என் மலர்
நீங்கள் தேடியது "evks elangovan"
- நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது.
- ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது.
சென்னை:
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறார்.
நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது. ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது. அண்ணாமலையின் கனவு புலியை நினைத்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கும்.
அண்ணாமலை பாத யாத்திரையை நிறைவு செய்யும்போது அவர் பதவியில் இருக்க மாட்டார்.
பதவியில் இருக்கிறாரோ இல்லையோ கர்நாடக மாநிலத்தில் அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது செய்த ஊழல்களுக்காக கைது செய்யப்படுவது உறுதி.
இவ்வாறு இளங்கோவன் பரபரப்பாக பேசினார்.
- பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
- பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாட்டில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, பிரதமராக எந்த வேலையும் செய்வது கிடையாது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது கிடையாது. உள்நாட்டில் இருக்கின்ற பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கே பிரதமர் செல்லவில்லை. ஆனால், பிரதமருக்கு அரசியலில் தனக்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ? அவர்கள் மீது எல்லாம் வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டு, அவரை அழைத்து பொய் விசாரணை நடத்தி வருகின்றனர். பயமுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம், தோற்கடித்து விடலாம் என நினைக்கும் பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். ராணுவம் அல்லது வருமான வரித்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். கண்டிப்பாக இது நடக்காது. பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
தற்போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை அமலாக்கத்துறை அநாவசியமாக பிடித்து விசாரித்து கொண்டு இருக்கிறதோ அதேபோல் மத்தியில் ஆட்சி மாறிய உடன் கண்டிப்பாக மோடி, அமித்ஷா, அவர்களுக்கு வேண்டியவர்களும் கம்பிகளுக்கு பின்னால் போவார்கள் என்பது உறுதி. புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்டது என சொல்வார்கள்.
அதைப்போல காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் பெங்களூரில் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பார்த்து பா.ஜ.க.வினரும் அவர்களது தோழமை கட்சிகளுடன் கூட்டம் போட்டுள்ளனர். அங்கு இருக்கிற நபர்கள் யாரேன்று பார்த்தால், தொண்டானாகவும், தலைவராகவும் இருக்கிற ஜி.கே.வாசனை போன்றவர்கள் தான். ஜி.கே.வாசன் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் நடத்துகிற அளவுக்கு கூட்டம் நடத்த முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் இருக்கிற கூட்டணி மிகப்பெரிய தோல்வி அடையும். தமிழக அரசின் தலைமை செயலகத்தி ல் அமலாக்கத்துறை சோதனை நடத்த போலீசாரும், அரசும் அனுமதிக்க கூடாது. அரசு தலைமை அலுவலகத்தில் சோதனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்பேரில் நாட்டில் இருக்கின்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து மதவாத மற்றும் சர்வாதிகாரியான மோடியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
- அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு :
ஈரோட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னுடைய பொதுவாழ்வில் சிவாஜி கணேசன், சோனியாகாந்தி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய 3 பேருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை மறக்கமாட்டேன். எனது உயர்விற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர்கள்.
ஈரோடு கச்சேரி வீதிக்கு திருமகன் ஈவெரா சாலை என பெயர் வைத்ததற்கு அமைச்சர் முத்துசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து நிறைவேற்றுவேன். அமைச்சர் முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதிக்கு மட்டும் அல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
ஈரோடு பகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்த எஸ்.கே.பரமசிவம், கோபி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகிய இருவருக்கும் சித்தோடு மற்றும் கோபியில் சிலை வைக்கவேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
இத்தனை ஆண்டுகளாக கோபி எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடியவர் ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு செல்ல வேண்டியவராகவே இருக்கும் நிலையில் அங்கு எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அமைச்சர் முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
- கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை சட்டசபைக்கு வந்தார். அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு உடனே புறப்பட்டு சென்றார்.
- டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரியில் இருந்து இளங்கோவன் வழக்கமான உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த மாதம் சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.
உடல் நிலை சீரான அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
முழுமையாக குணம் அடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே நடந்தே வந்தார்.
அங்கிருந்து காரில் வீட்டுக்கு சென்றார். அவருடன் நாசே ராமச்சந்திரனும் சென்றார். இளங்கோவன் வழக்கமான உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார்.
அவர் கூறும்போது என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. இப்போது நலத்தோடு இருக்கிறேன் என்றார்.
- கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இன்னும் ஓரிரு நாட்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- கொரோனா தொற்றில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.
- உடல் நலம் தேறி வருவதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.
சென்னை:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று பிற்பகலில் திடீரென்று லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். இதை தொடர்ந்து இரவில் உடல் நிலை சீரானது.
இப்போது அவருக்கு உடல் நிலை தேறி விட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கொரோனா தொற்றில் இருந்தும் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதையடுத்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் நாசே ராமச்சந்திரன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நல்ல நிலையில் பேசிக் கொண்டிருந்தார். வெளியே வந்ததும் அவர்கள் கூறியதாவது:-
இளங்கோவன் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தார். அவரது உடல் நலம் தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமும், விசாரித்த காங்கிரஸ் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
அவர் பூரண நலத்துடன் அவருக்கே உரிய பாணியில் விரைவில் எல்லோரையும் சந்திப்பார் என்றனர்.
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இளங்கோவனின் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
- சட்டசபையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 177-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
இந்த நிலையில் சட்டசபையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு 177-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2-வது வரிசையில் சிந்தனை செல்வனுக்கு பின்புறம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
- அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.