search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Meeting"

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
    • ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    உடனடி பதிலடி

    தமிழக முதல்-அமைச்சரின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும் வெளி உலகத்திற்கு எடுத்து சொல்லும் தகவல் தொழில்நுட்பத்துறையின் பணி மிகவும் மகத்தானது. ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும்.

    பா.ஜ.க.வினர் பல்வேறு பழைய தகவல்களையும், நடைபெறாத சம்பவங்களையும் நமது திட்டங்களுக்கும், கட்சிக்கும் எதிராக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு உடனடியாக நாமும் பதிலடி கொடுக்கும் வகையில் நமது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும்.

    எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிடும் கட்சி தி.மு.க. கிடையாது. எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஓன்றே குலம் ஓருவனே தேவன் என்ற வழியில் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும் போது, ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரிடம் சென்று சேரும் வகையில் முதல்-அமைச்சரின் திட்டங்களை, செயல்பாடுகளை, தி.மு.க.வின் வரலாறுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் 75 ஆயிரம் வாக்குகளை நாம் பெற்றால் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம். அதற்கு உங்களுடைய பங்கு அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பகுதி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட்ராபட், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செய லாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கிளை, வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிய ரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. மத்திய அரசு நிதி பற்றா க்குறையை ஏற்படுத்திய போது தேர்தல் காலத்தில் அறிவித்த 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.

    பெண்களுக்கு விடியல் பயணம், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு நன்றி.

    தேர்தல்பணிக்குழு 100க்கு ஒரு நபர் என தேர்வு செய்து தலைமை கழகத்துக்கு அனுப்பி விரைவில் வாக்குசாவடிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்குவது, வேலூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொள்வது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலா ளர்கள் ராஜாமணி, சுந்தர ராஜன், தாமரைச்செல்வி, பொருளாளா் விஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், கண்ணன், வெங்கிடுசாமி, பாலு, செல்வராஜ், சேக்சிக்கந்தா் பாட்சா, முத்துக்குமாரசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொகுதி மேலிட பார்வையாளர் சம்பத், வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்பி ரமணியன், ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ், பரந்தா மன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தையன், சோமசுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசியதா வது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளு மன்ற தொகுதியில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். வருகின்ற 17-ந் தேதி ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நகர் செய லாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூ ராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெ யராமன், துணை தலை வர்கள் சுவாமிநாதன், கார்த்திக், மாவட்ட தொண்ட ரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்தி கேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், பொறியாளர் அணி ராகுல் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:

    ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.

    முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.

    கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.

    • பல்வேறு சோதனைகளை கடந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்து வருகிறார்.
    • செப்டம்பர் 15-ந்தேதி முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் டூவிபுரத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநில பேச்சாளர் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    பல்வேறு சாதனை

    1996- 2001 திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டுவந்த கணினி கல்வி மூலம் படித்து சாதனை படைத்த தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். ஆட்சிக்கு ஆளுநரால் இடையூறு, ஒன்றிய அரசு பாராமுகம் என்று பல்வேறு சோதனைகளை கடந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்து வருகிறார். செப்டம்பர் 15-ந்தேதி முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம் என பேசினார்.

    நிகழச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், கவுன்சிலர்கள் பவானி மார்ஷல், சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், தெய்வேந்திரன், அந்தோணிபிரகாஷ் மார்ஷல், சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செந்தில்குமார், நாராயணன், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்அப்தனபால், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, செல்வராஜ், பாலகுருசாமி, சிங்கராஜ், கீதா செல்வமாரியப்பன், அனல்சக்திவேல் மற்றும் கருணாமணி, பெனில்டஸ், மகேஸ்வரசிங், பெல்லா, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அடுத்த பிரதமர்

    தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோணி தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. அப்போது லியோனி பேசுகையில் பேசியதாவது:-

    பிரதமரால் மணிப்பூரில் 50 நாட்களுக்கு மேலாக நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளுக்கு சென்று உலா வருகிறார். தமிழகத்திற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த இந்தியாவின் பிரதமர் தமிழகத்தில் இருந்து வருவார் என்று பேசியுள்ளார். மோடி மீது அவருக்கே நம்பிக்கை இல்லை. நம்முடைய தலைவர் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமர் என்ற நிலை உருவாகியுள்ளது.

