி.மு.க. தவறி விட்டது. தற்பொழுது நடவடிக்கை எடுக்கும் காரணத்தினால் நிறைய பேர் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்.

    இது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் குஜராத்தில் இருந்தும், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. டெபாசிட் வாங்கினாலே பெரிய விஷயம். தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளங்கோவனின் மகன் திருமகன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.

    இதனால் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர்.

    2019-ல் நடந்த மக்களை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியை சந்தித்த ஒரு வேட்பாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
    • சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. குறிப்பாக 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்.

    நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெண்கள், தாய்மார்கள் முதலமைச்சர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

    சென்னையில் தற்போது மிக அதிக அளவில் மழை பெய்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் கூட அதை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தி வருகிறது. நிவாரண பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அடுத்து 3-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் பற்று வைத்து ஆதரவு தந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை குஷ்பு சேரி சம்பந்தமாக பேசியது குறித்து உங்களது கருத்து என்ன என்று கேட்டதற்கு இளங்கோவன் கூறும்போது,

    நான் அதைப்பற்றி ஒண்ணும் கூற விரும்பவில்லை. எனக்கு ஒன்றும் அதில் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு அவருடைய பேச்சின் முழு விவரம் தெரியவில்லை என்று பதிலளித்தார்.

    நடிகை குஷ்பு சமீபத்தில் சேரி குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறிய இந்த கருத்து இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.
    • 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றும் முறையிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை டெல்லி மேலிடம் அந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வாயிலில் மகளிர் அணியினர் கருப்பு உடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.

    இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது:-

    பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களை அழகிரி புறக்கணிக்கிறார். கூட்டங்களுக்கு எல்லோரையும் அழைப்பதில்லை. அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை. வேலை போன போலீஸ் அதிகாரி ஒருவரை பா.ஜனதாவுக்கு தலைவராக நியமித்துள்ளார்கள்.

    அவர் தினம் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.

    எனவே புதிய தலைமை வேண்டும் என்று இரண்டு, மூன்று முறை டெல்லி மேலிடத்தில் கூறியிருக்கிறோம். கண்டிப்பாக மாற்றுவோம் என்றார்கள். கடந்த மாதமும் டெல்லியில் புகார் செய்தோம். அப்போதும் மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மாற்றவில்லை.

    புதிய தலைமை தேவை என்பதை பலமுறை மேலிடத்தில் தெரிவித்தாகிவிட்டது. ப.சிதம்பரம், நான், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்றக் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எல்லோருமே சொல்லி வந்துள்ளோம்.

    இவரை வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் பாரத்தை வேறு யார் மீதாவது வைத்துவிட்டு வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது.
    • ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறார்.

    நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது. ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது. அண்ணாமலையின் கனவு புலியை நினைத்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கும்.

    அண்ணாமலை பாத யாத்திரையை நிறைவு செய்யும்போது அவர் பதவியில் இருக்க மாட்டார்.

    பதவியில் இருக்கிறாரோ இல்லையோ கர்நாடக மாநிலத்தில் அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது செய்த ஊழல்களுக்காக கைது செய்யப்படுவது உறுதி.

    இவ்வாறு இளங்கோவன் பரபரப்பாக பேசினார்.

    • பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
    • பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நாட்டில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, பிரதமராக எந்த வேலையும் செய்வது கிடையாது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது கிடையாது. உள்நாட்டில் இருக்கின்ற பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கே பிரதமர் செல்லவில்லை. ஆனால், பிரதமருக்கு அரசியலில் தனக்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ? அவர்கள் மீது எல்லாம் வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறார்.

    அதன் ஒரு அங்கமாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டு, அவரை அழைத்து பொய் விசாரணை நடத்தி வருகின்றனர். பயமுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம், தோற்கடித்து விடலாம் என நினைக்கும் பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். ராணுவம் அல்லது வருமான வரித்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். கண்டிப்பாக இது நடக்காது. பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.

    தற்போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை அமலாக்கத்துறை அநாவசியமாக பிடித்து விசாரித்து கொண்டு இருக்கிறதோ அதேபோல் மத்தியில் ஆட்சி மாறிய உடன் கண்டிப்பாக மோடி, அமித்ஷா, அவர்களுக்கு வேண்டியவர்களும் கம்பிகளுக்கு பின்னால் போவார்கள் என்பது உறுதி. புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்டது என சொல்வார்கள்.

    அதைப்போல காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் பெங்களூரில் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பார்த்து பா.ஜ.க.வினரும் அவர்களது தோழமை கட்சிகளுடன் கூட்டம் போட்டுள்ளனர். அங்கு இருக்கிற நபர்கள் யாரேன்று பார்த்தால், தொண்டானாகவும், தலைவராகவும் இருக்கிற ஜி.கே.வாசனை போன்றவர்கள் தான். ஜி.கே.வாசன் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் நடத்துகிற அளவுக்கு கூட்டம் நடத்த முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் இருக்கிற கூட்டணி மிகப்பெரிய தோல்வி அடையும். தமிழக அரசின் தலைமை செயலகத்தி ல் அமலாக்கத்துறை சோதனை நடத்த போலீசாரும், அரசும் அனுமதிக்க கூடாது. அரசு தலைமை அலுவலகத்தில் சோதனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்பேரில் நாட்டில் இருக்கின்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து மதவாத மற்றும் சர்வாதிகாரியான மோடியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
    • அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ஈரோடு :

    ஈரோட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 3 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.

    ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே.பரமசிவம், கோபி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்கவேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்ல வேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
    • கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு உடனே புறப்பட்டு சென்றார்.

    • டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் இருந்து இளங்கோவன் வழக்கமான உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மாதம் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

    உடல் நிலை சீரான அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    முழுமையாக குணம் அடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது.

    அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே நடந்தே வந்தார்.

    அங்கிருந்து காரில் வீட்டுக்கு சென்றார். அவருடன் நாசே ராமச்சந்திரனும் சென்றார். இளங்கோவன் வழக்கமான உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார்.

    அவர் கூறும்போது என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்போது நலத்தோடு இருக்கிறேன் என்றார்.

    • கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னும் ஓரிரு நாட்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா தொற்றில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.
    • உடல் நலம் தேறி வருவதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

    சென்னை:

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

    இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று பிற்பகலில் திடீரென்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.

    இப்போது அவருக்கு உடல் நிலை தேறி விட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதையடுத்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நல்ல நிலையில் பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்ததும் அவர்கள் கூறியதாவது:-

    இளங்கோவன் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தார். அவரது உடல் நலம் தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமும், விசாரித்த காங்கிரஸ் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

    அவர் பூரண நலத்துடன் அவருக்கே உரிய பாணியில் விரைவில் எல்லோரையும் சந்திப்பார் என்றனர்.

    • ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    ×