என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arjun sampath"

    • சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது.
    • சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை வழிபட்டு அங்கு நடந்த சதுர்த்தி விழாவில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இது போன்ற நகரில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

    எனவே இங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய வேண்டும். நட்சத்திர ஏரியில் ரூ.33 கோடியில் நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அது முறையாக நடக்காததால் நடை பயிற்சி செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் போதை பொருட்களை ஒழிக்க தீவிரம் காட்டி வந்தபோதிலும் கஞ்சா காளான் விற்பனை அவ்வப்போது நடந்து வருகிறது.

    கொடைக்கானல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. தேச விரோதிகளின் புகழிடமாகவும் உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தோம். விண்வெளியில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து இஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போல அயன் டோம் அமைத்து ராணுவத்தினர் எதிரிகள் வீசிய ஏவுகணைகளை தகர்த்தனர். இந்திய ராணுவம் சர்வதேச அரங்கில் தலைசிறந்த ராணுவமாக மாறியுள்ளது.

    தமிழகத்தில் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். த.வெ.க. ஒரு அரசியல் கட்சி இல்லை. அது தி.மு.க.வின் ஏ டீமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தி.மு.க.வை எதிர்த்து பேசுகிறார்கள். அந்த கட்சியின் கொள்கையைதான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்கள் மாநாடு. ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட ரசிகர்கள்தான் பாவம். விஜய்யை பார்க்க வந்த ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா? அவர்களுக்கு ரசிகர்கள் மீது அக்கறையும் இல்லை. கருணையும் இல்லை. எப்படி மாநாடு நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விஜய்யின் மாநாடு இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும்.
    • கமல்ஹாசன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார்.

    தேனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக கொண்டு வந்ததுதான் த.வெ.க. கட்சி.

    பா.ஜ.க. பற்றி பேசுவதற்கு விஜய்க்கு எந்த அருகதையும் கிடையாது. த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும். அவர் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார். தி.மு.க.வின் A டீம்தான் விஜய்.

    தி.மு.க. எப்படி மத்திய அரசு குறித்தும், மோடி குறித்தும் அவதூறு பரப்புகிறதோ அதேமாதிரிதான் தி.மு.க. செய்ய வேண்டிய வேலையை இன்னொரு தளத்தில் செய்கிறார்.

    கடந்த காலத்தில் கடந்த தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை தயார் செய்தார்கள். இந்த தேர்தலுக்கு ஜோசப் விஜயை தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதனால் த.வெ.க. மக்களால் புறக்கணிக்கப்படும்.

    த.வெ.க. தலைவர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்தவிதத்திலும் எதிரொலிக்காது. சாதக பாதகத்தை ஏற்படுத்தாது. அவர் நிச்சயமாக இந்த தேர்தலில் 2 அல்லது 3 சதவீத ஓட்டு வாங்குவார்.

    அதற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் போய் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க.வுடன் ஐக்கியமானதோ... மானஸ்தன் அல்லவா கமல்ஹாசன். அந்த மானஸ்தன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார். எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர்.
    • இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.

    தேனி:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. மாநாடு நடந்த அதே இடத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முஸ்லிம் முன்னேற்ற மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இது வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் செயல்படும் நிகழ்வாகும். இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

    திருப்புவனத்தை சேர்ந்த கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று 'சாரிம்மா' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

    சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டபோது அனைவரும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்க தயங்குகின்றனர். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்று ஒரு தரப்பினர் செயல்படுகின்றனர்.

    அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை பாதுகாக்கும் அந்த சார் யார்? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    த.வெ.க. தலைவர் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவித்து அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இது அவர்களின் விருப்பம். அதேபோல் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதும், இணையாமல் இருப்பதும் அவர்களது விருப்பம்.

    ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறைந்த சிலைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து ஒருவர் பலியானார். இந்த கோவிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்.

    இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் அரசியல் கோமாளி என விமர்சித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவர்கள் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பவர்.

    சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. இந்த கோவில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்துள்ளது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

    இதை அறியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார்.

    மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமைமிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது.
    • தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை :

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி உள்ளோம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது. லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி தோள் கொடுத்து செயல்படும்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கே வழங்குவதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது. அப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்.அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
    • குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.

    அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
    • வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.

    இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.

    அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.

    பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கோவை:

    கோபிசெட்டிபாளையம் அருகே 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

    தடையையும் மீறி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கோவையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை போலீசார் பீளமேடு பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது.
    • ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு முதல் கட்ட தேர்தலாக நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா நாடு வல்லரசாக வேண்டும். தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் திராவிட மாடல் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வினரின் சுவர் விளம்பரங்கள் குறி வைத்து அகற்றப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றவில்லை. ஆளும் கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.


    ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தமிழகத்தில் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் உள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கோர்ட்டு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது மேல்முறையீடு செய்து அதன் அடிப்படையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொன்முடியை அமைச்சராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. அரசு ஜனநாயகத்தை அழித்து பணநாயகமாக மாற்ற முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    போலீஸ் துறை தி.மு.க.வின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. எனவே துணை ராணுவம் மற்றும் ராணுவத்தை கொண்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் சட்டசபையை சஸ்பெண்டு செய்து கவர்னர் கட்டுப்பாட்டில் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி இருந்தால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.


    தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மோடி அலைவீச தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெரும். மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட பா.ஜ.க. அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி இருப்பதாக கூறுகிறார்கள்.

    கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு குளறுபடியும் அவர்களுக்கு தெரியவில்லையா. பாரத் ஜோடா யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்து. தற்போது அந்த கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் மட்டுமே உள்ளது. கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி ஒரு மூழ்கிய கப்பல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
    • மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை அசோக்நகர் பெண்கள் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் அசோக் நகர் பள்ளிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். காலை 10.30 மணியளவில் அர்ஜூன் சம்பத் அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்றார்.

    ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளிக்கூட வாசலில் வைத்து அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணுவை பயங்கரவாதியை போல கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் நடைபெறும் உபதேசங்களை யாரும் கண்டு கொள்வது இல்லை.

    ஆனால் திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    அசோக்நகர் பள்ளி கல்வியில் சிறந்த பள்ளியாகும். அந்த பள்ளியின் புகழை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சில தனியார் பள்ளிகள் திட்டம் தீட்டியுள்ளன. மகா விஷ்ணு கைது நடவடிக்கையில் சதி நடந்து உள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

    அசோக் நகர் பள்ளிக்கு சென்று நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டறியலாம் என்பதற்காகவே சென்றேன். ஆனால் உள்ளே செல்வதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் திரும்பி வந்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    • வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.
    • இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    கனடாவில் இந்து கோவிலுக்குள் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போராட்டம் நடத்த இருந்தார்.

    இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட இருந்தது.

    இந்நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு முன்பே அர்ஜூன் சம்பத் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக, கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.

    இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×