search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arjun sampath"

    • தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.
    • ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு முதல் கட்ட தேர்தலாக நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா நாடு வல்லரசாக வேண்டும். தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.


    ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கோர்ட்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது மேல்முறையீடு செய்து அதன் அடிப்படையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.


    தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெரும். மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட பா.ஜ.க. அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள்.

    கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா. பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்து. தற்போது அந்த கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் மட்டுமே உள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவை:

    கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    தடையையும் மீறி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை போலீசார் பீளமேடு பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
    • வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.

    இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.

    அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.

    பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
    • குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.

    அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது.
    • தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை :

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி உள்ளோம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது. லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி தோள் கொடுத்து செயல்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கே வழங்குவதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது. அப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்.அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து ஒருவர் பலியானார். இந்த கோவிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்.

    இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் அரசியல் கோமாளி என விமர்சித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவர்கள் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பவர்.

    சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. இந்த கோவில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்துள்ளது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதை அறியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார்.

    மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமைமிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

    திருப்பூர் :

    தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அவதுாறு பேச்சை கண்டித்தும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், இந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின் அர்ஜுன் சம்பத் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் மூலம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - இந்து மக்கள் கட்சி மீது அவதுாறு பரப்புகின்றனர்.அவதுாறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் நடந்தது. அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் பொருட்கள் வாங்க உத்தரவிடுகின்றனர். விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, குற்றச்சாட்டுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள தயாராக இல்லை. அடக்குமுறையை கையாள்கின்றனர்.

    இவ்வாறு, அவர் கூறினார்.

    • திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர்.
    • இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று முதல் 150 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல்காந்திக்கு எதிராக 'கோபேக்'இயக்கம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத் அறிவித்திருந்தார்.

    இதற்காக நேற்றிரவு கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அர்ஜூன்சம்பத்தை கைது செய்தனர்.

    இதனால் இந்துமக்கள் கட்சியினர் ஆவேசமடைந்து அவரை விடுதலைசெய்யுமாறு தெரிவித்தனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்டம் முழுவதிலும் இருந்து இந்து மக்கள் கட்சியினர் அங்கு விரைந்து வந்தனர்.

    இன்று காலை வரை அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ்நிலைய வாசலில் அமர்ந்து அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி கோஷமிட்டபடி இருந்தனர். அப்போது ஒருவர் போலீஸ் நிலையம் முன்பிருந்த மரத்தின்மீது ஏறி அவரை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கீழே இறக்கினர். மேலும் சிலர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் போலீஸ்நிலையம் முன்பு பதட்டமான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.
    • கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும்.

    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் வந்தே மாதரம் ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கு சென்று அதன் பிறகு ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ரத யாத்திரை வந்தது. நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் வந்து பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் ரத யாத்திரையானது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வேலூர் கோட்டையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த ரத யாத்திரை செல்ல இருக்கிறது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

    ஈரோட்டில் திருப்பூர் குமரன் பிறந்த மண்ணான சென்னிமலைக்கு சென்று வந்தோம். இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதியார் உரையாற்றிய நூலகத்திற்கு செல்ல உள்ளோம். இந்த பவள விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்டு நடைபெற்ற வன்முறை சம்பவம் ஆகும். போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்று உள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் வருவதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி அர்ஜுன் சம்பத் மனு கொடுத்துள்ளார்.
    • மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மதுரை

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை மதுரை மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது போலீஸ் கமிஷனரிடம் மதுரை ஆதீனத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி கோரிக்கை மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை ஆதீனம் தற்போது அரசியல்வாதிகளாலும், ரசிகர்களாலும், இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். எனவே குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

    மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார். நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலைய துறை அமைச்சர் மிரட்டி வருகிறார்.

    இந்து மத சமய நம்பிக்கைகள் சீர்குலைவதும், கோவில்கள் அறநிலையத் துறை பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிரான கருத்தைத்தான் ஆதீனம் வெளிப்படுத்தி உள்ளார். இது நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து அல்ல. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்விஜய் ரசிகர்கள் ஆதீனம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

    தாய், தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் அல்ல. எனவே விஜய் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

    எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியில் பணிகளை செய்து வருகிறார். அவருக்கு இந்து சமய அமைப்புகள் ஆதரவாக உள்ளன. அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்.அறநிலையத் துறை அமைச்சரே மிரட்டுவதால், மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    ஆதீனம் சர்ச்சைக்கு உள்ளான கருத்துக்களை சொல்லவில்லை . கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார். இந்த கருத்து எல்லா காலகட்டத்திலும் சொல்லப்பட்டது.

    சர்ச் சொத்து கிறிஸ்துவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிறபோது, இந்து ஆலய சொத்துக்கள் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்? எங்களது உரிமைக் குரலாக ஆதீனம் இருந்து வருகிறார்.

    தி.மு.க.வோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதற்கு மாநில அரசு செவி கொடுக்கவில்லை என்றால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இந்து தீவிரவாதி மற்றும் இந்து என்பது மாற்றான் சொல் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்த கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    இந்து என்பது மதம் சம்பந்தப்பட்டது அல்ல. அது ஒரு கலாச்சாரம். அடையாளம். கருட புராணத்திலேயே இந்துஸ்தானம் உள்ளது. இந்து என்பது வெறும் சொல் அல்ல. வாழ்வியல் நெறியாகும். இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் சுட்டுக்கொன்றார் என்பதற்காக அதனை சீக்கிய தீவிரவாதம் என்று கூற முடியுமா? ராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டி தமிழர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று கூறமுடியுமா?

    எனவே இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதன் மூலம் கமல் வரலாற்று பிழையை செய்துள்ளார். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. காந்தியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோட்சேயிடம் இந்து மதம் சொல்லவில்லை.

    விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது கமல் என்ன பாடுபட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி பாதிப்புக்குண்டான கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானது.

    இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுடன் கமலுக்கு ஏற்பட்ட தொடர்பே இதற்கு காரணம். தான் எழுதியுள்ள யார் மகாத்மா? என்கிற புத்தகத்தை கமல் படிக்க வேண்டும். இந்து என்பது மாற்றான் சொல் என்று கூறும் கமலுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஆவணங்களோடு தயாராகவே உள்ளேன்.


    கமல் தயாரா? தனது கருத்துக்கு கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

    இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

    ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்டிய இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #rahulgandhi #arjunsampath

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் குமரிக்கு வரும் ராகுல்காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என இந்து மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அஞ்சுகிராமம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அனுமதி இன்றி கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 119 பேர் மீது அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதே போல் அஞ்சு கிராமத்தில் ராகுல்காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா இளைஞரணி மாவட்ட செயலாளர் அருள் சிவா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருள்சிவா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #rahulgandhi #arjunsampath

    ×