என் மலர்
நீங்கள் தேடியது "Minister Senthil Balaji"
- செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டிருந்தது.
- 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர்-கண்டக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக 3 வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மீதமுள்ள 2 வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில்தான் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
போக்குவரத்து கழக முறைகேடு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த போக்குவரத்து கழக முன்னாள் நிர்வாக இயக்குனர்கள், என்ஜினீயர்கள் உள்பட 45 பேர் மீது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, ‘சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
- செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேலைக்காக பணம் கொடுத்ததாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் பணத்தை கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் மூலம்தான் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியால் தற்போது 30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாது. எனவே, அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்' என்றார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 'சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தான் தவறு செய்யவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக உள்ளார். அவர் சக்தி வாய்ந்த நபராக இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல்நிலையை ஒரு காரணமாக கூற முடியாது. எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி தனது உத்தரவில், 'செந்தில் பாலாஜி ஏற்கனவே ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 16-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தவிர வேறு எந்த சூழ்நிலை மாற்றமும் இந்த வழக்கில் ஏற்படவில்லை.
செந்தில் பாலாஜி தற்போதுவரை அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு முன்னதாக அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
செந்தில் பாலாஜி குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் எதையும் இந்த கோர்ட்டு கண்டறியவில்லை.
குற்றத்தின் தன்மை கடுமையாக உள்ளது. மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க இயலாது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என கூறி உள்ளார்.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
- திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினர் கைது செய்ததும் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை அம்பாள்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன்பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர். அப்போது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர்.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வாக்குமூலமும் அளித்துள்ளார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையில் தற்போதுதான் அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை ஏற்று வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறையினர் முடிவு செய்து உள்ளனர். செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் செந்தில்பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேரில் உள்ள என்ஜினீயர் திலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் போக்குவரத்துத்துறை மேலாளர் ஜெகன் நாதன் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் செல்போனில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வைத்திருந்த அதிகாரிகள் அந்த புகைப்படத்தை காட்டி வீடு, வீடாக விசாரணை நடத்தினர். அந்த நபர் நுங்கம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அமலாக்கத் துறையினர் தகவல்களை திரட்டினர். அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடை, டீ கடை உள்ளிட்ட இடங்களிலும் போட்டோவை காட்டி விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோன்று திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் மணல் குவாரிகளை குறி வைத்தும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.
- ஐகோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.
சென்னை:
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதல்ல என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சம்பிரதாயத்துக்காக அமைச்சராக நீடிக்கும் அவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. எந்த பொறுப்பும் வழங்காமல் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்க அனுமதித்து இருப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையிலும் தவறானது. அது மட்டுமல்ல இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது. நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்துக்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
ஆனாலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.
இதனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது:-
ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் நகல் ஆன்லைனில் வந்துவிட்டாலும், அதன் நகல் முறைப்படி அரசுக்கு நாளை கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதன்பிறகு ஐகோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.
செந்தில்பாலாஜி வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி இருந்தார். இப்போது ஐகோர்ட்டு நீதிபதிகளும் தீர்ப்பு கூறி விட்டனர்.
எனவே இதையும் மீறி செந்தில்பாலாஜியை அமைச்சராக நீடிக்க முதலமைச்சர் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.
எனவே ஐகோர்ட்டு தீர்ப்பின் நகல் முதலமைச்சருக்கு சென்றடைந்ததும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- செந்தில் பாலாஜி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
- ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதில் இரு கோர்ட்டுகளும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து, விசாரிக்க மறுத்துள்ளது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகியவற்றை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரித்தது. இந்த கோர்ட்டு, 2016-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின்படி, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டாகும்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு அமைத்து உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி ரவி விசாரிக்க மறுத்து விட்டார்.
ஜாமீன் மனுவை, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி உத்தரவிட்டார். உடனே ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் தாக்கல் செய்தபோது, அந்த மனுவை விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி மறுத்து விட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தான் முறையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சிறப்பு கோர்ட்டை செந்தில்பாலாஜி தரப்பு அணுகியபோது, விசாரணைக்கு எடுக்க மறுத்து நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அவரை ஓய்வு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்ததால், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்த ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதில் இரு கோர்ட்டுகளும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து, விசாரிக்க மறுத்துள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் என்று கூறி, இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்து மத்திய அரசு 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதேபோல, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஐகோர்ட்டுடன் ஆலோசனை செய்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையின்படி உருவாக்கப்பட்ட கோர்ட்டில்தான், செந்தில் பாலாஜி வழக்கு மாற்றப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.
ஆனால், இந்த கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டது. ஆனால், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்குத்தான் உள்ளது.
அதனால், இந்த ஜாமீன் மனுவை மட்டுமல்ல, செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கையும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டில் இருந்து, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
- சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார்.
- செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன.
சென்னை:
கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 120 பக்க குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த தகவல்கள் வருமாறு:-
போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக கிடைக்கப்பெற்ற பணத்தை செந்தில்பாலாஜி நேரடியாக பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கி கணக்கிலும், தனது மனைவி, சகோதரர் மற்றும் உறவினர்கள் சிலரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.
இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும், ஆவணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார்.
சகோதரர், உதவியாளர்கள் மற்றும் சில போக்குவரத்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் ஈட்டுவதற்கான உத்தியை செந்தில் பாலாஜி உருவாக்கி உள்ளார்.
இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில்பாலாஜி கூறினாலும், அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி அரங்கேற்றப்பட்டு உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, ஒவ்வொரு பணியிடத்துக்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த பணிக்காக யார், யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது போன்ற விவரங்களுடன் கூடிய பென்சிலால் எழுதப்பட்ட ஆவணங்களும், பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.
செந்தில் பாலாஜி தனது சகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களும் உள்ளன.
இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் ஆண்டுகளிலும், அதற்கடுத்த ஆண்டுகளிலும் உள்ள வருமானத்தை ஒப்பிடும் போதும் மிகப்பெரிய அளவில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும்போதும் முரண்பாடுகள் உள்ளன.
முறைகேடான இந்த பணம் யார் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. பொது ஊழியரான அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று அதனை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கான அத்தனை ஆதாரங்களும் உள்ளன.
இதுபோன்று பல்வேறு தகவல்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
- செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
- செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் காவேரி ஆஸ்பத்திரியில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 2 மாதங்களாகும் நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜூன் மாதம் 28-ந்தேதி வரை என உத்தரவிடப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதன்பின்னர் ஜூலை 26-ந்தேதி வரையில் 3-வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 11-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவலை பின்னர் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் இன்று நீட்டிக்கப்பட்டது. செந்தில்பாலாஜி மீதான வழக்கு விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு காணொளி வாயிலாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது அன்று புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி அன்று அழைத்துச் செல்லப்படுகிறார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படும்போது 28-ந்தேதி குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது.
- சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை:
கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.
இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.
அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார்.
சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.
குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.
- செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது.
சென்னை:
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினர்.
இந்த விசாரணையின்போது செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகளை கேட்டு விசாரித்தனர். பின்னர் செந்தில் பாலாஜி கடந்த 12-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறையினர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
- அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
- செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.
கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.