என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல்- திமுக எம்பி, எம்எல்ஏக்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை
Byமாலை மலர்24 Dec 2018 6:35 AM GMT (Updated: 24 Dec 2018 6:35 AM GMT)
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. #DMK #MKStalin
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்திலும் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.
மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்துள்ள தி.மு.க., தேர்தலை எதிர் கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பூங்கோதை, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தினகரன் அணியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படுகிறது. #DMK #MKStalin
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்திலும் தேர்தல் களம் களை கட்டி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. முழுவீச்சில் களம் இறங்கி உள்ளது.
மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை உறுதி செய்துள்ள தி.மு.க., தேர்தலை எதிர் கொள்வதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தினகரன் அணியில் இருந்து விலகி கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படுகிறது. #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X