search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polling agents"

    • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்றார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தொகுதி மேலிட பார்வையாளர் சம்பத், வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலசுப்பி ரமணியன், ஒன்றிய செயலா ளர்கள் தன்ராஜ், பரந்தா மன், பாலராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்தையன், சோமசுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசியதா வது:-

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி பாராளு மன்ற தொகுதியில் தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். வருகின்ற 17-ந் தேதி ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் நகர் செய லாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூ ராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெ யராமன், துணை தலை வர்கள் சுவாமிநாதன், கார்த்திக், மாவட்ட தொண்ட ரணி துணை அமைப்பாளர் வாவிடமருதூர் கார்த்தி கேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தவசதீஸ், பொறியாளர் அணி ராகுல் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களிடையே காணொளி காசி மூலம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள டிஎன்டி அருண் திருமண மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த காணொளி காட்சி மூலம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பத்தூர் நகரம், ஒன்றியம், கந்திலி கிழக்கு மேற்கு தெற்கு, ஒன்றியம், சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் பங்கேற்றனர்.

    இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழகம் முதலமைச்சரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது:-

    வாக்குசாவடி முகவர்கள் இனிவரும் காலங்களில் வாக்காளர்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் திருத்தம், புதிய வாக்கா ளர்கள்சேர்த்தல், உள்ளிட்ட படிவங்களை வாங்கி வாக்காளர்களுக்கு நிரப்பிக் கொடுக்க வேண்டும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.நல்லதம்பி எம் எல் ஏ திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
    • வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்துரையாடினார்.

    தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட முகவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    இதில் பங்கேற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, பரமகுரு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மாரிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் திருவேங்கடம் மாரிமுத்து மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
    • காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    அருப்புக்கோட்டை,

    அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சாகுல் ஹமீது,அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் ஏ.கே மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கொப்பைய ராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, நகர அவைத் தலைவர் கணேசன்.

    மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம்,ஒன்றிய குழு துணை தலைவர் உதயசூரியன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் சோலையப்பன், 6-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணி முருகன், வார்டு பிரதிநிதி பாண்டியராஜன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    மேலூர்

    மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/

    தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×