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஆளும் கட்சியினர் பதட்டத்தில் உள்ளனர். காரணம் தமிழக முதல்-அமைச்சர் திட்டங்கள், கொள்கைகள் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டுவரப்பட்டது. இதன் எதிரொலி தான் ஆளும் கட்சியினருக்கு அரை கூவலாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மேலூரில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
    • மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

    மேலூர்

    மேலூர் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் செக்கடி திடலில் நடந்தது. நகர செயலாளர் முகமது யாசின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்கள் சேகர், ரமேஷ், மணிமாலா குணா, பொருளாளர் மலம்பட்டி ரவி முன்னிலை வகித்தனர். அவை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார்.

    மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திர பிரபு, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா பேகம் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு பாண்டி, ரகுபதி, துரைபுகழேந்தி, கென்னடியான், துரை மகேந்திரன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் எழில்வேந்தன், முருகானந்தம், அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

    சென்னை:

    சைதை மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சைதை மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை தேரடி திடலில் அமைச்சரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சைதை மேற்குப் பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, துணைமேயர் மு.மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் க.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் இரா.துரைராஜ், மா.அன்பரசன், வழக்கறிஞர்கள் எம்.ஸ்ரீதரன், ஆர்.ரவிச்சந்திரன், ராமாபுரம் வி.ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் எஸ்.பி. கோதண்டம், எம்.நாகா ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
    • நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புளியங்குடி:

    புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருவதை ஒட்டிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.

    நகர அவைதலைவர் வேல்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்குகிறார். நலத்திட்ட உதவிகள் முடிந்தவுடன் புளியங்குடி வழியாக செல்லும் அவருக்கு 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலாவதாக நமது மாவட்டத்தின் தொடக்க எல்லையில் நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகிலும், அடுத்து புளியங்குடி பஸ் நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், 3-வதாக சிந்தாமணியில் நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற, நீலகிரி எம்.பி. ராசாவுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் நகர தி.மு.க கூட்டம் வண்டிப்பேட்டை நகர கழக அலுவலகத்தில் நகர அவை தலைவர் ஆரோக்கிய தாஸ் தலைமையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு குன்னூர் நகர கழக செயலாளர் எம்.ராமசாமி சிறப்பான ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும், பொறுப்பேற்றுள்ள தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர், துணை பொது செயலாளர்கள் ஆகியோரின் பணிகள் சிறக்க வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

    நடைபெற்று முடிந்த 15-வது உட்கட்சி தேர்தலில் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக்குக்கு வாழ்த்துக்களையும், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்று, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நீலகிரி எம்.பி. ராசாவுக்கு சிறப்பான மாபெரும் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அக்டோபர் 15-ந் தேதி, பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து தி.மு.க. தலைவர் ஆலோசனைப்படி, இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாணவர் அணி செயலாளர் ஆகியோரின் அறிவிப்புக்கு இணங்க நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஊட்டியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொதுக்குழு உறுப்பினரும் நகர மன்ற தலைவருமான சீலா கேத்தரின், நகர மன்றத் துணைத் தலைவர் வாசிம் ராஜா, தலைமை பேச்சாளர் ஜாஹிர், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிச்சாமி, மணிகண்டன், சார்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் தலைமையில் நடந்தது.

    வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் முருகன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கில் பங்கேற்க ஆர்வமும் துடிப்பும் உள்ள இளைஞர்களை தேர்வு செய்யும் படிவங்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், நகர செயலாளர்கள் நிலக்கோட்டை ஜோசப் கோவில் பிள்ளை, வத்தலகுண்டு சின்னதுரை, அம்மைநாயக்கனூர் விஜயகுமார் மற்றும் வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் காதர் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார்.
    • மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (14ம் தேதி) திண்டுக்கல் வருகிறார். சாணார்பட்டி அருகே தோட்டனூத்தில் ரூ.17 கோடி யில் கட்டி முடிக்க ப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கான 321 வீடுகளை திறந்துவைத்து அதனை பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

    இதனை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்பது குறித்து பேசினார்.

    தாடிக்கொம்பு பேரூ ராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, பேரூராட்சி செயலாளர் ராமலிங்க சாமி, துணை செயலாளர்கள் காளிதாஸ், சுப்புலட்சுமி, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் நன்றி கூறினார்.

    • மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அர.சக்கரபாணி ஆலோசனைப்படி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தார்.

    தெற்கு ஒன்றிய லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர்பொன்ராஜ்,மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர் ஹரிஹரசுதன், ஒன்றியக் குழு பெருந்தலைவர் அய்யம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், தண்டபாணி, செல்லம்மாள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ×