search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK MLAs"

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சட்டசபை துணைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் அரசு தலைமைக் கொறடா செழியன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர்களின் ஒரு மாத ஊதியமான ரூ.35,70,000, திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 91,34,500 என மொத்தம் 1,27,04,500 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்கள்.

    • ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர்.
    • அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக தி.மு.க.வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஏ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கர பாணி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் 31 பேர்களை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்து தி.மு.க. மேலிடம் பணியாற்றி வருகிறது.

    ஈரோடு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கான வார்டுகளை பிரித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர். அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி ஓட்டு கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள்-கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கேற்ப ஏரியாவை பிரித்து கட்சி நிர்வாகிகளை பணியாற்ற நியமித்துள்ளனர்.

    இவர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை வைத்து வீடு வீடாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகிறார்கள்.

    யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிபடுத்தி வருகின்றனர். இதை வைத்துதான் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளுக்கு எவ்வளவு ஓட்டு என்று கணிக்கப்படும்.

    இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக மேலும் பல அமைச்சர்கள் ஈரோடு தொகுதிக்கு வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஈரோடு தொகுதிக்கு செல்ல வேண்டும் என்று தலைமையில் இருந்து உத்தரவு வந்ததால் அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.

    இவர்கள் அமைச்சர்கள் சொல்லும் கட்டளையை நிறைவேற்றும் செயல் வீரர்களாக பணியாற்றி வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களுடன் அவரது ஆதரவாளர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.

    இதேபோல் கூட்டணி கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இதனால் லாட்ஜ், அனைத்தும் நிரம்பி விட்டது. அங்கு இடம் கிடைக்காதவர்கள் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தனி வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    ஈரோட்டில் இடம் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள பவானிக்கு சென்று தங்கி அங்கிருந்து ஈரோட்டுக்கு வந்து செல்கின்றனர்.

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாள் விழா வருகிற 3-ந்தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி பிறந்தநாள் விழா, புதிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு விழா, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடக்கிறது.

    இதற்கான மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை தென்சென்னை மாவட்ட தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விழாவுக்காக 120 அடியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. அதை 3 மேடைகளாக வடிவமைக்கிறார்கள். நடுமேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அமர்வார்கள்.

    இன்னொரு மேடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 38 எம்.பி.க்கள் அமர்வார்கள். மற்றொரு மேடையில் புதிதாக வெற்றிபெற்ற தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.

    மேடையின் முன்பு 100 அடி உயரத்தில் தி.மு.க. கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அதேபோல் 100 அடி உயரத்தில் தி.மு.க. தலைவரின் வண்ண மின்விளக்கு கட்-அவுட் அமைக்கப்படுகிறது.

    மேலும் 70 அடி உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட தி.மு.க. கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் உதயசூரியன் வடிவ ஒளி விளக்குகள் அமைக்கப்படுகிறது.

    இதேபோல் மேடை அருகில் 70 அடி உயரத்தில் 12 கூட்டணி கட்சிகளின் கொடிக்கம்பங்களும் இடம் பெறுகிறது. இந்த கம்பங்களில் ஏற்றுவதற்கான அனைத்து கட்சிகளின் கொடிகளும் பூனாவில் தயாராகி வருகிறது.

    சைதாப்பேட்டையில் கலைஞர் பொன்விழா வளைவு உள்ளது. 45 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த வளைவையும் கருணாநிதி பிறந்தநாளையொட்டி புதுப்பிக்கின்றனர். அந்த பணிகளை மாவட்ட செயலாளரும் தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். அவருடன் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வெய்ட் அண்ட் சீ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- எதிர்க்கட்சியான தி.மு.க.வின் செயல்பாடு இனி சட்டசபையில் எப்படி இருக்கும்?

    பதில்:- சட்டமன்றம் கூடும்போது நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். தொலைக்காட்சியிலும் அதை ஒளிபரப்பத்தான் போகிறார்கள்.


    கேள்வி:- சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறீர்கள். அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

    பதில்:- பொறுத்து இருந்து பாருங்கள்.

    கேள்வி:- அரசு மீது தி.மு.க.நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமா?

    பதில்:- சட்டசபையில் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவித்த பிறகு அது குறித்து நாங்கள் முடிவு எடுப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இவர்கள் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.

    இந்நிலையில், 28-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்பதாக சட்டசபை செயலகத்திடம் தி.மு.க. தெரிவித்து இருந்தது. இதற்கு சபாநாயகர் ப.தனபால் அனுமதி அளித்திருந்தார்.

    அதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவி ஏற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
    தி.மு.க.வில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீதான ஊழல் வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVShanmugam #DMKMLAs
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்தது.

    இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கின்ற வரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கோட்டைவாசலை மிதிக்க முடியவில்லை. அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா கட்சியை ஒன்றிணைத்து ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.

    மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். காவிரி, முல்லைப்பெரியாறு தற்போதைய மேகதாது வரை எதிர்த்து குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே. அதேபோல் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க. தான்.

    எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுத்ததும் இல்லை, தீர்மானம் நிறைவேற்றியதும் இல்லை.

    எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். தற்போது முதல்-அமைச்சர் மீதே புகார் கூறுகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷா மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் எப்போதாவது பேசியுள்ளாரா?, புதியதாக தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று வழக்கு போட்டால் உடனடியாக அதற்கு தி.மு.க., கோர்ட்டில் தடை வாங்குகிறது.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்த்து தி.மு.க., கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. அத்தனை வழக்குகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல முறையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.

    எதற்கு எடுத்தாலும் அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீது நிலஅபகரிப்பு உள்பட ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தீர்ப்பு வரும், அப்போது யார் சிறைக்கு செல்வார்கள் என்று தெரியும்.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கியது நல்லதுதான். அப்போதுதான் இன்னும் சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு தர முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது, அதனை போக்குகிற வகையில் கொள்ளிடம்- விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காக தி.மு.க.வினர் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசுகிறார்’’ என்றார்.  #TNMinister #CVShanmugam #DMKMLAs
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKMLAs #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரச்சனைகளை முன் வைக்க தி.மு.க. ஆலோசித்து வருகிறது.


    இந்நிலையில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. #DMK #DMKMLAs #MKStalin
    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்திலும் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.

    மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்துள்ள தி.மு.க., தேர்தலை எதிர் கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.


    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பூங்கோதை, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    தினகரன் அணியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படுகிறது. #DMK #MKStalin
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. #DMK #DMKMeet
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். #DMK #DMKMeet
    13 மாதங்களுக்கு பிறகு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நிலுவையிலிருந்த ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் சம்பளம் கிடைத்ததுள்ளது. #DMK

    சென்னை:

    தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்ற ஆண்டு மாத சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தி 1 லட்சத்து 5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டது.

    இதை பல கட்சிகள் விமர்சித்தன.

    சம்பளம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர்.

    இதை காரணம் காட்டி, தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு புதிய சம்பளம் வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதை அடுத்து கடந்த 13 மாதங்களாக பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் வாங்கி வந்தனர்.

    அதே நேரத்தில் புதிய சம்பளத்தை வாங்க அனுமதிக்கும் படி ஸ்டாலினிடம் துரைமுருகன் மூலம் எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் புதிய சம்பளத்தை வழங்கும் படி சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.

    தி.மு.க தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களே சம்பளம் வாங்குகிறோம். நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டதால் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் புதிய சம்பளம் வாங்க முடிவெடுத்துள்ளோம் என்று கடிதத்தில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த கடிதத்தின் அடிப்படை யில் தி.மு.க எம்.எல்.ஏ.க் களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

    தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைந்த நாள் வரை (ஆகஸ்ட் 7-2018) கணக்கிட்டு அவருடைய வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

    ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    சட்டசபை கூட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “பல்வேறு விளக்கங்களை கூறி வரவுக்குள் தான் செலவுகள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தையும்” தெரிவித்தார். ஆனால் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது பற்றி பேசவில்லை.

    இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம் என்று சட்டசபை செயலக அதிகாரி கூறினார்.
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி சட்டசபையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

    நேற்று அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தவிர அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன்அன்சாரி ஆகியோர் உள்பட 97 பேர் கலந்து கொண்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஏ.வ.வேலு ஆகியோர் பங்கேற்கவில்லை.

    இதனால் சட்டசபையில் ஆளும் அ.திமு.க. எம்.எல்.ஏ.க்கள் தவிர தனியரசு, டி.டி.வி. தினகரன் உள்பட 116 பேர் கலந்து கொண்டனர். பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாமல் சட்டசபை கூட்டம் நடந்தது. அவ்வாறு சட்டசபையை நடத்தலாமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234 ஆக இருக்கும் பட்சத்தில் குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே சபையை நடத்தலாம். அதாவது 10-ல் 1 பங்கு உறுப்பினர்கள் சபையில் இருந்தாலே போதுமானது. சபையை நடத்த முடியும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் சபையை நடத்த முடியுமா? என்ற கேள்வியே எழாது.

    ஓட்டெடுப்பு என்று வரும் போது சபையில் எத்தனை பேர் பங்கேற்கிறார்களோ அதில் பெரும்பான்மையை கணக்கிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×