search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
    X

    கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

    • திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செய லாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலா ளரும் அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை யில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கிளை, வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவிய ரங்கம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது. மத்திய அரசு நிதி பற்றா க்குறையை ஏற்படுத்திய போது தேர்தல் காலத்தில் அறிவித்த 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு.

    பெண்களுக்கு விடியல் பயணம், சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி. அனைத்து மக்களுக்கும் சீரான குடிநீர் கிடைக்க கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வந்த அரசுக்கு நன்றி.

    தேர்தல்பணிக்குழு 100க்கு ஒரு நபர் என தேர்வு செய்து தலைமை கழகத்துக்கு அனுப்பி விரைவில் வாக்குசாவடிகளில் கணக்கெடுக்கும் பணியை தொடங்குவது, வேலூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொள்வது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர்கள் சீருடையில் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் மோகன், துணைச் செயலா ளர்கள் ராஜாமணி, சுந்தர ராஜன், தாமரைச்செல்வி, பொருளாளா் விஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், கண்ணன், வெங்கிடுசாமி, பாலு, செல்வராஜ், சேக்சிக்கந்தா் பாட்சா, முத்துக்குமாரசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×