என் மலர்
நீங்கள் தேடியது "Corruption cases"
- நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
- மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை
மத்திய அரசு ஊழியர் மீது மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக, சிபிஐ-இடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநில புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, சிபிஐ-யின் அனுமதி இல்லை என்ற காரணத்திற்காகச் செல்லாது என்று அறிவிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (PC Act) 17-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை ஒரு மாநில ஏஜென்சி, மத்திய ஏஜென்சி அல்லது எந்தவொரு காவல்துறை ஏஜென்சியும் விசாரிக்க முடியும்; ஆனால், விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை" என்று தெரிவித்தனர்.
நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே, மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ-இடமும், மாநில அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தபோது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருந்தபோதிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 'சிபிஐ மட்டுமே இந்த வழக்கை அல்லது விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று கூறுவது தவறானது' என உயர் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தக்கரை திடலில் நடந்தது.
இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கின்ற வரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியால் கோட்டைவாசலை மிதிக்க முடியவில்லை. அ.தி.மு.க. பிளவுபட்டதால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா கட்சியை ஒன்றிணைத்து ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.
மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார். காவிரி, முல்லைப்பெரியாறு தற்போதைய மேகதாது வரை எதிர்த்து குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே. அதேபோல் ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது அ.தி.மு.க. தான்.
எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. குரல் கொடுத்ததும் இல்லை, தீர்மானம் நிறைவேற்றியதும் இல்லை.
எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். தற்போது முதல்-அமைச்சர் மீதே புகார் கூறுகிறார்கள். அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷா மரணம் குறித்து மு.க.ஸ்டாலின் எப்போதாவது பேசியுள்ளாரா?, புதியதாக தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று வழக்கு போட்டால் உடனடியாக அதற்கு தி.மு.க., கோர்ட்டில் தடை வாங்குகிறது.
அதே நேரத்தில் அ.தி.மு.க. கொண்டு வரும் அனைத்து நல்ல திட்டங்களையும் எதிர்த்து தி.மு.க., கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. அத்தனை வழக்குகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல முறையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றோம்.
எதற்கு எடுத்தாலும் அனைத்து அமைச்சர்களும் சிறை செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள 22 பேர் மீது நிலஅபகரிப்பு உள்பட ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தீர்ப்பு வரும், அப்போது யார் சிறைக்கு செல்வார்கள் என்று தெரியும்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கியது நல்லதுதான். அப்போதுதான் இன்னும் சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு தர முடியும். விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை இருக்கிறது, அதனை போக்குகிற வகையில் கொள்ளிடம்- விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘கொடநாடு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி மீது கூறப்படும் குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்காக தி.மு.க.வினர் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசுகிறார்’’ என்றார். #TNMinister #CVShanmugam #DMKMLAs






